பொன்னொளிர் மேனி மின்னிய வாறு
முன்னொரு யுகத்தில் திகழ்ந் தானை;
பின்னொரு காலம் நெருப்பாய் நின்று
பிழைகளை எல்லாம் எரித் தானை;
அன்னை உண்ணாமுலையொடு இன்று
அண்ணாமலை யாய் ஒளிர் வானை
இன்றெமைத் தடுத்துப் பிறவியை அறுக்க
இப்பொழுதே நாம் பணி வோமே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
17.11.2013
No comments:
Post a Comment