Sunday, June 30, 2013

அவதூறு: ஒரு அபத்தமான விளக்கம்!


அறிவார்ந்த நண்பர்களே,
நான் இதுவரை தனிப்பட்ட எந்த ஒருவர் மீதும் தனி விமர்சனத்தை வைத்துப்
பதிவுகள் இட்டதில்லை.

முகநூலில் நன்கு எழுதத்தெரிந்த நண்பர்கள்கூட, சில விஷயங்களைக் கிளறி, சில பத்திரிகையாளர்கள், சில எழுத்தாளர்கள் என்று  தனிப்பட்ட சிலரைக் குறிப்பிட்டு எழுதி விமர்சன யுத்தங்களை நடத்தி வருகிறார்கள்.  

'விடாது கருப்புஎன்பதுபோல் விடாது மாற்றி மாற்றிk குறிப்பிட்ட சிலரை மையமாக்கி வார்த்தைகளால் வறுத்தெடுக்கின்ற பதிவுகளைப் படித்து உச்சுக் கொட்டவும் உற்சாகப் படுத்தவும் தட்டிக் கொடுத்து விசில் அடிக்கவும் ஒரு பெரும் வாசகர் வட்டம் இருப்பதையும் காண்கின்றேன்.

எனினும் தமிழை இந்த அளவுக்கு சிலருடைய தரம் கெட்ட விஷயங்களைத் தொட்டுப் பேசப் பயன் படுத்துவதை நான் ரசிக்கவில்லைதான்.

ரசிக்கவில்லை என்பதால் விமர்சனத்துக்கு உள்ளாகும் நண்பர்கள் அல்லது நண்பிகள் குறித்து எனது விசனத்தையும் நாம் கொள்ளக்கூடாது என்பதாகிவிடாது; அப்படி விசனப்பட்டு நாம் குறிப்பிடவேண்டிய தருணம் இது என நினைக்கிறேன்.

முதலில்-
தனிப்பட்டவர்களைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சனச் சாட்டைகளை வீசும் நண்பர்கள் அளவுக்கு அதிகமாகவே அவர்களையும் அவர்கள் சிந்தனை மற்றும் செயல்பாடுகளையும்  இங்கு அறிமுகப்படுத்தி விட்டனர். அவர்களைப்பிரபலமானவர்கள்’ என்ற மாயையும் உருவாக்கி விட்டனர்.

விமர்சனத்துக்கு ஆளானவர்களில், சில எழுத்தாளர்களோ இவர்களுக்குப் பதில்சொல்வதாக எண்ணிக் கொண்டு அபத்தம் மிகுந்த கருத்துக்களைக் கொஞ்சமும் லஜ்ஜையின்றி ஊடகங்களிலும் இங்கும் வெளியிட்டுப் படிக்கின்றவர்களைக் கடுப்பேற்றி வருகிறார்கள்.

தமிழையும் ஒழுங்காக எழுதத் தெரியவில்லை;சொல்லும் கருத்துக்களையும் ஆணித்தரமாகச் சொல்லத் தெரியவில்லை. அப்படி இருந்தும் சில ஏடுகளும் ஊடகங்களும் இவர்களுடைய இருட்டுக் கருத்துக்களுக்கு வெட்கமின்றி விளக்குப் பிடித்துக் கொண்டு வருகின்றன.

இதில் கடுமையான விமர்சனக் காயங்களில் வலி கண்டுள்ள பெண்மணி ஒருவர் பதித்துள்ளஅவதூறு என்றால் என்ன?’ என்று சொல்லும் பதிவைப் படித்து என் மனம் திடுக்கிட்டது.

”பொறுப்புள்ள பத்திரிகையில் பணியாற்றி விட்டு இப்பொழுதும் மதிப்பான பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் அந்த அம்மணியின் வாதத்திறன் இதுதானா?” என்று விக்கித்துப் போனது மனது.  

அபத்தமும் இன வெறியும் மிகுந்த அவரது பதிவில் குளறுபடிகளும் கோளாறும் ஏராளம். காற்றுடைந்துபோன பலூன் போல் அவரது உள்ளம் சுருங்கிப் போய் இருப்பதை அவரது சாரமற்ற பதிவு சான்று கூறுகிறது.

நான்  எந்தப் பெண்மணியைக் குறிப்பிடுகிறேன் என்பதை பெயர் சொல்லி இங்கு குறிப்பிட்டுவிட்டால் இந்தப் பதிவின் சுவாரஸ்யம் குன்றிப்போய் விடும்.

நீங்களாகத் தெரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்:

தன்மீது தரம்கெட்ட குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து சிலர் எழுதி  அவதூறு பரப்புகிறார்கள்உண்மை சிறிதும் இல்லாத அந்தக் குற்றச் சாட்டுக்களை நான் நிராகரிக்கின்றேன்; அப்படித் தொடர்ந்து எனது பெயரைக் குறிப்பிட்டு சிலர் எழுதும் அவதூறுகள் என்னை மனதளவில் பாதிக்கக்கூடியவை என்பதால் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். ஏதோ ஒரு உள் நோக்கத்தில் அவ்வாறு அவதூறு செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை கிடைக்கும்வரை என்மீதான அவதூறுகளை இங்குள்ள நண்பர்கள் யாரும் நம்ப வேண்டாம்

என்று-

அவர் எழுதியிருந்தால் உண்மையிலேயே அவர்மீது அனுதாபமும் பிறக்கும்; அவருடைய மதிப்பும் நிலைத்திருக்கும்.

மாறாக-

அந்தப் பெண்மணி எழுதுகிறார் பாருங்கள்; சிந்திக்கவே நெஞ்சம் கூசுகிறது:

// ’பாலியல் அவதூறு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அவன் இவளோடு போனான்...அவள் இவனோடு போனாள் ; கூத்தடித்தாள்’ என்று எழுதுவதே பாலியல் அவதூறுதான். சில கிரிமினல் புத்தி உடையவர்கள் எழுதுவது முழுதும் பொய் புரட்டு என்பது முதல் பிரச்சனை. இரண்டாவது ஒரு வாதத்துக்கு அப்படியே யாரோ யாருடனோ போனார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அதைக் கேட்க இவர்கள் யார்? அது அந்த தனிப்பட்ட இருவர் சம்பந்தப்பட்டது. நடுவில் இவங்க யாருங்க நாட்டாமை? ஒருவர் இன்னொருவருடன் உறவில் இருக்கிறார் என்று கூறுவதே அநாகரிகம். அதுவே ஒரு அவதூறுதான். அதில் உண்மையிருந்தாலும். ஆக அவதூறு என்றால் என்னவென்றால் அடுத்தவரின் அந்தரங்கம் குறித்துப் பேசுவது, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது. அவர் குடிப்பார். பெண்களுடன் இருந்தார், கஞ்சா அடித்தார், உல்லாசமாக இருந்தார். சொகுசு பங்களாவுக்குச் சென்றார், தண்ணி அடித்தார் என்று ஒருவன் எழுதினால், அது அவதூறுதான் அது உண்மையாகவே இருந்தாலும் கூட. இவங்க என்ன கலாசார காவலர்களா? எந்த உரிமையில கேள்வி வருது? அது அப்படி நடந்தாலும் தனிப்பட்ட விசயம். ஆகவே உண்மையாக இருந்தாலும் தவறுதான். பொய்யாக எழுதினாலும் தவறுதான். இரண்டுமே அவதூறுதான். இதுதான் பாலியல் அவதூறின் அடிப்படை//

அந்தோ,….

சொல்லப்பட்ட குற்ற நடத்தைகள் உண்மை என்றாலும்கூட- அவை நிகழ்ந்திருந்தாலும் கூடஉண்மையாக இருந்தாலும் தவறுதான். பொய்யாக எழுதினாலும் தவறுதான். இரண்டுமே அவதூறுதான். இதுதான் பாலியல் அவதூறின் அடிப்படை
என்று தன்னிலை விளக்கம் அளித்து, ’அய்யோ பாவம்’ என்று அவர்மீது ஓரளவு அனுதாபம் கொண்டிருந்த நம்மை எல்லாம்கூட தலைகுனிய வைத்து விட்டாரே இந்த அம்மணி.?

பொறுப்புள்ள பத்திரிகை ஊடகங்களில் பணியாற்றும் இவர்,சமூகக் குற்றங்களை எப்படித் துணிவுடன் எதிர்த்து எழுத முடியும்?

பத்திரிகையாளர் என்பதற்கு இனி என்ன மாதிரியான தகுதிகளை இவரிடமிருந்து பண்பட்ட சமூகம் எதிர்பார்க்க முடியும்?

அதற்கும் அதிர்ச்சி தரும் விளக்கத்தை அளிப்பாரோ?

மிகவும் வருத்தப் படுகிறேன்!
இப்படிப்பட்ட  சிந்தையுள்ளவர்தான் பொறுப்புள்ள பத்திரிகையாளர்என்று மதித்து இருந்த காலத்தை எண்ணி.....

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.6.2013

Monday, June 24, 2013

எச்சரிக்கை: கபடக் காவிகள்!

அறிவார்ந்த நண்பர்களே,

உலகில் மனித வாழ்வின் செம்மையைச் சிறப்பிக்கும் விதமாக வேதாந்த விஷயங்களையும் சித்தாந்த ரகசியங்களையும் முன் நின்று உரைத்த மண் பாரதம் என்பதில் அறிவுடையோர் எவருக்கும் இரண்டு விதக் கருத்துக்கள் இருக்க முடியாது.

இந்திய ரிஷிகளால் அடையாளம் காட்டப்பட்ட வேதங்களும் அவற்றின் மெய்ப் பொருளும் அனாதிக் காலம் தொட்டே மகா முனிவர்களாலும் ரிஷிபுங்கவர்களாலும் பாரம்பரியமாக இங்கு அவர்தம் வழி நின்ற சீடர்களுக்கு உபதேசிக்கப் பட்டவை.

ரிஷிகளின் பாதார விந்தங்களைப் பற்றியே மாமன்னர்களும் அவர்தம் வழித் தோன்றல்களும் ஆட்சி புரிந்து மானுட சமுதாயத்தை நெறிப்படுத்தியும் முறைபடுத்தியும் ஆண்டு வந்தனர்.

எனவேதான்,அரசர்களை ‘இறைவனின் பிரதிநிதியாக’ மக்கள் வணங்கி நின்று, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குப் பயந்தும் பணிந்தும் தெளிந்தும் சமூக ஒற்றுமையோடும் தேசப் பற்றோடும் ஒழுகி வந்தனர்.

ஆலயம் என்பது மக்களின் ஆன்மா லயம் கொண்ட இடம் எனத் தெளிந்து  ஊர்கள் தோறும் ஆலயங்களைக் கட்டி முறை தவறாது வழிபடுகள் நடத்தி,திரு விழாக்களையும் கொண்டாடி வந்தனர்.

முற்றும் தெளிந்து பற்றற வாழ்வதற்குரிய வழியில் ஆன்மா லயம் கொள்ளும்போதுதான் இறைநிழலில் பேரின்ப நிலையை அடைய முடியும் என்பதையும் நம் முன்னோர் தெளிந்து,அதனை அடைகின்ற மார்க்கமாக ‘யோகாப்பியாசத்தை நம்மவர்களுக்குப் போதிக்கும் குரு குல முறைகளை மேம்படுத்தினர்.

நமது ரிஷிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளில் வேத நெறிகளில் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.

மாணாக்கர்களுக்கும் மானுடர்க்கும் போதிக்கும் யோக முறைகளில் தேர்ந்தவராக-முன்னவராகப்  பதஞ்சலி முனிவர் கருதப்படுகிறார்.

பல்லாயிரம்  ஆண்டுகளாக அவரது யோக சூத்திரங்களைப் பின் பற்றியே நம் முன்னோரான ரிஷிகள் பலரும் யோக நெறிகளை ஆய்ந்தும் அவற்றில் தோய்ந்தும் பல்வேறு உடற்கூற்று ரகசியங்களைக் காலம் தோறும் கற்பித்து வந்தனர்.

ஆனால் நவீன உலகில் இந்த யோகப் பயிற்சியில் மனிதன் குருடனாகி விட்ட படியால், அவனை தட்டி எழுப்பி முக்தி நிலைக்கு வழி காட்டுகிறேன்’என்று காவியைக் கட்டிக் கொண்டு பல்வேறு போலிச் சாமியார்கள் புற்றீசல் போலப் புறப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் பின்னே, ஆறறிவு படைத்த மானுடர்கள் ஐந்தறிவுப் பிராணிகளாய் ஆட்டு மந்தைகள்போல்   வரிசை கட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள்.

குருதட்சிணை என்னும் பெயரால் கோடி கோடியாகப் பணத்தைச் சுருட்டும் இடங்களாக இன்று நம் நாட்டு யோகப் பயிற்சிப் பீடங்கள் உருவாகிக் கொண்டுள்ளன.

பத்து பதினைந்து மேலை நாட்டு பையத்தியக்காரர்களைத் தம்மிடம் யோகா கற்றுக் கொள்கின்ற சீடர்களை எனக் காட்டிக் கொண்டு பல்லாயிரம் இந்தியப் பையித்தியங்களைத் தங்களுக்கான  நிதியை ஈட்டித்தருகின்ற காமதேனுக்களாக்கி விடுகின்றனர் இந்தக் காவிகள்.

இந்தக் காவிகளுக்கு யாரேனும் ஒரு அரசியல் அதிகாரப் பீடாதிபதி ரகசிய சீடராகி விடுவதும் அவர்களைக் கொண்டு அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு பல்வேறு வகையிலும் சட்டத்துக்கும் சத்தியத்துக்கும் புறம்பான வழிகளில் யோகா பீடங்கள் என்று கான்கிரீட் கட்டிடங்களை எழுப்பி, அதில் கலை வண்ணம் மிளிரும் கடவுளரின் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உன்மத்தம் பிடித்த ஆயிரக் கணக்கானோர் இந்தக் காவிகள் நடத்தும் யோகாக் கண்காட்சித் திருவிழாக்களில் பர’வச’ நிலை அடைந்து ஆடி பாடிக் கூத்தடிக்கின்றார்கள். இவர்களின் பின்னணியில் ஏசுவையும் இணையற்ர துறவிகளையும் தூக்கி அடிக்கும் ‘தெய்வீகத் தோற்றத்தில்’இந்தக் கபடக் காவிகள்!

இந்த இழிநிலையின்  உச்சமாய் நித்தியானந்தாக்கள் வேஷம் களைந்தும் ‘வேதாளம் தன் போக்கில் வேப்ப மரம் ஏறிக் கொண்ட கதையானது போல், மிச்சமுள்ள காவியாகிய இந்த வேதாளங்களும் இப்படியேதான் தங்கள் கடைகளை விரித்தும் பரப்பியும் வியாபாரம் செய்து வருகின்றன.

இதெல்லாம் எந்த வகையில் இறை நெறித்தொண்டு பரப்பும் செயலென்று கேட்டால்;கேட்கின்றவனை பைத்தியம் என்கின்றனர்,இந்தக் காவிகளின் கடைக் கோடிகள்.

பாவம், இவர்களின்பால் நாம் அனுதாபம் கொள்வதை விட வேறு என்ன செய்ய முடியும் இப்போதைக்கு.

நான் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களில் எவரேனும் ஒருவர் பதில் சொன்னால் போதும்; அவர்களுக்கு இறைநாட்டத்தில் எத்தகைய தேடல் இருக்கிறது? என்பதைத் தெளிவாக்கத் தயராக இருக்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில்-
‘யோக நிலை என்பது மனதின் ஆழ்நிலைப் பயிற்சியே; அது ஒரு விஞ்ஞானம் என்பதை விட மெய்ஞ்ஞானம்’ என்பதை ஏற்கிறவன் நான்.

யோக நிலையைத் தேடுகின்ற மனிதனுக்கு கான்கிரீட் கட்டிடங்களும் செயற்கைக் கலை வண்ணத் தோற்றங்களும் ஆடம்பரமான சூழல்களும் வழி காட்டுகின்றன’ என்ற மாயைக்கு எதிராகச் சிந்திக்கும் அறிவை யாசிப்பதே மெய்யறிவின் வித்து.

அதற்கு மாறாகப் பொய்யறிவின் துணைகொண்டு உயர்ந்த யோக நெறிக்கான பீடம் ‘இங்குதான் இருக்கிறது’ என்று இந்தக் காவிகள் ஒவ்வொருவரும்  ஒவ்வொருவகையான மடங்களைக் கட்டிக் கொண்டு,கடை விரித்து
வைத்துக் கொண்டு உலகிலேயே அதிக சீடர்களையும் வெளிநாடுகளில் அதிகக் கிளகளையும் கொண்ட மகா யோக பீடம் எங்களுடையதுதான்’
என்று பறை சாற்றி வருவதும் இதற்கென்றே பேசும் பிள்ளைகளை
வைத்துக் கொள்வதும் எழுதும் ஏந்தல்களை ஏந்திக் கொண்டிருப்பதும்  விளம்பர வணிகமே  அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

மரம் பழுத்தால் வவ்வாலை  ‘வா’ வென்று கூவி’ விருந்தழைப்பார் யாருமிங்குண்டோ?

மரம் பழுத்தால் வவ்வால்கள் தாமே தேடி வரும்;ஞானி பழுத்தால் சீடர்கள் தேடி வருவர்.

ஆனால் நம் நாட்டு நவீன ஞானிகளோ வவ்வாலை அல்ல;காக்கைக் கூட்டங்களை வாருங்கள்;வாருங்கள் என இரு கைகளையும் விரித்து, இறைஞ்சிக் கொண்டுள்ளனர்.

எதற்கு?

தங்கள் கபட வேடத்துக்குச் சரியான கபோதிச் சீடர்களைப் பெருக்குவதற்காக!

இவர்களிடம் ஞானம் படும்பாடு இருக்கிறதே,அதுதான் கலியின் கூத்து!

நண்பர்களே,

நமது இந்தியப் பாரம்பரியத்தின் எதிரிகள் அந்நிய நாட்டு மதவாதிகள் அல்லர்; உள்நாட்டுக் காவிகள்தான்.

இதைப்பற்றி நாம் நிறையச் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமக்குச் சுய தரிசனம் மிக மிகத் தேவை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.6.2013

Tuesday, June 18, 2013

தாலியை அறுக்கச் சொல்லும் மூடனே!



ண்பர்களே,
தமிழ்ப் பண்பாட்டின் அடிவேரை -அதாவது தாலியை அறுத்தெறிந்து அறிவு மிக்க பெண்களாய் ஆகும்படி நமது தமிழ்நாட்டில் ’கவிஞர்-எழுத்தாளர்-பதிப்பாளர்’என்றெல்லாம் நமது ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் ‘மனுஷ்ய புத்திரன்’ எனும் பேர்வழி ’தெரு’வாய் மலர்ந்து எழுதி இருக்கிறார்.

’தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?’வென்று அறிந்திடாத இந்த மூட எழுத்தாளர், எப்படி? ஏன் பண்பாட்டிலக்கிய  முடவரானார்? என்பது நமக்குத் தெரியாது.

ஆனாலும் அச்சில் ஏற்றப்பட்டுட்டுள்ள இவரது கருத்து, நமது தமிழ்க் கலாச்சாரத்தின் பண்பாட்டின் மீது புகுத்தப்படும் ‘யுத்தம் என்பதால் நாம் அது கண்டு ஒதுங்கி இருக்க முடியாது.; ஒதுங்கிக் கொள்வது என்பது
ஒப்புக் கொள்வது என்றாகி விடும்.

கண்டிப்பதும் கழிசடைக் கருத்துக்களைத் தண்டிப்பதும் நமது கடமை.

இதோ:


தாலியை அறுக்கச் சொல்லும் மூடனே!
------------------------------------------------------------


தமிழனென்று தலைநி மிர்ந்து வாழுகின்ற கூட்டமே!
தமிழனுக்குப் பெருமையான தகுதி என்ன தெரியுமா?
தமிழர்தம் இல்லறத்தின் சாட்சியான தாலிதான்;இந்தத் தலைமுறைகள்தோறும்இங்கு தலைமைச் சின்னம் என்பது!

கற்புடைய மாதருக்கும் கருத்துடைய ஆண்களுக்கும்
கட்டுப்பாடு கூட்டி,இந்த உலகை வியக்கச் செய்ததும்
பொற்புடைய வாழ்வில் நமது பரம்பரையைக் காப்பதும்
’பொற்றாலி’ என்னும் இந்த மங்கலநாண் அல்லவோ?

தாலிதானே பெண்களுக்கு வேலி என்று சொல்கிறோம்?
தாலியில்லாப் பெண்களைத்தான்மூளிஎன்றும் காண்கிறோம்;
தாலியதன் பெருமைகளைத் தாங்கவொண்ணாப் பயல்களின்
தகுதியிங்கு என்ன வென்று தமிழில் உரைக்க வேண்டுமோ?

‘எப்பொழுது தாலிகளைக் கழற்றி வீசி எறிவளோ?
அப்பொழுது தான்அறிவு வளர்ந்ததென்று’ ஆகுமாம்?
இப்படியோர் இழுக்கன் இந்த நாட்டில் எழுதுகின்றனன்;
அப்படியே அழுக்கர் சிலர் ஆதரித்து மகிழ்கிறார்!

அப்பன்-அம்மை வாழ்ந்த வாழ்வு அற்புதமாய் இருக்கத்தான்;
அகிலமெல்லாம் தமிழர்களின் தனிச் சிறப்பை மதிக்குது;
தப்பில்லாத தரம் மிகுந்த கற்பு வாழ்வின் அறநெறி
கட்டிக் கொண்ட தாலிக்குத்தான் ஒட்டியுள்ள அற்புதம்.

அதை அறுத்து எடுத்து வீசும் துணிவு பெற்ற பெண்களை
அறிவுமிக்க மாதர் என்று சொல்லுகின்ற மூடனே!
எதை எடுத்தும் எழுதுவது இயலும் எனில், சொல்லடா
இந்த நாட்டு அப்பனுக்குப் பிறந்தவன் நீ இல்லையா?

கேட்பதற்கு ஆள் இல்லாத கேனப்பயல் எழுதினால்
கேடுகெட்டு நாமதனைக் கேட்டு அமைதி கொள்வதா?
தீட்டிடுவீர் எழுத்து என்னும் கூர் மிகுந்த ஆயுதம்;
திரட்டி அதைக் குவித்திடுவீர்; பாதகர்கள் அஞ்சவே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.6.2013