Thursday, May 29, 2014

அவலமிக்க அரசியல் சாசன விதி எண்:370 (பகுதி-1)



றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்து 127 கோடி இந்தியர்களின் மரியாதையைக் காப்பாற்றும் ஆட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டார் திரு.நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்கள்.

இந்தியர்கள்,தங்களது பன்முகக் கலாச்சாரத்திலும் இனம் மொழி, சமயம் என்று பல்வேறு வகையான நிலைப்பாடுகளிலும் வேறுபட்டிருந்தாலும் ‘அனைவரும் இந்தியர்’ என்பதில் மாறாத பெருமிதம் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா,விடுதலை பெற்றபோது அதன் மக்கள் தொகை ஏறத்தாழ 60 கோடி. இந்த 66 ஆண்டுகளில் இரட்டிப்புப் பெருக்கம். அதாவது 127 கோடி.
இந்தியா சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 55 ஆண்டுகள் ஒரே பரம்பரையினரின் ஆட்சியில் அடிமைப்பட்டுப் போயிருந்த நிலையில், இந்த 127 கோடி இந்தியரின் இரண்டாவது சுதந்திர வெற்றியாக நரேந்திரமோதி கிடைத்திருக்கிறார்.

இந்தியா,தனது பாரம்பரியச் சிறப்பை அடைந்து உலக அரங்கில் தன்னிகரில்லாத் தலைமைத் தகுதிகளோடு, தலை நிமிர்ந்திருக்கும் காலம் நிச்சயமாகத் தளிர்க்கத் தொடங்கி இருக்கிறது.

ஆம்! இந்திய வரலாற்றில் மோதிக்குமுன் (மோ.மு.) என்றும் மோதியின் வருகைக்குப்பின் (மோ.பி) என்றும் எழுதப்படும் புதிய சரித்திரம் தொடங்கி இருக்கிறது.

அண்ணல் காந்திஜியின் தலைமையில் இந்தியா பெற்ற சுதந்திரம், உலக வரலாற்றில் தனித்தன்மை மிக்கது. அன்றைய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெருமைக்குரிய தலைவர்கள்  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தோன்றியவர்களாக இருந்தபோதும் அவர்கள் அனைவரும் ஒரே சக்தியின் கீழ் ஒன்றிணைந்து ஒருமுகமாக அந்த சக்தியின் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு சுதந்திரப் போராட்டங்களில் தியாக உணர்வோடு ஈடுபட்டனர்.

அந்த ஒரே சக்தி அண்ணல் காந்திதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

’இந்தியா’ என்ற தேசத்தின் மகோன்னத நிலையை உலகிற்குக் காட்டிய மகாத்மாவை நாட்டுக்கு ஈன்ற அதே குஜராத் மண்தான் இன்று பாழ்பட்டுப்போயிருக்கும் பாரத தேசத்தை நிமிர்த்தி நேராக்கி, கூராக்கும் வல்லமை கொண்ட நரேந்திர மோதியை நமக்குத் தந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற கையோடு காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார், காந்திஜி. ‘சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி’ என்ற உரிமையில் அது ஆட்சி பீடம் ஏறுமாயின் ’விரைவில் இந்த தேசத்தைச் சுரண்டி இதன் பெருமையைச் சீர் குலைத்து விடும்’ என்பது அந்த மகாத்மாவின் தீர்க்க தரிசனப் பார்வைக்குத் தெரிந்து போயிருந்தது.

குஜராத் மண்ணில் அவதரித்த அண்ணல் காந்தியின் அறிவுரைக்கு மாறாக, கலையாது இருந்த காங்கிரஸை, 67 ஆண்டுகளுக்குப் பின், இப்போது நிலைகுலையச் செய்து, தானாகவே தொலைந்து போகும்படி வெற்றிவாகை சூடி இருக்கிறார் அதே காந்தி மண்ணில் தோன்றிய நரேந்திர மோதி. 

அது மட்டுமா? 
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருக்க வேண்டியவர் இதே குஜராத் மண் ஈன்ற ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல்தான். 
ஆனால் பண்டித நேரு, தனது செல்வாக்கினாலும் திட்டமிட்ட குயுக்தி வழிகளிலும் பிரதமராகி  கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு பரம்பரை ஆட்சிக்கு வழி வகுத்து விட்டார்.

ஏறத் தாழ  67 ஆண்டுகளுக்குப் பின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் வாரிசுபோல்,அவர் அடையத் தவறிய பிரதமர் பதவிக்கு இன்று குஜராத்திலிருந்து  நரேந்திர மோதி வந்திருக்கிறார்.

குஜராத் மண்ணுக்குத்தான் எப்பேர்ப்பட்ட பெருமை?

பட்டேல் விரும்பிய வலிமை மிக்க இந்தியாவை நரேந்திரமோதிதான் நனவாக்கப் போகிறார்.

சுதந்திரம் பெற்ற பிறகும் தனித் தனி ராஜ்யங்களாக இருந்து இந்தியாவுடன் இணைய மறுத்த  சமஸ்தானங்களின் மன்னர்களையெல்லாம் பணிய வைத்து, இமயம் முதல் கன்னியாகுமரிவரை ’எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு’ என்று ஆடிப்பாடி மகிழ வைக்கும் மகாகவி பாரதியின் கனவை நினைவாக்கியவர்தான் நம் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல்.

எனினும்.இந்தியத் திருநாட்டில்  ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’என்ற நீதியின் உயர் மாண்பை நிலை  நிறுத்துவதற்குக் காஷ்மீர் மட்டும்  இன்றுவரை தடையாக இருக்கிறது.

இதற்குக் காரணம், இன்று அதிக அளவில் விவாதப் பொருள் ஆக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் 370 என்ற பிரிவுதான்.

இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நியதியைத் தலைகுனிய வைத்து. ‘காஷ்மீருக்கு மட்டும் விஷேச உரிமையாக இந்திய அரசியல் சாசனத்தின் இந்த 370 ஆவது பிரிவை உருவாக்கி அதை காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கச் செய்தவர் பிரதமர் நேரு..

இந்திய மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கி காஷ்மீரிகளை முதல்தர மக்கள் போல் ஆக்கிய  பண்டித நேருவின் படுபாதக அரசியல் இன்று மறு பரிசீலனைக்கு உட்பட்டதுதான்.

காஷ்மீருக்குத் ‘ தனி அந்தஸ்து’ என்பது வல்லபாய் பட்டேலின் எண்ணங்களுக்கு நேர் முரணாணது.

அது பண்டித நேருவின் சுயநலத்தால் உருவாக்கப்பட்ட மோசடி மிக்க திட்டம் இது. அத்திட்டத்தை அரசியல் சாசனப்படி நிறைவேற்றவேதான் இந்த 370 என்ற விதியை நேரு பார்லிமெண்டில் நிறைவேற்றச் செய்திருப்பதன்  பின்னணியில் நேருவின் குடும்பத்துக்கு மிகப்பெரும் சுயநலம் இருந்தது.

காஷ்மீருக்கென்று 370 என்ற சிறப்பு விதி ஏற்படுத்தப்பட்டதன் பின்னணி:

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் நிம்மதியாக பதவில் அமர்ந்து  ஆட்சி செய்ய நேருவால் முடியவில்லை. இந்தியா முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை அரசர்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தனர்.
உள்துறை அமைச்சராக இருந்து இந்த  சமஸ்தானங்களையெல்லாம் இந்தியாவுடன் இணைக்கும் பெரும் பணியினை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் செய்து வந்தார்.

ஏறத்தாழ எல்லா சமஸ்தானங்களும்  வல்லபாய் பட்டேல் அவர்களின் எண்ணத்துக்குக் கட்டுப்பட்டு இந்தியாவில் இணந்த போதும்
அவரது பணி நிறைவு பெறுவதற்கு ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானமும்  காஷ்மீரும் முட்டுக் கட்டை போட்டன.

ஹைதரபாத்தை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த நிஜாம்  இந்தியாவுடன் தனது மாநிலம் இணைய முடியாது என்று அறிவித்ததுடன்  பாகிஸ்தானுடன் இணைக்கப் போவதாய்ச் சொல்லவிட்டார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ உதவியைக் கோரி இருந்தார்.
ஆனால் போருக்கு முன்னமே, பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்துவிட்டு மிகத் துணிவோடு நிஜாமை நிராயுதபாணியாக்கிப் பணிய வைத்த வல்லபாய்படேலின்  வீரமும் சாணக்கியத் தனமும் அப்போது இந்தியாவையே நிமிர வைத்தது.

சுதந்திர இந்தியாவின் சிற்பியான வல்லபாய் பட்டேலின் முயற்சி இல்லாமல் போயிருந்தால்அன்று கிழக்குப்பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதுபோல் இன்றைய ஹைதராபத்தும் அதன் சுற்றுப் பகுதிகளும் இந்தியாவுக்குள் ’தெற்குப் பாகிஸ்தான்’ என்று ஏற்பட்டிருக்கும்.


காஷ்மீர் பிரச்சினை இதற்கு மாறுபட்டது. 
நேரு பிரதமரான சூழ்நிலையில் அன்றிருந்த அரசியல் குழப்பங்களும் பாகிஸ்தானின் சதியும் அவரை நிம்மதியாக ஆள முடியாதபடிச் செய்து காஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராட்டங்கள் தூண்டப்பட்டன.
அதன்மூலம் ‘காஷ்மீரிகளின் தனித் தன்மை’ என்ற இனப் பாகுபாடும் மதம் சார்ந்த உணர்வுகளும் அங்கே கொழுந்துவிட்டு எரிந்தன;எரியச் செய்யப்பட்டன.

அப்போதுதான் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருந்ததாலும் பாகிஸ்தானுக்கு இயற்கையான பங்காளிப் பகை இந்தியா மீது இருந்ததாலும்  காஷ்மீர் மக்களில் பெரும்பாலோர் இஸ்லாம் மதம் சார்ந்தவர்களாக இருந்ததாலும் பாகிஸ்தான் காஷ்மீர் போராட்டத்துக்குப்  பின்புலமாக இருந்து  இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை காஷ்மீர் மக்கள் எடுக்க வேண்டும்’ என்ற அதன் சதி செயல் வெற்றி பெறும் கட்டத்தில் இருந்தது.
பாகிஸ்தானின் பங்காளிப் பகைக்கு விலை போனவர்தான் காஷ்மீர் சிங்கம் என்று பேரெடுத்திருந்த  ஷேக் அப்துல்லா.  அவர்தான் ’காஷ்மீரைத்  தனிநாடாக  அறிவிக்க’க் கோரி, போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார், அவர் இந்தியாவுக்கு எதிராகவே நடந்து கொண்டிருந்தார்.

நேரு மீது அவருக்குத் தனிப்பட்டமுறையில்  பொறாமையும்  நேருவின் குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்கும்  வெளியில் விளம்பரப்படுத்தப்படாது இருந்த தொப்புள் கொடி உறவினால் வந்த உட்பகையும்தான் இதற்குக் காரணம் என்பது பலருக்கும் விளங்கிக் கொள்ள முடியாது.

இதை ஆராய வேண்டுமானால் மோதிலால் நேருவின் குடும்பம் காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து  பலநூறு மைல்களுக்குக் கிழக்கே இருந்த அலகாபாத் நகருக்கு  வந்து குடியேறிய பின்னணியைத்தான் பேச வேண்டும்.
பண்டித நேருவின் பரம்பரை காஷ்மீர் பண்டிட் வகையைச் சேர்ந்தது.
காஷ்மீரை அதன் அரசர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்தபோதும் அதற்கு எதிராக ’ காஷ்மீரை காஷ்மீரிகளே ஆள்வதற்குத் தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என்ற போராட்டத்தை ஷேக் அப்துல்லா தலைமை ஏற்று நடத்தினார்.
ஷேக் அப்துல்லா தனி நாடு கேட்டு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் போராட்டத்தை அடக்கி ’ராணுவத்தின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன்  இணைப்பது’ என்பது வல்லபாய் பட்டேலின் திட்டம். ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என்பது நேருவின் முடிவு. ’ஷேக் அப்துல்லாவின் தலைமையில் நடப்பது ‘காஷ்மீர் மக்களின் சுதந்திர உரிமைப்போர்’ என்ற மிகத்தவறான அணுகு முறையில், காஷ்மீர் பிரச்சினைக்கு உயிர் கொடுத்தவர் பண்டித நேருதான்.
பண்டித நேருவின் அணுகுமுறையும் ராஜ தந்திரமும் அடிப்படையிலேயே தவறானவை என்பதில் வல்லபாய் பட்டேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால்,என்ன நடந்தது?
நேருவின் மேதாவித்தனத்தாலும் தவறான கணிப்பினாலும் இந்தியா  உடனடியாக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போய், நிதானம் காட்டிவந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்து பாதிக் காஷ்மீரைக் கைவசப்படுத்திக் கொண்டது.


காஷ்மீர் என்பது ஒரு தனித் தேசமாய் இந்து மன்னர்களால்  மகாராஜா ஹரிசிங்கின் முன்னோர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாக அரசாளப்பட்டு வந்த மாநிலம்.

வேதம் அறிந்த பண்டிதர்கள் நிறைந்த மண். காஷ்மீர் பண்டிட்களின் ஆதிக்கமும் ஆன்மீகச் சிந்தனைகளின் செழிப்பும் நிறைந்த இம்மண்ணில் காஷ்மீர் பண்டிட்களின் வம்சா வழியினரில் பெரும்பாலோர் இஸ்லாம் பேரரசர்களின் படையெடுப்புக்குப் பின்னர் மதம் மாறியவர்கள் என்ற போதும், காஷ்மீரிகள் என்ற சுயகவுரவத்தையும் தனித் தன்மையையும் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக வாழ்ந்தவர்கள். அடிப்படையில் தங்கள் இனம், வேறு எந்த இனத்தோடும் கலப்பதை அனுமதிக்காதவர்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் பிரிவினை வாதம் தலை எடுக்கப் பாகிஸ்தான் தனது குள்ள நரித்தனத்தைக் காட்டியது. 

இதற்கேற்ப, மஹாராஜா ஹரி சிங்குக்கு எதிராக காஷ்மீரில் ஷேக் அப்துல்லா போராட்டம் நடத்தி அங்குள்ள காஷ்மீரிகளைத் தூண்டிவிட்டு காஷ்மீர் சுதந்திரப் போர் என்ற பெயரில் இந்திய எதிர்ப்புப்  போராட்டம் நடத்தினார். பாகிஸ்தான் அவருக்குப் பின்புலமாக ராணுவம் மற்றும் ரகசிய உதவிகளைச் செய்யத் தயாராகி காஷ்மீருக்குள் புகுந்தது.

வேறு வழி இல்லாமல்,ராஜா ஹரிசிங் வலிய வந்து இந்தியாவின் உதவியைக் கோரியதும்தான் தாமதம்; வல்லபாய் உடனே காஷ்மீருக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி, மீதிக் காஷ்மீரைத் தக்க வைத்தார்.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரையும் மீட்க வல்லபாய் பட்டேல் ராணுவத்தை மேலும் பயன்படுத்த விரும்பியபோதும் காந்திஜியும் நேருவும் சமாதனம் மூலம் நிலைமையைக் கையாள விரும்பியதன் விளைவே, பாதிக் காஷ்மீர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலேயே இருக்க மீதிக் காஷ்மீர் ’இந்தியாவின் ஆளுமையில் இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

காஷ்மீரை முழுமையாக மீட்க இந்தியா தனது ராணுவத்தைப் பயன்படுத்தினால் தனக்கு இருக்கும் நற்பெயர் கெட்டு, காஷ்மீரிகள் தனக்கு எதிராகத் திரும்பவிடுவார்கள்; அதனால் இப்போது இருக்கிற காஷ்மீரும் பாகிஸ்தான் பக்கம் போய் விடும் என்பது நேருவின் சுத்தச் சுயநலம் மிக்க அச்சம்.

நேருவின் உள் நோக்கம் ஷேக் அப்துல்லாவைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதுதான்.அதற்காகவே பிரதமர் நேரு, காஷ்மீரில் காலம் காலமாக வாழும் பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக ஷேக்அப்துல்லாவின் குயுக்தி அரசியலை அங்கீகரித்து அவர் தலைமையில் காஷ்மீரில் சுய ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.

அதாவது இந்திய ராணுவத்தின் முன்பு ஒரு நொடியில் சுருண்டு போகக் கூடிய காஷ்மீர் தனி நாடு கோரிக்கையாளர்களின் கொட்டத்தை நேருவின் மிதவாதக் கொள்கையானது பூதாகரமாகப் பார்த்து, அவசியமே இல்லாத ‘காஷ்மீருக்கான தனி அந்தஸ்து’ என்ற சிறப்புத்தகுதியை வழங்கி உலக ஆங்கில் தான் மிகப் பெரும் ஜனநாயகவாதிபோல் காட்டிப் பெருமை பட்டுக் கொண்டார் நேரு என்பதுதான் உண்மையிலும் உண்மை.

இவர் பதவியை அனுபவிப்பதில் மிகப்பெரும் சுயாலவாதியாகவே இருந்த வீரமற்ற விவேகி என்றால் அது பொய்யாாகாது. 1962களில் இந்தியா மீது ஆக்ரமிப்புச் செய்த சீனப் படையெடுப்பின்போதும் பண்டித நேரு மிகப்பெரும் பயந்தாங்கொள்ளியாக இருந்து போருக்குப் பதில் வெள்ளைக் கொடி காட்டி இந்தியாவின் வட கிழக்கு எல்லையில் பல்லாயிரம் சதுர மைல்கள் பரப்பளவுப் பகுதியைத் தாரைவார்த்த கோழை என்பதை போர் 
நுட்ப வல்லநர்கள் அறிவார்கள். 

நேரு தனது பதவிக் காலத்தில் தனது போலிக் கௌரவத்துக்காக இந்தியாவின் நலன்களை விட்டுக் கொடுத்தவர். ஆனால்,அவருக்கிருந்த செல்வாக்கும் அரசியல் அதிகாரமும் வேறு எவரையும் எதிர்க்கவிடவில்ல; எதிர்த்தாலும் எடுபடவில்லை. தொடர்ந்து அவருடைய பரம்பரையின் ஆட்சியே இந்தியாவில் நீடித்ததால் அவருடைய அரசியல் பிழைகளை எவரும் ஆராயவும் இல்லை;அடித்துப் பேசவும் இல்லை.

இந்த அடிப்படையில்தான் காஷ்மீரின் ஷேக் அப்துல்லாவைக் குஷிப்படுத்தி, நல்ல பெயர் எடுக்கவே ‘காஷ்மீருக்கென்று தனி அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசன விதி 370 ஐக் கொண்டு வந்தார்.

நண்பர்களே,
இதன் மூலம் இன்றுவரைக் காஷ்மீர்  பிரச்சினை தீர்ந்ததா? 
கடந்த 67 ஆண்டுகளாகவே காஷ்மீர் குறித்தான் சண்டையும் சச்சரவுமாக இந்தியா பாகிஸ்தானுடன் போராடிக் கொண்டுதானே  இருக்கிறது? இதனால் இந்திய அரசுக்கு ஆகியிருக்கிற வீண் செலவுகளின் கணக்கைப் பார்த்தால் இந்திய நதிகள் அத்தனையையும் இணைத்திருக்க முடியும்? 

இந்த 370ன் பயன் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு வீண் செலவுகளையும் வெற்றுக் கோஷத்தையும்தான் வளர்க்க முடிந்ததே தவிர நன்மை எதுவும் இல்லை. 

இந்த சட்டத்தின் பயனால் காஷ்மீரில் தீவிரக் குழுக்களின் வளர்ச்சியும் ஆயிரக் கணக்கில் நமது ராணுவ வீர்களின் உயிர் இழப்பும்தான் மிகுந்து வருகிறது.

ஆரம்பத்திலேயே, பட்டேலின் எண்ணம் நிறைவேறி இருந்தால் அப்போதே ஆஸாத் காஷ்மீர் என்கிற முழுமையான காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கும்; நேருவின் மிதவாத எண்ணத்தினால் பிளவுபட்ட காஷ்மீருக்காக அரசியல் சாசன திருத்தம் 370 கொண்டு வரத்தேவையில்லாது  போயிருக்கும்; இன்றுநாள்வரை, காஷ்மீரைக் காரணம் காட்டி பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கும் இடம்  இல்லாமல் போயிருக்கும்.

ஆனால் விதி நேருவின் ராஜதந்திரத்தோல்விகள் மூலம் விளையாடி விட்டது.

உண்மையில்-
இந்த விதியைப் பயன் படுத்திக் காஷ்மீரிகளுக்கு தலைக்கனமும் போலி அந்தஸ்தும் அளித்து, ஒருவகையில் அரசியல் உரிமை லஞ்சம் போல் அளித்து, அவர்களை எல்லாம் ஷேக் அப்துல்லாவின்  தலைமையில் மாநில அரசு அமைத்துக் கொள்ளும்படிச் செய்திருப்பது ஒரு அரசியல் சாசன மோசடியே தவிர இந்தியாவைக் கௌரவப்படுத்தும் விஷயமல்ல.
ஷேக் அப்துல்லாவுக்குக் கிடைக்கச் செய்த முதல்வர் பதவியை அவர்கள் ’பிரதமர் பதவி’ என்று வைத்துக் கொள்ளவும் காஷ்மீர் இந்தியாவுடன் அரசியல் சாசன நட்போடு இருக்கக் கூடிய தனி நாடு என்று ஒப்புக் கொள்ளவும் இந்தியாவின் சொத்துரிமைச் சட்டம், பொது உரிமைச் சட்டம் எல்லாம் காஷ்மீரிகளுக்குப் பொருந்தாது என்றும் பலவகையிலும் காஷ்மீரிகளைத் ‘தாஜா’செய்து தனிச் சலுகைகளை அளிப்பதுடன் அதற்காகக் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் பாதுகாப்புக்கென்று ஆயிரக் கணக்கான கோடி நிதி உதவிகளை அளித்து
வருகிறது இந்தியா.

மிகக் கடுமையான பனிமலைச் சிகரங்களில் பல்லாயிரக்கணக்கான நம் வீரகள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் நிகழாவண்ணம் காவல் காக்க, கொஞ்சமும் மதிக்காமல் அவர்களை எல்லாம் தங்கள் நாட்டுக்குக் காவல் செய்யும் வேலைக்காரர்கள் போல்தான் காஷ்மீரிகள் கருதுகின்றார்கள்.

“யாருக்காக இந்த ராணுவம்? இந்தியாவின் நலனுக்கே தவிர எங்களுக்காக அல்ல; இந்த ராணுவம் எங்களுக்குத் தேவையில்லை” என்பதே பெரும்பாலான காஷ்மீர்களின் மெத்தனம் மற்றும்  எகத்தாளச் சிந்தனைகள். இதனை இன்று பரவலாக நாம் உணர முடியும்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உருவாக்கும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாதப் பேச்சாளர்களுக்கும் இங்கே தொப்புள் கொடி உறவுகளை வளர்க்கும் நன்றி கெட்ட மாந்தர்கள் மலிந்த மாநிலமாகவேதான் இந்த இந்த 370 விதி காத்து வருகிறது..

அங்கு பெரும்பான்மையாக இருந்த காஷ்மீர் பிராமணர்களின் குடும்பங்களைக் கடந்த அறுபது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சாகடித்தும் நோகடித்தும் காஷ்மீரை விட்டுத் துரத்தியும் சுகம் கண்டு வரும் மிருகங்களை வளர்த்ததே தவிர தேசப்பற்றை வளர்க்கவில்லை இந்த 370.

பண்டித நேருவின் சாமர்த்தியம்போல் அன்று பேசப்பட்ட இந்த 370 உண்மையில்  நேருவின் பரம்பரைப் பங்காளியான ஷேக் அப்துல்லாவுக்குத் தனக்கு நிகரான அரசியல் பதவி கிடைத்து அது நிலைக்கச் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது.

இந்திய சரித்திரத்தில்  தேடலும் நாடலும் உடையோர் இந்த 370 விதியைப் படித்துணர்ந்தால் பண்டித நேருவின் மிகப்பெரும் ராஜதந்திரத் தோல்விகளில் காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்திருப்பதும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
 
இந்த 370 இருப்பதால்தான்,காஷ்மீரில் பாகிஸ்தான் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி ,இன்றுவரை உலக அரங்கில் நம்மைக் கேனையர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் குள்ள நரித்தந்திரங்களில் வீழ்ந்த காஷ்மீர் முஸ்லீம்களோ ’இந்தியாவின் சலுகை மட்டும் வேண்டும்; ஆனால் இந்தியா தங்களை ஆளக் கூடாது’ என்ற சித்தாந்த வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.,இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மையைக் கேலி செய்யும் வகையிலும்தான் அங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் செயல்படுகிறார்கள்.

அவர்களுக்கு ’இந்தியர்’ என்ற சிந்தனையே இல்லை. இந்தியர் என்று தங்களை அழைப்பதிலும் அவர்களுக்கு உடன்பாடே இல்லை. ஆனால் இந்தியா வழங்கும் பணம் மட்டுமே வேண்டும். இந்தப்பணத்தை ஆட்சி செய்யும் அப்துல்லா குடும்பம் முதல் அவரைக் கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வரத் துடிக்கும் காஷ்மீர் எதிர்க் கட்சித்தலைவர்கள்வரை சுரண்டிப் பங்கு போட்டுக் கொண்டு பாகிஸ்தானிடமிருந்தும் ரகசிய வழிகளில் பல்வேறு விதத்தில் உதவிகள் பெற்று உல்லாச வாழ்வு நடத்துகிறவர்கள்தாம்.

’எனவே காஷ்மீரில் விசித்திரமான நன்றி கெட்ட மக்களை வளர்த்ததாக இந்த 370 விதி இருக்கிறதே’ என்ற கோபம் எந்த ஒரு ஒரிஜினல் இந்தியனுக்கும் வரத்தான் செய்யும்.

அந்தத் தாக்கம் நமது பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு  முழுக்க முழுக்க இருக்கிறது.

இந்த விதியை ரத்து செய்து ’இந்தியாவில் எல்லோருக்கும் பொதுவான ‘Commom Civil Code’ என்னும் பொது சிவில் சட்டத்தைக் கொணர’ மானமும் ஞானமும் உள்ள இந்தியர்கள் ஆதரிக்க முன் வர வேண்டாமா?

(இன்னும் வரும்)

Monday, May 26, 2014

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி


றிவார்ந்த நண்பர்களே,

பாரத மக்களின் மிகப்பெரும்பான்மை ஆதரவும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவும் பெற்று நாடாளுமன்றத்தேர்தலில் வாகை சூடிய குஜராத்தின் தவப்புதல்வன் திரு நரேந்திர மோதி இன்று 26.5.2014 மாலை 6:13க்கு, தலைநகர் தில்லையில்  பாரதப் பிரதமாராகப் பதவி ஏற்றுக் கொண்டு விட்டார்.

இந்தியாவில் சிறப்பான முதல்வர்களில் ஒருவர், சிறப்பான இந்த தேசத்துக்குப் பிரதமராக ஆகி இருக்கும் திரு மோதி அவர்கள்,
’இந்தியப் பிரதமர்களிலேயே முதல்வர்’ என்ற பெரும் புகழ் பெற வேண்டும்.

தனது நேர்மையான, நெருடல்கள் இல்லாத ஆட்சியினால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும்  நல்ல நதிகளைப்போல் கருதி, அவற்றை இந்தியப்பெருங்கடலில் கலக்கும் புண்ணிய நதிகள் ஆக்கும் வகையில் பாரத தேசத்தை வழி நடத்தி அவரை விரும்பியவர்கள் எல்லோரும் பெருமிதம் கொள்ள வாழ்த்துவோம்.

மகாகவி பாரதி இந்தப் புதிய பாரதத்தை வரவேற்ற பாஷையிலேயே நாமும் எண்ணி:

                        ” புதிய பாரதத்தினாய் வா...வா...வா!
                         பொலியும் புதிய முகத்தினாய் வா...வா...வா
                         எதையும் வெல்லும்  வீரனாய் வா..வா....வா
                         இந்தியாவின் மைந்தனாய்  வா..வா....வா”

                         ஒளி இழந்த நாட்டினில், உன்னாலே;
                         ஒளி பெருக்கச் செய்குவாய் வா..வா....வா
                         களி மிகுந்து வாழ்த்தினோம் வா..வா....வா
                         காலம் தோறும் சிறக்கவே  வா..வா....வா

என்று கூறி வரவேற்போம்; வாழ்த்துவோம்!

வாழ்க பாரதம்.

உங்கள் அனைவரின் சார்பாகவும்,
கிருஷ்ணன்பாலா
26.5.2014 /18:13

இது ஒரு சத்தியப் பிரமாணம்.

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.


இதுவரையிலும் எந்தஒரு அரசியல் சார்புச் சித்தாந்ததையும் வசப்படுத்திக் கொண்டு நான் வரிந்து கட்டி எழுதியதில்லை.

முகநூலில் வந்ததிலிருந்தே தமிழர்தம் மரபு சார்ந்த கொள்கைகள்  மற்றும் தேசத்தின் சத்தான  அறிவுசார் நிலைப்பாடுகளை வலியுறுத்தியே கட்டுரைகள் எழுதி வருகின்றேன்.

அரசியல்,சினிமா,இலக்கியம்,பத்திரிகை இயல் சார்ந்த துறைகளில் எனக்குள்ள அக்கறையும் பட்டறிவும் பார்வையும் இங்கே எழுத்துக்களாகப் பரவி நிற்கின்றன.

வெறும் நட்புப் பட்டியலை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கானோர் எனது நட்புக் கோரி இணைந்தவர்களாக இருக்கின்றார்களே தவிர  அறிவார்ந்த சிந்தனைகளில் நாட்டம் கொண்டு கருத்துக்களை விவாதிப்போர் மிக மிகக் குறைவு.

என்றபோதும்-
எனது எண்ணங்கள் தனித் திறனோடும்  எவரையும் சார்ந்திராமல், அச்சமின்றி நேர்மைத் துணிவோடும் நிலைத்த உண்மைகளோடும்தான் இங்கே உரைக்கப்படுகின்றன.

அவை உண்மையான பாதையில் நடைபோட விரும்பும் அறிவுத்தாகம் கொண்டோர்க்கன்றி வெறும் திண்ணைப்பேச்சுக்காரர்களுக்கும் வெட்டிப் பொழுது போக்காளர்களுக்கும் அல்ல’ என்பதை இங்கே பல முறை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

நரேந்திர மோதியை நான் முழு மனதோடு முக்காடு போட்டுக் கொள்ளாமல் ஆதரிக்கின்றேன்.அதற்குக் காரணம் எனது தேசப்பற்று.

நான் பி.ஜே.பியின் பின் நிற்பவன் அல்லன்;முன் நின்றவனும் அல்லன்.

நரேந்திர மோதியின் வாழ்வும் அவரது எண்ணங்களும்  ஒரு துறவியைப் போன்றே என்னைக் கவர்கின்றன.

இந்தியாவின் வீரத்துறவியாகப் பிறந்து மறைந்த விவேகானந்தரின் மறுவடிவாகவும் வல்லபாய் படேலின் இன்னொரு பிறப்பாகவும் நரேந்திர மோதியைக் காண்கின்றேன்.

அவர் இந்தியர்கள் பெருமைப்படும் பிரதமராகச் செயல்படுவார்.
அப்படிச் செயல்பட முடியாதபடி அவரைச் சிறுமைப்படுத்தும் சித்தாந்தப்போக்கை எவர் கடைப்படித்தாலும் அவர் பி.ஜே.பியின் உயர் தலைவர்களாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்து இம்மண்ணின் சத்துக்களை உறிஞ்சி, உண்டு அதற்குத் துரோகம் இழைக்கின்றவர்களாகவே எனது எழுத்து எனும் சாட்டையைச் சுழற்றுவேன்.

மோதியே இடறினும்  என் எழுத்து அவருக்குச் சாட்டையாக மாறும்.

இதை உணராது,மோதியின் அரசாட்சிக்கு அச்சாரம் இடாமலேயே அவரது அணுகுமுறைகளைக் கண்டு அஞ்சுபவர்களையும் எனது எழுத்துக்களோடு எதிர்ப்பகை கொள்பவர்களும்  அரைவேக்காடுகள்’என்ற தகுதியை மட்டுமே கொண்டவர்களாகக் காண்கிறேன்.

இந்த நாட்டின் மேன்மையான விஷயங்களுக்குரிய அணுகுமுறைகளுக்கன்றி  வேறெதற்கும் நான் அஞ்சுவதில்லை; என் எழுத்துக்களைக் கண்டு எவரேனும் அஞ்சினால் அவர்கள் இந்த நாட்டின் அசல் வித்துக்களை விற்கத் துணிந்த வியாபாரிகளாகவே இருக்கின்றார்கள் என்று அர்த்தம்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
6.5.2014
.

ஒப்பாரிப் பாடகர்கள்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்  இந்திய மக்களின் நலம் பேணும் வகையில்  மகத்தான கொள்கை மாற்றங்களை நரேந்திர மோதி அரசு நிச்சயம் உருவாக்கும் என நாடே எதிர்பார்க்கின்றது.

இந்திய மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று  நரேந்திர மோதி நாளை பிரதமராகப் பொறுப்பேற்கின்றார்.

சர்வதேச நல்லுறுவு எண்ணங்களின் அடிப்படையிலும் தெற்காசிய நாடுகளிடையே பரஸ்பரம் நல்லிணக்க உறவுகளை வளர்க்கும் SAARC அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்களை புதிய ஆட்சியின் தொடக்க விழாவுக்கு அழைப்பது என்பது  ராஜ தந்திர நல்லெண்ணத்தின் உயரிய வெளிப்பாடு.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உயர் பதவியான பிரதமர் பொறுப்பை ஏற்பவருக்கு  இதன் கெளரவத்தையும் மதிப்பையும் மதி நுட்பத்தையும் ராஜ தந்திர வெற்றிகளையும் நிலை நிறுத்த வேண்டியது தலையாய கடமை.

அந்தக் கடமையின் அச்சாரமாக பதவி ஏற்பு விழாவுக்கு ’சார்க்’ நாடுகளின் தலைவர்கள் என்ற தகுதியில் ராஜ பக்‌ஷேவை அழைத்திருப்பதில் என்ன தவறு?

ராஜ பக்‌ஷேயை உலக நாடுகள் கண்டித்துத் தண்டிப்பதற்கு இந்தியாவின் தன்னார்வமும் முன்னெடுப்பும் அவசியமாகிறது. அதைக் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் ராணுவ ரீதியிலும் ஆதரவு தந்தது.

இங்குள்ள இலங்கை எதிர்ப்புப் போராளிகளும் அரசியல் கட்சிகளும் முக்கியும் முனகியும் மூண்டெழுந்தும் எள்முனை அளவும்  இலங்கை அரசின் செயல்பாடுகளைத் தடுக்க முடியவில்லை. காரணம், இந்திய அரசின் பின்புல ஆதரவு அதற்கு முழுமையாக இருந்ததுதான்.

இப்போது காங்கிரஸ் அரசுக்கு நேர் எதிரான மக்கள் அலையில் காங்கிரஸின் ஜன்ம எதிரியான பா. ஜ.க. வின் ஆட்சி நரேந்திர மோதியின் தலைமையில் தொடங்கவுள்ளது.

’நரேந்திர மோதி பிரதமராக வர வேண்டும் என்று தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள், நாளைய பதவிப் பிரமாண நிகழ்வில் பெருமையோடு கலந்து கொண்டு பூரிக்க வேண்டியவர்கள்.ஆனால் ராஜ பக்‌ஷேவின் வருகையைக் காரணமாக வைத்துப் பொச்சரிப்புக் காட்டுகின்றார்கள்; விழாவைப் புறக்கணிக்கின்றார்கள்.
.
இதன் மூலம் நரேந்திர மோதியின் நம்பிக்கையை  இழந்து விட்டதோடு, இவர்கள் இலங்கைக்கு எதிரான ராஜரீதியிலான நடவடிக்கை எதிலும் விலகி நிற்பவர்களாகவே தங்களுடைய அவல அரசியலைத் தொடரத் தயாராகி விட்டார்கள்.

ராஜ பக்‌ஷே இனியும் முன்புபோல் சோனியாவின் ரகசிய ஏஜண்டாக இலங்கையில் ஆட்சி செய்ய முடியாது’. என்ற ஞானம் சிறிதும் இல்லாத அரைவேக்காட்டு அரசியலையே நரேந்திர மோதியிடம் காட்டி வெற்றுக் கோஷம் இடுகிறார்கள்.

இந்திய ராணுவத்தையும் அதன்  தளவாடங்களையும் ரகசியமாக இலங்கைக்குத் தந்து, அங்கே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவர்பின்னால் நின்றவர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க அத்தனை உதவிகளையும் செய்தவர் சோனியாதான் என்ற ரகசியம் அம்பலமாக்கப்பட பக்கத் துணையாக இருக்கவேண்டியவர்கள்  சோனியாவையும் மோதியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் மடமை அரசியல்வாதிகளாக இருக்கின்றார்கள்.

சுமூகமான வகையில் நட்புணர்வோடு பேசி இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர,அவர்கள் அந்த நாட்டில் சம உரிமையோடு வாழ, நரேந்திர மோதி நிச்சயம் தனது ஆட்சியின் அனைத்து வல்லறிவையும் பயன்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் புதியோர் திருப்பு முனையை ஏற்படுத்துவார்.

அப்போது இன்றைய போலிப் போராட்டவாதிகள் தங்கள் முகத்தில் தாங்களே கரிபூசிக் கொண்டு தெருவில்தான் நிற்க வேண்டிவரும்.

பாவம், தங்களுக்கு  இழவு வீட்டில் ஒப்பாரி வைத்துத்தான் பழக்கமே தவிர கல்யாண வீட்டில் மங்கல வாழ்த்துப் பாடத்தெரியாதென்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள், இந்த ஈழத்தமிழ் ஒப்பாரித் தலைவர்கள்.

முகாரி மட்டுமே பாடுவதில் தொழில் திறமை பெற்ற  இவர்களுக்கு மோகனம் என்றால் என்னவென்று தெரியவில்லை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.5.2014

ஈழப்பிரச்சினை:ஈனப்பிரச்சினை ஆக்காதீர்!

நண்பர்களே,

ராஜ பக்‌ஷேவை அழைத்திருப்பது தமிழர்களுக்கோ,ஈழப்பிரச்சினைக்கோ எதிரானது என்று கூக்குரல் இடுவது  அரைவேக்காட்டு அரசியலின்  அடையாளமே தவிர  அறிவார்ந்த,ஆரோக்கியமான  சிந்தனை அல்ல. 

எதிரியாக இருந்தாலும்கூட அவனைத் திருத்துவதற்கும் தெளிந்து கொள்வதற்கும்  உரிய ராஜ தந்திரம் தேவை.  குழாயடிச் சண்டைக்காரிகள் போல் இங்கே எதற்கெடுத்தாலும் ராஜ பக்‌ஷேவைக் ’கொல்ல வேண்டும் குதற வேண்டும்’ என்று கத்துவதும் குரைப்பதும் பண்பட்ட மனிதர்களின் இயல்பாக இருக்க முடியாது.

இப்படிப்பட்டவர்களின் ஆர்ப்பாட்ட அரசியலை மக்கள் செவிப் படுத்தாமல் குப்பைத் தொட்டியில் போட்ட பின்பும் தங்களுக்கு தமிழகமே பின்னால்  இருப்பது போல் போலிப் புளகாங்கிதம் கொண்டு அறிக்கைகள் விடும் காகிதப்புலிகளாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் செல்லாக்காசுச் சிந்தனையாளர்கள்.

இந்தப் போலிகள் தங்களை ஈழத் தமிழ் மக்களுக்காகவே வாழும் மாவீரர்களைப்போல் போஸ்டர்கள் போட்டுக் கொண்டு பூனை,ஆனை, புலி எலிகளின் படங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் அவற்றைத் தங்கள் போஸ்டர்களில் தங்கள் படங்களுடன் விதம் விதமான போஸ்களில் காட்டிக் கொண்டு சுய இன்பம் அடைகின்ற  சுத்தப் பேடிகள்.

இவர்களால் ஈழ மக்களின் துயர் ஒருபோதும் குறையவில்லை.மாறாக பிரச்சினைகளைப் பெரிதாக்கி ஊதி ஊதிப் பெரிதாக்கி அதில்  குளிர்காயும் குயுக்தியாளர்களாகவே அரசியல் செய்கின்றவர்கள். இவர்களின் சுயநல,குள்ள நரித்தனமான  அவல நிலையை  உணர்வோர் மிக மிகக் குறைவு.

‘தமிழ் அறிஞர்கள்’ என்றும் ’கவிஞர்கள்’ என்றும் ’இன உணர்வாளர்கள்’ என்றும் தங்களைக் கதைத்துக் கொண்டு  வேலையற்றவர்களையும் விபரீதப் புத்தி உள்ளவர்களையும் கூட்டிக் கொண்டு மண் சோறு விருந்து படைக்க முடியுமே தவிர   பாதிக்கப்பட்ட மக்களின் துயர்  போக்கும் மருந்தை ஒரு சொட்டுக் கூட தர முடியாத தறுதலைப் பேச்சாளர்கள்தான் இவர்கள்.

இத்தகையோரால்தான்  ஈழப்பிரச்சினை, ஈனப் பிரச்சினைபோல்
இழிபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப்போலிகளின் வெத்துக் கோஷத்தை விரிவு படுத்தும் உழவாரப்பணிகளில் புல்லரித்துப்போகும் மூடர்களூக்கு எடுத்துரைக்கவும் இடித்துரைக்கவும் இதற்கு மேல் நாகரிக வார்த்தைகள் இல்லை.

’ராஜரீக  நடவடிக்கையில் இந்த மோதியின் அரசு ஈடுபடும் முன்னரே ஈழப்பிரச்சினை விடிவு பெற வேண்டும்’ என்பது அரைவேக்காடுகளின் அரசியலே அன்றி வேறென்ன?

இவண்,
கிருஷ்ணன்பாலா
(முகநூல் பதிவு :24.5.2014)

டாக்டர் சுப்ரமணியம் சுவாமி யார்-3



டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி  தமிழன்;உண்மையான இந்தியத் தமிழன்.
இந்தியாவின் அறிவுசார் சொத்து.

நான், அவர் பிறந்த இனத்தைச் சார்ந்தவன் அல்லன்;ஆயினும் தமிழன். என்னைப்போன்றோர் இந்த தேசத்தின் நலனை எப்படிக் கருதுகின்றார்களோ அப்படிக் கருதி வாழ்வு நடத்தும் டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி போன்றோரை இந்திய அரசியலின் இணையற்ற ஆசான்களில் ஒருவராகக் காண்கின்றேன்.

தனக்கு நியாயம் என்று தோன்றுவதை எந்த அரங்கிலும் அஞ்சாது உரைக்கும் ஆண்மை அவருக்கிருக்கிறது.

நாட்டுக்கு எது நன்மையோ அதைத் துணிவோடும் எவருக்கும் எதற்கும் அஞ்சாமலும் சொல்கின்ற வல்லமை இன்று இவருக்கு மட்டுமே உண்டு.

எத்தகைய எதிரிகளையும் எதிர்த்து அரசியல் செய்யவும் வீழ்த்தவும் வாழவைக்கவும் தெரிந்த சாணக்கியர்.

கையில் வைத்திருந்தால் கூர்வாள்;
அதற்கு எதிரிகள் அஞ்சுவார்கள்.

கழற்றி வைத்தால் போர்வாள்;
அதை எதிரிகள் எடுத்துக் கொள்வார்கள்.

டாக்டர் சுப்ரமண்யம் சுவாமிதான் அந்த வாள்.

அந்த வாள் மோதியின்  கைகளில் இருக்க வேண்டும்

One Man Army என்ற சொல் இவருக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய இவரை, தமிழினத்தின் பண்புசார்ந்த அறிவில்லாத பலரும் கொஞ்சமும் ஞானமின்றி விமர்சிப்பதைக் கடுமையாக எதிர்ப்பேன்.

அவர்கள் தங்கள் பேனாவில் சாக்கடையைக் கலக்காமல் எதிர்த்து எழுத முன் வரட்டும்.

சுவாமியை ஆய்ந்து அறிந்தவர்கள் அவரைத் தமிழினத்தின் விரோதி என்றும் அந்நிய சக்திகளின் கைக் கூலி என்றும் அரசியல் புரோக்கர் என்றும் கூற மாட்டார்கள்.  

இங்குள்ள அரசியல்வாதிகளைப்போல்  அவர் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில்லை என்பதுடன் பிற அரசியல்வாதிகள் ஈழத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்கிக் கொண்டு  பேசித் திரியும் பித்தாலாட்டதுக்கு எதிரானவர் என்பதும்  எனக்குத் தெரியாததல்ல. அவரைத் தெரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமான அரசியல் பித்துக் கொண்டவர்களுக்கும் குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு குவலய அரசியல் பேசும் அரைகுறைகளுக்கும் அவர் வேப்பங்காய் எனக் கசக்கின்றார்.

தேசியச் சிந்தனையோடும் நமது தேசத்துக்கு எது நன்மை என்ற அரசியல் தீர்க்கத்தோடும் சர்வதேச அரசியலை விரல் நுனியில் வைத்து மற்ற அரசியல்வாதிகளை மூக்கில் விரல்வைக்கச் செய்யும்  அறிவோடும் ஊழலில் கொழிப்போர்க்கும் அதிகாரப் பித்தர்களுக்கும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்வதால்  இவரை எனக்குப் பிடிக்கிறது.

அவருடைய அரசியல் சாகசங்களும்  சிக்கலான பிரச்சினைகளில் இவர் காட்டும் நுண்ணறிவு வழிகாட்டுதலும் இவரை தன்னிகரற்றவராய் இந்திய அரசியலில் தனிமைப் படுத்திக் காட்டுகிறது.

இன்றைய இந்தியாவின் மிகப்பெரும் ஊழலான 2ஜி  அம்பலமானதுக்கு இவர் ஒருவரே காரணம் என்பது இந்த ஊழல் அரசியல்வாதிகளின் ஊது குழல்களுக்குப் புரியவில்லை. இவரது அரசியல் பற்றி ஆய்வு செய்தால் ஐம்பது ஆராய்ச்சிப் பட்டங்களுக்கும் மேல் அரசியல்-பொருளாதாரப் பிரிவுகளில்  Ph D பெறலாம். 

இவரை முற்றிலும்  கண்மூடித்தனமாக எதிர்ப்போருக்கல்ல, இந்தப் பதிவுகள்; தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்த அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தகுதி உடையோருக்காக மட்டுமே எழுதுகின்றேன். 

நான் இவரை நுண்ணறிவு மிக்க தமிழனின் மேம்பட்ட தோற்றம் என்றுதான் கூறுவேன்  

அதற்கு மாறாக இழிநிலைச் சொற்களில் இவரை வரைய முற்படுவோரை அறிவுலகம் புறக்கணிக்கும் எள்ளி நகை செய்யும்!.

-கிருஷ்ணன்பாலா
(முகநூல் பதிவு நாள்: 23,May'2014)

டாக்டர்.சுப்ரமண்யம் சுவாமி யார்-2



டாக்டர்.சுப்ரமணியம் சுவாமியைப்  பலரும் ’அரசியல் கோமாளி’ என்றும் ’விவரம் புரியாமல் உளறுகின்றவர்’ என்றும் பேசி அவருக்கு அரசியல் கற்றுத்தருவதைப் போல் தங்கள் கற்றுக் குட்டித்தனத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

அரசியலிலும்  பொருளாதாரச் சிந்தனைகளிலும் மேதைமை மிக்கவரான  டாக்டர் சுவாமி, இன்றைய அரசியல் ஜாம்பவான் பலருக்கும் அவர் ஓர் வழிகாட்டி;அவர்களுக்கு வாழ்வு தந்தவர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புத்தெழுச்சி தந்த சேஷன் முதல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை இவரது சீடர்கள்.

இந்தியர்கள் இவரை அறிந்து கொள்ளாமல் இருப்பது அவர்களின் அறியாமையின் உச்ச கட்டம்.

இந்தியத்தலைவர்களின் பேச்சுக்குக் கட்டுப்படுமோ இல்லையோ அமெரிக்கா சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் யாராகிலும்  டாக்டர் சுவாமியின் சொல்லுக்குச் செவி மடுப்பர் என்பது தொட்டுப்பார்க்க முடியாத இவருடைய அரசியல் நுட்பத்தின் பெருமை.

இவரை விமர்சித்துத் தமிழர்கள் தாழ்ந்து விடக் கூடாது என்பதே என் எண்ணம்.

எதிரிகள் எவரையும் கோமாளி ஆக்கி விடும் அரசியல் நுட்பமும் ராஜ ரகசியங்களையும் அறிந்த அரசியல் பேராசிரியர் அவர் என்பதைக் காலம் நிரூபித்து வருகிறது. வெறும் குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு சிந்திக்காமல் அகண்ட நிலை ஆழ் மன அறிவாற்றலை வெளிப்படுத்தும் நிலையில் சிந்திக்க வேண்டாமா?.

மத்தியில் அமையவுள்ள மோதி தலைமையிலான புதிய  அமைச்சரவையில் பலருடைய புருவங்களையும் உயர்த்தி டாக்டர் சுவாமி உயர் பொறுப்பை அடைவார் என்றே எதிர் பார்க்கின்றேன்.

அது நாட்டின் நல்ல காலத்துக்கான  சமிக்ஞை!

டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி யார்?-1



டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி அவர்கள் உலக அரசியல் அறிவிலும் தேசப்பற்றிலும்  உலகப் பொருளாதாரம்,சட்டம் மற்றும் நிதி நிர்வாகத் திறனிலும் தன்னிகரற்ற நுட்பம் உடையவர்.

உண்மை நட்பைப் போற்றுவதில் அவருக்கு இணை இன்னொருவர் இல்லை.

அவரை நாம் தெரிந்து வைத்திருப்பதை விட அமெரிக்காவும் சீனாவும் மற்றும் ரஷ்யா,பிரிட்டன் போன்ற நாடுகளும் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றன.

நரேந்திர மோதி அவர்களின் உண்மை நண்பரும் தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவருமான டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி அவர்களின் அனுபவமும் அரசியலும் நரேந்திர மோதி அவர்களின் அரசுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ’டாக்டர் சுவாமி அவர்கள் மத்திய அமைச்சர் ஆக்கப்பட வேண்டும்’ என்ற விருப்பதை "True patriarch and extraordinary genius in Geo-Politics Dr.Subramanyam Swamy should get cabinet birth." என்று  எனது முகநூலி  19.5.2014 அன்று எழுதி இருந்தேன்.

விஷயம் தெரிந்த நண்பர்கள் இக்கருத்தை ஆமோதித்தார்கள்.

விவரமற்றவர்கள் அவரைக் 'கோமாளி' என்றும் 'ஆபத்தானவர்' என்றும் 'அமெரிக்க ஏஜண்ட்' என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.

அவர் நாட்டுக்காக எண்ணும் விஷயங்களும் அவரது மதி நுட்பமும் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதால்தான் அவரை அவ்வாறு தரக் குறைவாக எழுதுகிறார்கள்.

அவருடைய வரலாற்றுச் சாதனை ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

இன்று இந்தியாவிலிருந்து இமயமலையின் உச்சத்தில் சீனாவின் ஆட்சிக்குள் இருக்கும் இந்துக்களின் தலையாய கோவிலாம் மானோசரோவரில் உள்ள கைலாஷ் மலைக்கு வருடம் தோறும் இந்தியாவிலிருந்து இந்தியர்கள்  யாத்திஅரை சென்று வருவதற்கான அததனை வசதிகளையும் சீன அரசிடம் பேசி வாங்கித் தந்தவர் டாக்டர் சுவாமி அவர்கள்.

நம்மிடையே வாழும் மேதை;தமிழர்;துணிவும் மதி நுட்பமும் மிகுந்த அரசியல் நிபுணர்.

அறிவிலிகள் இவரைப்புரிந்து கொள்ளவில்லை என்பது இவரது குற்றமல்ல.

அவரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு விமர்சித்தால் அது அறிவுடைமை.

Wednesday, May 21, 2014

விளக்குமாற்றின் பயன்!


றிவார்ந்த நண்பர்களே,
ம் ஆத்மி பார்ட்டியின்  ஆதிமூலர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று   (21.05.2014) நிதின் கட்காரி தொடுத்த மான நட்ட வழக்கில் கைதாகி உள்ளார்.

இந்தக் கைது மூலம் கெஜ்ரிவால் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ஜாமீன் கோர மறுத்திருக்கிறார். அதன் விளைவாக திஹார் சிறைக்குத் தெம்பாகவும் சென்றிருக்கிறார்.

இது ஒருவகை சுய புகழ் பெருக்க முயற்சியே தவிர வீரத் தியாக அரசியல் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரது முரண்பட்ட செயல்பாடுகள் முற்றிலும் அவரை அரசியல் அரங்கிலிருந்து  அழித்து, அவமானத்துக்கும் அசிங்கத்துக்கும் ஆளாக்குமே தவிர, அற்புத மனிதராகவோ அரசியல் புனிதராகவோ ஒருபோதும் உயர்த்தாது.

டெல்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக தேர்தல் வெற்றியைப் பெற்ற இந்தப் புதிய காந்தி அவதாரம், தனது சீடர் குழுமத்தோடு அரசியல் நுட்பம் அறியாது கொஞ்சமும் பொருந்தாத காங்கிரஸின் உதவியுடன் அவசரக் கோலத்தில் ஆட்சிக் கட்டில் ஏறியதும், அதன் மீது தவ்வித் தவ்விக் குதித்து அந்தக் கட்டிலை நார் நாராகக் கிழித்து விட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டதும் தவிர ஒரு புல்லைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

அவருக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் ஏப்பம் இட்டதைக் கண்டு டெல்லி மக்களே கொதித்துப்போனதுதான் மிச்சம்.

எல்லா அரசியல்வாதிகளும் பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களுக்குக் குல்லா போடுவதை ஒரு ஃபேஷனாகக் கொண்டிருக்க, இவர்  மட்டும் தனக்கும் தனது  சீடர்களுக்கும் காந்தீய பாணியில் தாங்களாகவே கட்சிப் பேரிட்ட குல்லாக்களைப் போட்டுக் கொண்டு புதுவகை பித்தலாட்ட அரசியலை அரங்கேற்ற முயன்று,  ‘இந்தியாவில் ஊழல் எதிர்ப்புக்கு ஒரே நாயகன்’என்று தன்னை (கெஜ்ரிவால்) விளம்பரப்படுத்தி கொண்டு மக்களை ஏமாற்றும் புதிய அரசியல் யுக்திகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வேஷம் விரைவில் கலைந்து வெளிச்சம் ஆனது டெல்லி சட்ட மன்றத்தேர்தல் முடிவுகளால்.

தனது திடீர் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பித்த சில மாதங்களிலேயே நடத்தப்பட்ட டில்லி சட்டமன்றத் தேர்தலில்,இந்த  ஆம் ஆத்மி கட்சியை  இரண்டாவது பெரிய கட்சியாக டில்லி மக்கள் அங்கீகரித்துக் காங்கிரஸைச் சிறுத்துப்போன சின்னக் கட்சியாக ஆக்கியபோது கெஜ்ரிவாலுக்கு ‘தலை எது? வால் எது?’ என்பது புரியவில்லை.

எந்தக் கட்சிக்கு எதிராக ஓட்டுக்களைப் பெற்றாரோ,அந்தக் கட்சியின் வெளிப்படையான ஆதரவுடனேயே இவர் டில்லி முதல்வராக ஆட்சி பீடம் ஏறி, தினம் ஒரு தெருக்கூத்து நாடகத்தை நடத்தி ஊடகங்களுக்கு விருந்து வைத்ததன்றி தான் வாக்களித்தபடி டில்லி மக்களுக்கு உருப்படியான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை.

தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு இல்லாதபோது அதை  அடுத்தவர்கள் மீது பழியைப்போடும் தில்லுமுல்லுகளில் சற்றும் சளைக்காத அசட்டுத் துணிச்சலை மட்டுமே மூளைத்தனமாகக் காட்டியவர் இந்த இந்தப் புதிய அரசியல் அவதார புருஷர்.

’ஊழலுக்கு எதிரான இயக்கம்’ என்று தனது கட்சியைச் சொல்லிக் கொண்டு காங்கிரஸை மறைமுகமாக வெற்றி பெற வைக்கும் சதிகாரக் கும்பலின் தலைவன்தான் இவர்’ என்பதை டெல்லி அரசியலில் கெஜ்ரிவால்  ஆட்சி அதிகாரத்தைப் பெற்றபோதே வெட்ட வெளிச்சமாகி விட்டது:

“காங்கிரஸின் கள்ளக் குழந்தைதான் ஆம் ஆத்மி பார்ட்டி” என்பது..

பாவம் அது பிறந்ததும் செத்துப்போன  சவலைக் குழந்தை என்பது இன்னமும் சில படித்த முட்டாள்களுக்குத் தெரியாமல் அதைத்தோளில் சுமந்து கொண்டு சவ ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் மறுபடியும் டெல்லி அசெம்பிளிக்கு விரைவில் மறுதேர்தல் வரப்போகிறது.

அதில் கெஜ்ரிவாலுக்கு முன்னர் வாக்களித்த டெல்லி வாக்காளர்கள் எல்லோரும் விளக்குமாற்றாலேயே இவரது கட்சியை ஓட ஓட விரட்டி அடிக்கப் போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம்?


அப்போது,குப்பைகளை சுத்தப் படுத்த உதவும் விளக்குமாற்றைக் கொண்டே  ஆம் ஆத்மி என்ற  அரசியல் குப்பையை நிச்சயம் அடித்துப் பெருக்கிக் குப்பைத் தொட்டியில் எறிவார்கள்,அதே டெல்லி வாக்காளர்கள்.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
21.5.2014

இமயப் புகழில் எழுந்து நிற்க!


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

நரேந்திர மோதியின் தனிச் சிறப்பு மிக்க ஆட்சி மத்தியில் தளிர்த்திட கோடிக்  கணக்கான மக்களின் கரவொலிகளுக்கிடையே நமது  நல்வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம்.

முறைப்படி பிரதமராவதற்காக, நேற்று அவர் ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்  தேசத்தின் தலைமை குறித்து மனம் உருகிக் கண்ணீர் பெருகிட நாத் தளு தளுக்க ஆற்றிய உரை, அனைவரையும் உருக வைத்திருக்கிறது.

வீரமும் விவேகமும் தீரமும் தெளிவும் மிக்க நாட்டின் தலைவராகப்  பொறுப்பேற்று ஆட்சியை நடத்துவதில் மக்கள் அமோக ஆதரவை அளித்திருக்கும் போது, இனி அவர் எவரும் குற்றம் சாட்ட முடியாத நல்லாட்சியைத் தருவார் என்று நாடே எதிர்பார்க்கும் இவ்வேளையில்  அவரது ஆட்சி முழுமையான வெற்றிகளைக் குவிக்கவும் அவர் தலைமையில் இந்தியா  உலக அரங்கில்  முதன்மை மிக்க நாடாய்  மலர்ந்திடவும் நாம்  வாழ்த்துவோம்!

இவ்வேளையில் அமையப்போகும் மோதியின் அமைச்சரவை சகாக்கள் குறித்துப் பல்வேறு யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நரேந்திர மோதி, தனது எண்ணங்களுக்கு மாசு கற்பிக்கும் நிர்பந்தம் எதற்கும் அடிபணியாது அரசியல் நேர்மையையும் மக்களின் தீர்ப்பின் மகத்தான நோக்கத்தையும்  நிலை நிறுத்த தீரமிக்க நிர்வாகத்தை உருவாக்குவார்’ என்பதை  நேர்மையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதை இங்கே குறிப்பிடக் காரணம், ’மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களை ஆட்சி அதிகாரத்தில் வைக்க மாட்டேன்’ என்று தேர்தலுக்கு முன் உறுதிபடத் தெரிவித்திருக்கும் நரேந்திர மோதிக்குச் சோதனையான நேரம் போலும்’ என்று எண்ணத்தக்கவாறு  அருண் ஜேட்லிக்கு மத்தியில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்ற ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதுதான்.

திறமை மிக்கவர்களையும் நேர்மையும் தூய்மையும் நிறைந்த வல்லவர்களையும் அவர் தன் அமைச்சரவையில் நிரப்ப  எந்த  நிர்பந்தமும் குறுக்கீடாக இருக்கக் கூடாது.

‘தன் அமைச்சரவை சகாக்கள்’ என அவர் அமைக்கவுள்ள குழுவில் ’யார் யார் இடம் பெறுவது? யார் யார் தேவையில்லை?’ என்று முடிவெடுப்பது  நரேந்திர மோதியின்  உரிமை. அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அந்த உரிமையின்  அடிப்படையில் அவரது நிர்வாகம்  சுதந்திரச் செயல்பாடாக இருக்கும்போதுதான் ஆட்சியின் சிறப்புக்கும் வலிமைக்கும் அடித்தளம் இட்டதாக அமையும். 

அப்போதுதான் ஆட்சியின் வெற்றி தோல்விகளுக்கு பிரதமர் என்பவர் முழுப்பொறுப்பாக. நெஞ்சம் நிமிர்ந்து நிற்க முடியும்.

மன்மோகன் சிங்கின் தவறுகளுக்குப் பின் புலமாக  இருந்த சக்திகள்போல் கட்சி மேலிடமோ ஆர் எஸ் ஏஸ் இயக்கமோ இயங்குமானால்  காங்கிரஸ் செய்த அதே தவறு புதிய வடிவில் தொடர்வதுபோல் ஆகி மீண்டும் மீண்டும் நாட்டுக்குக் கேடு தொடர்வதாகி, புதிய மொந்தையில் பழைய கள் என்ற கேலிக்கு ஆளாக நேரிடும்.

நரேந்திர மோதியின் அலையில் வடநாடெங்கும் வாரிச் சுருட்டிய வெற்றியை அமிர்தசரஸில் மட்டும்  அருண் ஜேட்லி ஏன் இழந்து விட்டார்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட  ஒருவரை  நரேந்திர மோதி  தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பது முதல் கோணல் என்றாகிவிடும்.
 
அருண் ஜேட்லியை இப்போதைக்கு அமைச்சரவைக்குக் கொண்டு வராமல் அடுத்து ஏதேனும் இடைத்தேர்தல் மூலம் வெற்றிபெறச் செய்து அதன் பிறகு அமைச்சராக்கும் நேர்மையை மோதி அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்;கடைப்பிடிப்பார்’ என்று நாடு எதிர்பார்க்கின்றது.

 
’சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாத நேர்மைமிக்க பிரதமர் நரேந்திர மோதி’  என்று  அவர் பெயர் எடுக்க வேண்டும்’அது அவர் காலம் முழுமைக்கும் நிலைக்க வேண்டும்.

‘துணிவும் தூய்மையும் நேர்மையும் நிஜமுமான பிரதமர்’ என்ற புகழில் நரேந்திர மோதி  இமயமென எழுந்து நிலைக்க வேண்டும்.

மாறாக, பத்தோடு பதினொன்றாக பிற அரசியல்வாதிகள்போல், வெற்றியின் மமதையில் கட்சியோ மக்களுக்கு அளித்த அவரது வாக்குறுதிகளோ வீழ்ந்து விடக்கூடாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
21.5.2014