Monday, May 26, 2014

டாக்டர்.சுப்ரமண்யம் சுவாமி யார்-2



டாக்டர்.சுப்ரமணியம் சுவாமியைப்  பலரும் ’அரசியல் கோமாளி’ என்றும் ’விவரம் புரியாமல் உளறுகின்றவர்’ என்றும் பேசி அவருக்கு அரசியல் கற்றுத்தருவதைப் போல் தங்கள் கற்றுக் குட்டித்தனத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

அரசியலிலும்  பொருளாதாரச் சிந்தனைகளிலும் மேதைமை மிக்கவரான  டாக்டர் சுவாமி, இன்றைய அரசியல் ஜாம்பவான் பலருக்கும் அவர் ஓர் வழிகாட்டி;அவர்களுக்கு வாழ்வு தந்தவர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புத்தெழுச்சி தந்த சேஷன் முதல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை இவரது சீடர்கள்.

இந்தியர்கள் இவரை அறிந்து கொள்ளாமல் இருப்பது அவர்களின் அறியாமையின் உச்ச கட்டம்.

இந்தியத்தலைவர்களின் பேச்சுக்குக் கட்டுப்படுமோ இல்லையோ அமெரிக்கா சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் யாராகிலும்  டாக்டர் சுவாமியின் சொல்லுக்குச் செவி மடுப்பர் என்பது தொட்டுப்பார்க்க முடியாத இவருடைய அரசியல் நுட்பத்தின் பெருமை.

இவரை விமர்சித்துத் தமிழர்கள் தாழ்ந்து விடக் கூடாது என்பதே என் எண்ணம்.

எதிரிகள் எவரையும் கோமாளி ஆக்கி விடும் அரசியல் நுட்பமும் ராஜ ரகசியங்களையும் அறிந்த அரசியல் பேராசிரியர் அவர் என்பதைக் காலம் நிரூபித்து வருகிறது. வெறும் குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு சிந்திக்காமல் அகண்ட நிலை ஆழ் மன அறிவாற்றலை வெளிப்படுத்தும் நிலையில் சிந்திக்க வேண்டாமா?.

மத்தியில் அமையவுள்ள மோதி தலைமையிலான புதிய  அமைச்சரவையில் பலருடைய புருவங்களையும் உயர்த்தி டாக்டர் சுவாமி உயர் பொறுப்பை அடைவார் என்றே எதிர் பார்க்கின்றேன்.

அது நாட்டின் நல்ல காலத்துக்கான  சமிக்ஞை!

No comments: