Friday, February 27, 2015

இவர்களே,கோடாரிக் காம்புகள்!


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

'தான் ஒன்றும் இறைப்பணி செய்யவில்லை; கிறிஸ்துவ மதம் இங்கே அதிக அளவில் பரவுவதற்காகவே பணி செய்ய வந்தேன்: அதைத்தான் முழுமூச்சாகச் செய்து வருகின்றேன்’ என்பது மதர் தெரசா அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்ட உண்மை.

அந்த உண்மையின் அடிப்படையில் “ இந்தியப் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழித்து, மதம் மாற்றும் வேலைகளைச்   செய்தவர் மதர் தெரஸா;அதனால் அவரை நாம் ’புனிதர்’  என்று ஏற்றுக் கொள்ள முடியாது; அவர் செய்தது இந்திய இறையாண்மைக்கு எதிரான சேவையைத்தான்’ என்ற பேருண்மையை,   ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக்’ அமைப்பின் இன்றைய  தலைவர் திரு மோகன் பகவத் அவர்கள் குறிப்பிட்டு, “ மதர் தெரஸா அவர்கள் இந்தியாவில் செய்து வந்த தொண்டுகள் அனைத்தும் இந்தியாவின் ஒட்டு மொத்தக் கலாசாரப் பண்புக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் எதிரான ‘மத மாற்றத் தொண்டே தவிர அறப்பணி அல்ல’.என்பதையும் தீரத்தோடும் தெளிவோடும் உணர்த்தி இருக்கிறார்.

இந்தக் கருத்தில் தேச நலன் பேணுகின்றவர்கள் யாரும் மாறுபாடு
கொள்ள முடியாது.

மக்களின் பசியையும்  நோயையும் வறுமையையும் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களை மிக எளிதில் கிறித்துவத்தைத் தழுவச் செய்யலாம்’ என்ற  வாடிகனின் திட்டமானது நிச்சயம் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தைச் சீர் குலைத்து,அழித்து அதன் மக்களுக்குப் பணம்,பதவிகளைக் காட்டி அவர்களைத் தங்கள் சொந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைக்கும் குரூரத் திட்டமே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மதம் மாற்றத்துக்காகச் செலவிடப்படும் பணமும் நடத்தப்படும் வழிபாட்டு முறைகளும் அளிக்கப்படும் சலுகைகளும் போகப் போக ஒரு தேசத்துக்கு எதிரான விளைவுகளைத்தான் தரும்.

எனவேதான், இந்தியாவில் ’மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் தேவை என்பது தேச நலன் பேணுவோரின் விருப்பமாக  இருக்கிறது..

நாட்டின் ஒட்டு மொத்த நலன் கருதி எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக,இங்கே மைனாரிட்டிகளின் ஓட்டுப் பிச்சைக்காகத் திருவோடு ஏந்தித் திரிகின்ற கட்சித் தலைவர்களும் நடுநிலையாளர்கள் என்று காட்டிக் கொண்டு இந்த மண்ணுக்கு எப்போதுமே கெடுநிலையாளர்களாக இருப்பவர்களும் கருத்துச் சுதந்திரம் என்ற  பெயரில் கண்டிப்பதும் விவாதம் என்ற பெயரில் மீடியாக்களில் வாந்தி எடுப்பதும் தங்கள் கடமை எனக் காட்டிக் கொண்டுள்ளனர்.

மதர் தெரஸா ஒரு மதப் பிரசங்கிதான்!
ஆனால் -
அவரைப் ’புனிதர்’ என்றும் ’விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்’ என்றும் பொங்கி எழுவோர் யாராயினும் அவர்கள் அதிகப்பிரசங்கிகள்.

அவர் செய்தது மதத்தைப் பரப்பும் தொண்டுகளைத்தான்.
அதற்காக அவருக்கு நோபல் பரிசும் புனிதர் என்ற போற்றுதலும் அளிப்பதெல்லாம் மதத் தொண்டினை ஊக்கும்விக்கும் ’ COMMERCIAL CONTRIBUTION' எனப்படும் ’வணிகநோக்க  வெகுமதி  ஊக்கு’விப்பே தவிர, உண்மையான மக்கள் தொண்டுக்கு அளித்ததாகாது.

உண்மையை உற்று நோக்காது மோகன் பகவத் சொன்னார் என்பதற்காகவே மதச் சாயம் பூசி அதற்கு உள் நோக்கம் கற்பிக்கின்றவர்களும் மதர் தெரஸாவின் உண்மையான நிலைக்கு மாறாகப்  பொய்யான புகழுரை வாசிப்போரும் கருத்துக் குருடர்கள் மட்டுமின்றி ,இந்தியப் பாரம்பரியத்தின் அழிவுக்கு ஆலாபணை செய்பவர்களும்தான்!.

இன்னும் சொல்லப்போனால் கோடாரிக் காம்புகள்.

அதாவது ஒரு மரத்தின் கிளையிலிருந்து செய்யப்பட்ட கோடரியானது அதன் தாயாகிய மரத்தையே  வெட்டுவதற்குப் பயன் ஆகிறதல்லவா?
அந்தக் கோடாரிக் காம்புகள்.

பிறந்த தாய் நாட்டின் பெருமையைச் சீர்குலைக்கின்றவர்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.2.2015

Tuesday, February 24, 2015

அல்லவை தேயட்டும்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

கூர்த்த மதிபட்டறிவுநேர்த்தியான எண்ணங்கள்அதிர்ஷ்டம் நிறைந்த 
வாழ்க்கை  .... இவை அமையப் பெற்ற ஒருவர் இந்திய அரசியலில் இருக்கிறார்என்றால் அவர் மேடம் ஜெ.ஜெயலலிதா தான்.

என்ன பேசுகிறாரோ அதை நிறைவேற்றும் துணிவு கொண்டவராகவும் 
துணிவான கருத்துக்களை துச்சமாகப் பேசும் திறன் கொண்டவராகவும் உள்ள ஒருவர்’  என்று நாடு அடையாளம் கண்ட இவருக்கு  இன்று பிறந்த நாள்.

 67 ஆண்டுகள் நிறைவு  பெற்றிருக்கிறார்.

மேடம்  ஜெ.அவர்கள் மேலும் பல்லாண்டுகள் உடல் நலத்தோடும் 
மன வளத்தோடும் வாழ்ந்திருக்க வாழ்த்துகின்றேன்.

இன்றைய  அரசியலில்  வர்  ஒரு  மிகப் பெரும் சக்தியாகத்  திகழ்வது இறைவன் இவருக்கு அளித்திருக்கும் கொடை.

அந்தக் கொடையைக்  களங்கப்படுத்தி விடாமல் கண்ணியமும் நேர்மையும் மனத் தூய்மையும் கொண்டு ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை
உருவாக்கும் வல்லமை இருந்தபோதும் இவர் அதை நிலை நாட்டாது,
வெற்றுப் புகழுரைகளுக்குள் புதைந்துபோய், துதிபாடும் அரசியல் கலாச்சாரத்துக்குக் கால்கோள் நாட்டிவிட்டதானது, இவரது அரசியல் வாழ்வுக்கு ஏற்பட்டிருக்கும் கறைபட்ட நிலையும் களங்கமும்  நிறைந்த அவலநிலைதான்’ என்பதையே அறிவுடையோர் காண்கின்றனர்.

யானை தன் தலையில் தானே மண்ணைவாரித் தூற்றிக் கொண்ட கதை
ஏனோ நம் நினைவுக்கு வருகிறது.

இதை இவர் தவிர்த்திருந்தால், இன்று ஆட்சிக்கட்டிலிலிருந்து  நீதித் தேவதையால் நீக்கப்பட்டிருக்கும் நிந்தனை ஏற்பட்டிருக்காது.

டான்ஸி  வழக்கில் பட்ட அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தவறியதுடன் இரு மடங்கு வீரியத்துடன் இவர் அரசியல் காரியமாற்றத்
தொடங்கி விட்டது ஏன்?’  என்பது நமக்கெல்லாம் புரியாத புதிர்தான்...

அது ஒரு Million Dollar Question!

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்என்பதை, இளங்கோ அடிகள் எச்சரித்துக் காப்பியம் எழுதியிருக்கும் வரலாறு அதைப் படித்தோருக்குத் தெரியும்.

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்என்பதை நிரூபிக்கின்ற மந்திரிகள் இவரிடத்தில் இல்லாது போனது துரதிர்ஷ்டம்.

வரும் பொருள் உரைத்தல் என்பது வருமானத்தை உரைப்பதுதான்என்பதாகவே இவரது மந்திரிமார்கள் அமைக்கப் பெற்று அதனால் சட்ட ரீதியான அவமானத்தையும் அறநிலை துறந்த நிலையையும்தான் இவர் பெருக்கிக் கொண்டிருக்கிறார்’ என்பதால், அது, மேடம் அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்தையெல்லாம் பின்னுக்குத்
தள்ளி விட்டு விட்டதே’  என்று வருந்துகின்றவன் நான்.

அந்த வருத்தப்பட்ட நெஞ்சோடு வாழ்த்துக்கின்ற அன்பையும் நேசத்தையும் இங்கே காட்டி, மேடம் அவர்கள், தனது அரசியல்பிழைகளை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும்  உறுதியைத் துணிவுடன் காட்டி, அதற்கான வலிவும் பொலிவும் பெற்று நீண்ட நாள் வாழ வாழ்த்துவோம்.

அல்லவை தேய அறம்பெருகும்நல்லவை
நாடி இனிய சொலின்

என்ற வள்ளுவத்தின் இனிய சொல்லினால் வாழ்த்துவோமாக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.2.2015