இன்று தமிழிசை போற்றும் தன்னிகரில்லா
இசைமேதை டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின்
பிறந்த நாள்.
அவர் நூறாண்டுகள்
இசைபட இசைபட வாழ்ந்திருக்க
உலகத் தமிழர் மையம் சார்பாக வாழ்த்துவோம்,நண்பர்களே.
--------------------------------------------------------------
டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம்
கலகல’ வெண்கல ஓசை;போர்க்
களத்தினில் வெளிப்படும் வீரம்;
சலசல அருவியின் ஓட்டம்;நல்ல
சங்கதி குழைந்த ராகம்:
பலப்பல ஆலா பணையில்
பரவசம் நல்கிடும் தாளம்;
சிலசில மேதைகள் மட்டும்
சேர்த்தே தருவார் பாட்டு!
இருக்கும் மேதைகள் எல்லாம்
இணந்தே ஓருரு பெற்று
உருக்கும் இசையை வழங்கி
உறைந்தார் ஒருவர்;உண்மை!
சிவத் தலம் சிவ சீர்காழி;
சீலர்கள் பிறந்த பூமி;
சிவத்தமிழ் பெற்ற மைந்தர்
சீர்காழிகோ விந்த ராஜன்;
அவர்தம் வழியில் நின்று
அச்சரப் பிசகில் லாமல்
தவத்தமிழ் இசையை இன்று
தரும்அவர் மைந்தர் கண்டோம்!
எவரும் போற்றும் பண்பும்
இசைத்தமிழ் காட்டும் தொண்டும்
சிவ சிதம்பரத்தின் வடிவாய்
ஜெனித்தது உலகில் உண்மை!
சிவ சிதம்பரத்தின் வாழ்வு
சீர்கா ழிக்கே பெருமை;
இவர்நூ றாண்டுகள் இருந்து
இசைபட வாழ வாழ்த்து!
இசைத்தமிழ் போற்றும் எல்லோர்
சார்பாகவும்
வாழ்த்தும்,
கிருஷ்ணன்பாலா
8.6.2013
No comments:
Post a Comment