Sunday, June 9, 2013

இராஜா.தியாகராஜன்!






முகநூலில் நற்றமிழ்ச் சான்றோனாய் வாழும்
பாவலர் திரு இராஜா.தியாகராஜன் அவர்கள்
5.6.2013 அன்று  இருபத்தைந்தாண்டுக் கால
இல்லற வாழ்வைக் கடந்தார்.

எனதினிய நண்பருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் 
தெரிவித்து எழுதப்பட்ட கவிதை வாழ்த்து இது:

இருபத்தைந்தாண்டுகள் இல்லறம் தொடர்க! 
----------------------------------------------------------------------------------
 
இருபத் தைந் தாண்டுகள் கடந்து
இல்லறப் பாதையில் இனிதே நடக்கும்
அருமைத் தமிழர்;முகநூல் வட்டம்
அறிந்து மதிக்கும் செந்நாப் பாவலர்!

இராஜாதி யாக ராஜன்; என்
இதயம் பதிந்த இனிய நண்பர்;
’இராஜாதி ராஜன்’ என்றே வாழ
இதய வாழ்த்தை இங்கே பதித்தேன்:

அன்பு நண்பனே! அறிவுத் தமிழனே!
ஆணவம் அறியா எளிய அறிஞன!;
உன்னரும் இல்லறம் ஓங்கி இருந்து;,
உன்பெயர் என்றும் நிலைத்தே இருக்க!

தமிழ்போ லினித்து தவறுகள் கசக்கத்
தரும்உன் எழுத்தின் ரசிகர்கள் யாரும்
அமிழ்தென உனது நட்பினை அடைந்தார்;
அடியேன் கூட அவ்வண்ணம் தான்!

தமிழணங் கென்னும் தாயைப் போற்றித்
தவறா துரைக்கும் நின் கவிதைகள்;
இமயச் சிகரம் ஏற்றிடும் உணர்வுகள்;
இதுதான் நினது செந்தமிழ்ப் பற்று!

என்றும் நினது இல்லறம் விரிந்து
எல்லாத் திசையிலும் நற்புகழ் அடைந்து
குன்றா வளமும் கோபுர வாழ்வும்
கொட்டிக் கிடக்கும் செல்வமும் தழைக்க!

வாழ்க்கைத் துணைவியும் வைகைச் செல்வனும்
வற்றா நதிகள் எனஉனக் கமைந்து
ஆழ்கடல் போன்ற அமைதியும் வெற்றியும்
ஆண்டவன் அருள வேண்டுகின் றேனே!



அன்புடன் வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
5.6.2013

No comments: