Saturday, September 28, 2013

போலி முகவரியாளர்களுக்கு ஒரு சாட்டை!

ண்பர்களே,

//காதலனுடன் முகத்தை மூடி
பைக்கில் செல்லும் பெண்கள
முகத்தை மூடுவது பெற்றோர்க்கு
மட்டும் பயந்து அல்ல:
அது-
அவர்களுடைய முன்னாள் காதலனுக்கும்,
எதிர்கால கணவனுக்குமாகக்கூட இருக்கலாம்..//

இப்போதெல்லாம் பைக்கில் காதலுடன் பின்னால் அமர்ந்து முகத்தை முக்காடு போட்டு முழுமையாக மூடிக் கொண்டு செல்லும் பெண்களின் சர்வ சாதாரண இயல்பு பெருகிக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் முகநூலில்  Kongu Thangam Vicky  அவர்கள் சாடி எழுதியிருக்கிறார்,தனதுபாராட்டுக்கள்.

இதுபற்றி  எனக்கும் நீண்ட நாட்களாகச் சிந்தனை உண்டு

முகத்தை மூடிக் கொண்டு  ‘இன்னார் என யாரும் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாதுஎன்று எண்ணுகிற பெண்களை, பண்பட்ட சமூகம் ஓர் இழிநிலையுள்ளவராகத்தான் அடையாளம் காணும்;காறி உமிழும்.

தமிழ்க் கலாசாரத்தைக் கடும் விஷம் கொண்டு கலக்குகிற இம்மாதிரியான பெண்கள் முகநூலிலும் பெருகி இருக்கிறார்கள்.

இதை, இங்கு போலி முகவரிகளில் உலாவும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

போலி முகவரிகளில் பெண்கள் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

முகநூலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு முக்காடு எதற்கு?

கேட்டால் ஆண்களால் தொல்லைகள் அதிகம் வருகின்றன’  என்று நொண்டிச் சாக்குச் சொல்கிறார்கள்.

பிறகுஅவர்கள் எதைச் சிந்தித்து எழுதுகிறார்கள்?’ என்று பார்த்தாலும் அவர்களுடைய பதிவுகளில் உள்ள படங்களைப் பார்த்தாலும் காம குரோத விரகத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை இட்டும் அதை ஊக்குவிக்கும் கருத்தூட்டங்களை அனுமதித்தும் பிற ஆண்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் இச்சையாகவும் தங்களை வர்ணிப்பதை அனுமதித்தும் முகநூலில் உலாவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இவர்கள் கண்ட கண்ட பயல்கள் தங்களை உச்சுக் கொட்டும் பாராட்டுக்களையும் கருத்தூட்டங்களையும் அனுமதிக்கின்றார்கள்; ரசிக்கின்றார்கள்.

தங்களின் முகப் படத்தில் ஆண்களைக் கவர்வதற்காகவே எவளாவது நடிகை அல்லது மாடல் அழகியின் படத்தைப் போட்டும் கவர்ச்சியான பெயரை .டி.யாகப் போட்டும் தங்களை மறைத்துக் கொண்டு, வலைத்தளங்களில் போலி முகவரிகளில் கவர்ச்சி வலையை வீசுக் கொண்டு,  பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் எதற்கு?
கல்யாணமான பெண்கள் அயல்மகரந்தச் சேர்க்கையில் பெரு விருப்பம் கொண்டு மேற்கொள்ளும்களவியல் ஒழுக்கம்தங்கள் கணவன்மார்களுக்குத் தெரியாது இருக்கவும் கல்யாணமாகாத பெண்கள், சந்தையிலும் சந்தியிலும் திரியும் காளை மாடுகளோடு நட்புக் கொண்டு மகிழவும் நாளை வரப் போகும் கணவனுக்குத் தங்கள்களவியல் ஒழுக்கம்தெரியாமல் போகவும்தான் இம்மாதிரியான முக்காட்டு முகவரிகளுடன் உலாவருகிறார்களே தவிர சமூக விழிப்புணர்வைத் தூண்டவோ அதில் பங்கு கொள்ளவோ அல்ல.

ஆண்களோ அதற்குச் சளைத்தவர்கள் அல்லர்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மணமுண்டுஎன்று கூசாமல் சித்தாந்தம் பேசும் கோமாளிக் காமுகர்கள்.

தங்கள் குடும்பத்துக்கும் குறிப்பாகத் தன் மனைவி,மகள்களுக்குத் தெரியாமல் இருக்கவும் திருட்டுத் தனமாக பிற பெண்களுடன் சல்லாப வார்த்தைகள் பேசி இன்புறுவதிலும்  தனி அறிவு கொண்டு போலி முகவரிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற்வர்கள்.

நாட்டுக் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இலக்கிய அறிவில் திளைக்கவும் ஆன்மீக நெறி ஒழுக்கங்களில் உயரவும் இவர்களுக்கெல்லாம் சிறிதும் எண்ணமில்லை.

இந்தப் போலி முகவரியாளர்கள் பிறன் மனை விழையும் பித்தர்களே அன்றி தமிழ் உணர்வாளர்கள் அல்லர்

இதில் வேடிக்கை என்னவென்றால்,இந்தப் போலி .டிக் கள் மூலம் போலி முகவரியுள்ள ஆண் முகவரியாளனின் வீட்டுக்காரி,அவரைப்போலவே தானும் போலி முகவரியை முடிந்து வைக்கின்றாள்.

அவள் தன் உள்ளார்ந்த விருப்பத்துக்கேற்ப,  வேறொரு போலி ஆண் முகவரியாளனுடன் சல்லாப வார்த்தை ஆடத்தான் போலி முகவரி பூணுகிறாள்.அதேபோல்தான்  அவளுடைய கண்வனும் போலி முகவரியை ஏற்படுத்திக் கொள்கிறான்.

இப்படி இவர்கள் பரஸ்பரம் போலிகளுடன் உரையாடி,உறவாடிக் கொண்டுக் கேவலத்தில் வலம் வருவதன்றி வேறு எந்தச் சுகமும் விளையப்போவதில்லை.

ஆனால்-
என்றைக்காவது ஒருநாள் போலி முகவரி பெண்ணும் போலி முகவரி ஆணும் ஒருவருக்கொருவர் நப்பாசையோடு பேசிநட்புக்கொண்டு, பிறகு Dating வைத்துச் சந்திக்க நேரும்போதுதான் தங்களுக்குத் தாங்களே செருப்பில் அடித்துக் கொள்ளும் நிலை வரக் காண்பார்கள்.

ஏனெனில் அவர்கள் இருவரும்  ஏற்கெனவே நிஜ வாழ்வில் கணவன் மனைவிகள்:போலி முகவரிகளிலோ புரட்சிக் காதலர்கள்.

உண்மையாக, இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் இன்முகம் கொண்டு இனிய வார்த்தைகள் பேசிக் கொள்ளாது பரஸ்பரம் சிடு மூஞ்சிகளாக வாழும் அதே ஜோடிகள் போலி முகவரியில் ஒருவருக்கொருவர் தங்களை மறைத்துக் கொண்டு அளாவளாவும்போது, ’அடடா என்னமாதிரியான கவிதைப் பாராட்டுகள்;கருத்துப் போதைகள், காதலின்ப விளையாட்டு வார்த்தைகள்......’

அவன் வர்ணிக்க வர்ணிக்க அவள் தன்னை முழுதுமாக அவனுக்குத் தாரை வார்க்கத் துடிக்கும் அளவுக்கு  அவர்களுடைய முகநூல் நட்பும் அன்பும் இரண்டறக் கலந்து விடுகிறது.

நிஜ வாழக்கையில் பரஸ்பரம் கசந்து கொண்டிருந்தவர்கள், இந்தப் போலி முகவரிகள் மூலம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டுகாமத்தின் கசுமால நட்பினால் சந்திக்க நேரும்போதுதான்  வெட்கம் என்றால் என்ன? என்பதை அறிகிறார்கள்.

அதைவிட இன்னொரு கேவலமான விஷயம்:

ஒரு பெண்ணின் முகவரியைப் போலியா நிஜமா? என்று சிந்திக்கத் தெரியாத ஒருவன் பெண் என்று ஒரு முகவரியைப் பார்த்து அவளுடன் நட்புக் கரம் நீட்டுகிறான். அவளும் தேபோல் அவனிடம் அடிக்கடி பேசத் தலைப்படுகிறாள். அவர்களின் நட்பு மெல்ல மெல்ல சல்லாப வார்த்தைகளால் ஒருவருவருக்கொருவர் உரசத் தொடங்கி, ஒருநாள் அந்த உரசல் எல்லை மீறி பரஸ்பரம் சந்திப்பது என்று தீர்மானமாகிறது.

அப்படி அவர்கள் மதி கெட்டு, மனம் கெட்டுப் பரஸ்பரம் சந்தித்த போதுதான் அவர்களுக்கே தெரிகிறது:தாங்கள் அப்பனும் மகளும் ’ என்பது.

எப்படி இருக்கும்? அந்தப் புத்தி கெட்ட மகளுக்கும் போக வெறி கொண்ட அப்பனுக்கும்..

ஊரெல்லாம் கூடிச் செருப்பால் அடிக்க வேண்டாம்;தங்களுக்குத்தாங்களே செருப்புப் பிய்ந்து போகும் அளவுக்கு அடித்துக் கொள்வார்கள்,அல்லவோ?

முகநூலில் உலாவரும் போலி முகவரியாளர்களே

இம்மாதிரியான கேவலம் உங்களுக்கு ஒருநாள் நிச்சயம் ஏதாவது ஒருவகையில் ஒருநாள் நேரும்.

அப்போதுஅய்யோ கடவுளேஎன்று நீங்கள் அலறாமல் இருந்தால் சரி.

இதைவிட இந்தப் போலிகளின் முகத்தில் சாட்டையை எப்படிச் சுழற்றுவது?


இவண் -
கிருஷ்ணன்பாலா
25.9.2013

No comments: