மன்மோகன் விலகுவாரா?
------------------------------------
வரும் நாடாளுமன்றத் தேர்தலைத் ‘தான் பிரதமராக இருக்கும் நிலையில்’
வரும் நாடாளுமன்றத் தேர்தலைத் ‘தான் பிரதமராக இருக்கும் நிலையில்’
சந்திக்கவோ சிந்திக்கவோ மன்மோகன் சிங் தயாராக இல்லை’ என்பது
புலனாகிறது.
இதை சோனியா ஒப்புக்கொள்வதை விட வேறு வழியும் இல்லை.
அதனால், இதை நடைமுறைப்படுத்தவும் ஓரளவு ’இமேஜ்’ உள்ள ஒரு
போலியை இடைக்காலப் பிரதமராக்கித் தேர்தலைச் சந்திக்கவும்
காங்கிரஸுக்கு நிர்ப்பந்தம் தோன்றி இருக்கிறது.
இதன் ஓரங்க நாடகத்தின் ஒத்திகைதான் ராகுலின் சுத்த சுயம்பிரகாச வேஷம்; மன்மோகன் அரசைக் கண்டிக்கும் கபட நாடகம்.
'எப்படியோ ஆளை விடுங்கடா சாமி; நான் இதை
அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடமே போன வாரம் அனுமதி வாங்கிக் கொண்டுவிட்டேன்’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார், புனிதர் மன்மோகன்.
காங்கிரஸைப் பொறுத்தவரை, வரும் நாடாளு மன்றத் தேர்தல் என்பது ஃபக்ரீத் போல.
அதில் கொழுத்த செம்மறி ஆட்டைப் பலியிட்டுத்தான் ஆக வேண்டும்; அதாவது
’பிரதமர்’ என்ற ஆட்டை
அந்த செம்மறியாக யாரை வைத்துக் கொள்வது என்பதில்
குழப்பம் ஏற்பட்டுள்ளது:
அது. ஏ.கே அந்தோணியா?
ராகுலா? ப.சிதம்பரமா? அல்லது
யார்?
இவண்-
இவண்-
கிருஷ்ணன்பாலா
29.9.2013
No comments:
Post a Comment