Friday, September 27, 2013

யார் அடுத்த பிரதமர்?

அறிவார்ந்த நண்பர்களே,

ராகுலைக் கொச்சைப்படுத்தி, நிந்தித்து மகிழ்வதல்ல நமது நோக்கம்.

அவர் இன்னும் சராசரி இந்திய அரசியல் தலைவர்களின் பக்குவ நிலைக்கே
வராதவர்.  40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே வலம் வருகிறவர்.

அவர் மிகப் பெரும் தியாக சீலர் அல்ல;‘மக்கள் நலம் ஒன்றே தனது வாழ்நாளின் லட்சியம்’ என்றெல்லாம் சிந்தித்துச் செயல்படும் அரசியல் பண்பாடும் கொண்டவர் அல்ல. ஆனாலும் இந்திராவின் பேரன்;ராஜிவின் புதல்வன்,சோனியாவின்  வாரிசு என்பதன் அடிப்படியில்தான்  எம்.பி ஆனர்; காங்கிரஸின் செயல் தலைவர்காவும் ஆனார்.

தலைமுறை தலைமுறையாக நேருவின் பரம்பரைக்கே இந்தியாவை அடிமை சாசனம் எழுதி வைத்து விட்டிருப்பதுபோல் இந்திரா காந்தியின் இறப்புக்குப் பின்னால் காங்கிரஸின் அடிமைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசியலில் எந்த அனுபவமுமே இல்லாத ராஜிவ் காந்தியைத் திடீர் சாம்பார்;திடீர் ரஸம் போல் திடீர்ப் பிரதமராக்கினார்கள்.

ராஜீவின் மரணத்துக்குப் பின்பும் அவருடைய இத்தாலிய மனைவியை , ராஜீவின் மனைவி என்ற ஒரே அந்தஸ்தை வைத்து அதே அடிமைகள் கூடித் தொழுது கட்சித் தலைவி ஆக்கினார்கள்.(சீதாராம் கேஸரி கொஞ்ச காலம் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சோனியாவை மதிக்க மறுத்து விட்ட கதை ஒரு பக்கம்)

அப்போது ராகுல்  விடலைப் பையனாக இருந்த காரணத்தாலும் காங்கிரஸுக்கு முழுமையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தாலும் மைனாரிட்டி அரசை நடத்த  நரசிம்ம ராவைக் காலத்தின் கட்டாயத்தால் பிரதமராக்கினார்கள்.

நரஸிம்மராவ் பதவிக் காலம் முழுதும் சிரிக்காமலேயே இருந்து சோனியாவைக் கலங்கடித்து விட்ட வரலாறு நாடறியும்.

கேஸரி,நரசிம்மராவ் இவர்களுக்கு முதன்மைப் பொறுப்புக் கொடுத்து கட்சியும் ஆட்சி அதிகாரப் பிடியும் தன் கையை விட்டு நழுவுவதுபோல் இருந்த சூழ்நிலையை அனுபவித்து விட்ட காரணத்தால் கட்சியிலும் ஆட்சியுலும் தன் பிடி எப்போதும் இறுக்கமாக இருக்கும் வகையில் முழுக்க முழுக்க ஜால்ரா அடிமைகளையே கட்சியின் உயர் மட்டக் கமிட்டிகளிலும் ஆட்சியில் பிரதமர் பதவி உள்ளிட்ட கேபினட் மற்றும் துணை மந்திரிகள் அத்த்னை பேரையும் வாரத்துக்கு ஒருமுறையாவது வந்து தன் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து தவறாமல் முறைவாசல் செய்யக் கூடியவர்களாகவே வைத்துக் கொள்ளத் துணிந்து விட்டவர் சோனியா.

தங்களுக்குச் சொரணையும்  வெட்கமும் வீரமும் வீவேகமும் இருப்பதாக மந்திரிகளில் ஒருவர்கூட இதுநாள் வரையிலும் நிரூபிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை நாடு பார்த்துத் தலைகுனிந்து கொண்டிருக்கிறது.

இந்த லட்சணத்தில் தனது மகன் ராகுலை எப்படியும் பிரதமராக்கத் துடித்துக் கொண்டிருக்கிற சோனியாவுக்குக் கொஞ்சம் கூட நாடு, அதன் பாரம்பரியம்,தேசத்தின் கௌரவம் என்பதில் எல்லாம் அக்கறை இல்லை.

‘கட்சியின் சார்பில் பிரதமராக இருப்பவர் அந்தப் பதவிக்கேற்ற கம்பீரத்துடனும் மனசாட்சியோடும் ஆட்சி புரிய வேண்டும்’ என்ற அடிப்படை ஞானம்கூட இந்திராவின் இத்தாலிய மருமகளுக்கு இல்லை.

இந்திரா காந்தியின் ஆளுமை அவர் ஒரு பிரதமராக இருந்து உலகை வியக்க வைத்தது போல் அதற்கு நேர் எதிர் கோணத்தில் மன் மோகன் சிங்கின் கையாலாகாத் தனம் உலகெங்கும் உணர்த்தப்பட்டு இந்தியாவின் அவமானம் வெளிச்சப்பட்டிருக்கிறது.

‘இந்த நாடு எப்படிப் போனால் என்ன? தனது கஜானா நிரம்பிக் கொண்டிருக்க வேண்டும்;தன் குடும்பம் நிரந்தரமாக இந்தியாவை அடிமைக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற சுயநல வெறி ஒன்றைத் தவிர சோனியாவுக்கு வேறு நல் எண்ணம்  இல்லை.

அதற்குரிய வாரிசாக ராகுலைப் பிரதமர் ஆக்க எந்த வழியையும் பின்பற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதை இங்கிருக்கிற கழிசடை அரசியல் தலைவர்களும் உணரவில்லை

இந்தியாவின் தொழில் வளம், நேர்மையான நிர்வாகம்,திறமை மிக்க ஆட்சி, ராணுவ பலம்,மக்களின் நல வாழ்வு இவற்றில் அக்கறை கொண்ட தலைவர்கள் இல்லாது போனது துரதிர்ஷ்டம் இந்தக் காங்கிரசாலும் சோனியாவின் தலைமையினாலும்தான் உண்டாகி இருக்கிறது.

பிரமிக்க வைக்கக் கூடிய சட்ட நிபுணர்கள், நெஞ்சம் நிமிர்ந்து நீதியைத் தீர்ப்பெழுதுகின்ற நீதி அரசர்கள், உயிருக்கு அஞ்சாத ராணுவம், மேலை நாடுகளையும் மிரள வைக்கின்ற அறிவியலாளர்கள்,அறிவுக் கூர்மை மிக்க பத்திரிகையாளர்கள், நடு நிலைமை தவறாத எழுத்தாளர்கள், கடின உழைப்பால் தொழில் துறையில் அந்நிய நாடுகளை அதிர வைக்கும் தொழில் சிந்தனையாளர்கள்,அரசு நிர்வாகத்தை அறநெறி தவறாமல் நடத்திச் செல்லும் உயர் IAS,IPS.IFS,IRS அதிகாரிகள்,மனசாட்சி மிகுந்த அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாவகியிலும் தலை சிறந்து நிற்கும் இந்தப் பாரதம் கேவலம் இந்தத் தேசத்தின் சத்து இன்னதென அறிகிலாத ஒரு இத்தாலியப் பெண்ணுக்கு அதுவும் கல்வி அறிவும் ஞானமும் அற்ற வெகு சாதாரண வெளிநாட்டுப் பிரஜைக்கு  அடிமையாகிப் போனதே? என்ற கவலையும் வருத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சினமாகவும் சீற்றமாகவும் மாறி.இந்த நாட்டில் பிறந்ததே ஒரு மகாப் பெரிய பாவமோ? என்று நினைந்து நினைந்து செத்த பிணம்போல் ஆகிக் கொண்டிருக்கிறோம்.

‘இனியாவது நாடு திருந்தாதா? நாட்டின் கேடுகள் ஒழிய நல்லாட்சி  மலராதா? திறமையும் தெளிவும் வீரமும் விவேகமும் கொண்ட தலைவன் இதன் பிரதமராக வர மாட்டானா?’  என்று நாடு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீர்பூத்த நெருப்பாய் மக்கள் நெஞ்சங்களில் அனலைப் பரப்பிக் கொண்டிருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் நரேந்திர மோதி நமக்குக் கிடைத்துள்ளார்.

நல்ல சமயம் இதை நழுவ விடுவோமா?

நாட்டை எண்ணி நரேந்திர மோதியை விரும்புங்கள் நண்பர்களே,

நமக்குள் இருக்கும் நச்சு எண்ணங்களை,மதம்,இனம்,அரசியல் மாச்சர்யங்களைப் புதைத்து விட்டு நாடு சிறக்க எண்ணுங்கள்.

நாடு நலமாகவும் பலமாகவும் ஊழல் அற்ற ஆட்சியின் கீழ் இருந்தால்தான் நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

இந்தியன் என்று எந்த வெளிநாட்டில் போய்ச் சொன்னாலும் அந்நியர்கள் மரியாதையோடு  இந்தியாவை நினைக்கும்படிச் சிந்தித்து நில்லுங்கள்;செயல்படுங்கள்.

எனவே,
கழிசடை அரசியல்வாதிகளின் பின்னே சென்று ஏமாந்து போகாதீர்கள்: நீங்கள் ஏமாறத் தயாரானால்,இதோ இந்தப் படத்தில் உள்ள விளையாட்டுப் பிள்ளைதான் உங்களை அடுத்து ஆளப் போகும் பிரதம மந்திரி.

மானங்கெடப் போவது இவர் அல்ல; நீங்கள்தான்.


பின் குறிப்பு:
ராகுலின் புகைப்படங்கள் கூகுளில் இருக்கின்றன. அவற்றில் சிவற்றை நீங்கள் இங்கே பாருங்கள்.  ‘பொறுப்புள்ள பாராளும்ன்ற உறுப்பினர்;மத்தியில் ஆளும் காங்கிரஸின் துணைத்தலைவர்; நாளை பாரதப் பிரதமர்’ என்ற கனவில் நிலை நிறுத்தப்படுபவர், எப்படிப் பொது இடங்களில் நடந்து கொள்கிறார் என்பதையும் சிந்தியுங்கள்.






இவண்-
கிருஷ்ணன்பாலா
27.9.2013


No comments: