Tuesday, September 24, 2013

மோடியைத் தீர்மானிப்பது யார்?


அறிவார்ந்த இந்தியச் சகோதர்களே,

வணக்கம்.

மோடிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 187 பார்லிமெண்ட் சீட்டுக்கலுக்கு மேல் கிடைக்காதாம்;அதனால் மோடியால் பிரதமர் பதவியை அடைய முடியாதாம்?

இதை OUTLOOK வார இதழ் சொல்லிவிட்டதென்று நான் மதிக்கக் கூடிய இஸ்லாம் நண்பர் ஒருவர் முகநூலில் பதிவு செய்திருந்தார்.

பதிவு செய்திருந்ததுடன், மோடியின் தோல்வியில் ’இறைவனின் கருணை இருக்கிறது’ என்ற  கருத்தையும் சொல்லி இருந்தார்.

மோடியை எதிர்ப்பதற்கும் ஆதரிப்பதற்கும் இந்தியனாகிய எவருக்கும் உரிமை உண்டு.

ஆனால்’மோடி தோற்பது என்பது இறைவனின் கருணையினால்’ என்று மதச் சாயத்தின் அடிப்படையில்  இங்கு எழுத முனைவது  உண்மையில் மத நல்லிக்கத்தைச் சீர் குலைக்கும் செயல் என்பதை அப்படி எழுதும் நண்பர்கள் சிந்திப்பது நல்லது.

அவர்கள் எந்த நோக்கத்தில் எழுத முனைகிறார்களோ ’அந்த நோக்கம் பாழ்பட்டுப் போகும்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இறைவனை ஒரு அற்பக் காரணத்துக்காக அடகு வைத்து, சிறுபிள்ளத்தனமாக தங்கள் அறிவிற்கேற்பவே அரசியல்,மத நோக்கத்தோடு எழுதுகிறார்கள்.

மோடி தேர்தலில் மிகப் பெரும்பான்மையோடு வென்று விட்டால் அவர்கள் நம்பும் இறைவன் சிறியவனாக விடுவானா?

இறைவனின் நோக்கத்தை அற்ப மானிடரால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்தியாவில் மதக் கலவரங்களாலும் மத வெறித்தனங்களாலும் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்காக மகிழ்கின்றவன் மனிதன் அல்ல.
அதற்காக இஸ்லாமைச் சேர்ந்தவர்கள் இந்துக்களை வெறுப்பதும் துவேஷிப்பதும் மிருகப் புத்தி கொண்டவர்கள் என்பதைக் காட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.
.
அப்பாவி இந்துக்களும் எண்ணிக்கையற்ற வகையில் இங்கே காஷ்மீரிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும்  நாள்தோறும் கொல்லப்படுகிறார்கள்.

உண்மையில் இந்தியாவில் இம்மாதிரியான மதக் கலவரங்களில் கொல்லப்படும் அப்பாவி இஸ்லாம் மக்களை விட அதிக மடங்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,ஈராக், சிரியா முதலான இஸ்லாம் நாடுகளில் அப்பாவி இஸ்லாமியர்கள்  கொல்லப்படுகிறார்கள்.

இதற்கு யார் காரணம். இஸ்லாமில் உள்ள இனப் பிரிவுகளும் அடிப்படை மத வாத வெறியும்தான் காரணம்.

ஒருவேளை,இந்துக்களோ,இந்தியப் பிரஜைகளோதான் காரணம் என்று எண்ணும் குருட்டுச் சிந்தனை கொண்டோர் சொன்னாலும் சொல்வார்கள்.

இந்தியா இன்று  பொருளாதாரத்தில் மிகவும் சிதைவுற்று ஊழல் மலிந்து போய் அதன் இறையாண்மையும் நெறியாண்மையும் உலக அரங்கில் கேலிக்குரியதாகி விட்டது.

இனியும் இந்தக் காங்கிரஸால் இதன் மீட்சியைக் கொண்டு வர முடியாது என்பது இங்குள்ள மக்களில் 60 சதவீதத்தினருக்குப் புரிந்து போய், காங்கிரஸையும் அதன் கூட்டாளிகள் எவரையும் சவக் குழியில் கொண்டு போய் எரியத் தயாராகி  விட்டனர்.

காங்கிரசின் கயமைத் தனமும் கண்டறியப்பட்ட ஊழல்,கொள்ளைகளும் இந்திய மக்களை மேலும் மேலும் கேவலமாகப் பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்றாக மன வலிமையோடும் தேசப் பக்தியோடும்  ஊழலுக்கு எதிராக  திறமை மிக்க நிர்வாகத்தைத் தரக்கூடிய  தலைவன் தேவைப் படுகிறான்.

அந்தத் தலைவ,ன் மோடிதான் என்பது  பெரும்பான்மை இந்திய மக்களின் நம்பிக்கையாக -அந்த எண்ணம் அலையாக இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த அலையில் இதன் தேசிய நீரோட்டத்தில் நெகிழ்ச்சியோடு இங்குள்ள தூய்மையான் இஸ்லாமியப் பெருமக்களும் கிறித்துவப் பெருமக்களும் இரண்டறக் கலந்து நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், மதவெறியோடு இந்தியாவை அழிக்க எண்ணும் தீய சக்திகளின் பின்னே சென்று இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிரான எண்ணமும் பாகிஸ்தானின் மீது பந்த பாசமும் காட்டும் ஐந்தாம் படையினருக்கு இது தெரிய வேண்டும்:

’இந்திய மண் நமது தாய் மண்’;’இந்தியா வளமோடும் வலுவோடும் இருந்தால்தான் நாமும் நமது சந்ததிகளும் பெருமையோடு வாழ முடியும்’ என்று எண்ணுபவர்கள் மத மாச்சரியங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ‘இந்தியன்’ என்ற இலக்கோடு மோடியை ஆதரிப்பது அவர்களுக்கு நல்லது.

அறிவுக்கும் உண்மைக்கும்  எதிராக,மத உணர்வைக் கொண்டும் போலிச் சமூக சிந்தனையைக் கொண்டும் மோடியை விமர்சிப்பவர்கள் நமது அனுதாபத்துக்குரியவர்கள்.

மோடியைத் தீர்மானிப்பது ஊடகங்கள் அல்ல; பொய்யான -குருட்டு வாதங்களும் அல்ல; இந்திய விரோதிகளும் அல்லர்!

மக்களின் மனச் சாட்சியே.

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.9.2013

No comments: