Saturday, October 19, 2013

அமரர் ஹரிதாஸ் கவுண்டர்!

அமரர் ஹரிதாஸ் கவுண்டர்
1948  -  2013
                                               
நாமக்கல் வேலகவுண்டன்பட்டி ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,படித்து,அரசியலில் ஈடுபட்டு, எலச்சிபாளையம்  பஞ்சாயத்து யூனியன் சேர்மன்’ என்ற தகுதியில் மக்களுக்கு அரிய சேவைகளைப் புரிந்தவர்.

எம்.ஜியாரின் தீவிர ரசிகர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலேயே இளம் யூனியன் சேர்மன் இவர்தான்என்று முதல அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் பாராட்டுப் பெற்றவர்.

தன் துன்பம் இன்னதெனப் பிறருக்குக் காட்டாதவர்; ஆனால்,பிறர் துன்பம் கண்டு மனம் கலங்கும் மனித நேயர்.

எப்பொழுதும் ஏழை, அனாதைக் குழந்தைகளிடத்தில்  அன்பும் கருணையும் கொண்டு மாதந்தோறும் தவறாமல்  நிதி அளித்து வந்தவர்.

’எவ்வளவு அனுப்பி வருகிறீர்கள் ?என்று வீட்டார் கேட்டால்கூட ‘அந்தக் கணக்கு உங்களுக்கு எதற்கு? என்று பதில் சொல்லி விட்டு, வலது கை கொடுப்பதை இடது கைகூட அறியக் கூடாது என்று  வாழ்ந்த கொங்குத் திருமகன்.

இதே கிழமை சென்ற சனிக்கிழமை (12.10.2013)
தன் உடலில் ஏற்பட்டிருந்த தொல்லைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் மகனை அழைத்து, தான் வழக்கம்போல் நிதி வழங்கி வரும் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு காசோலையை அனுப்பச் செய்து விட்டு அன்று மாலையே யாரும் எதிர்பாராத நிலையில் அமரநிலையை எட்டிய வள்ளல்.

உற்றார் உறவினர்களிடம் மட்டுமல்ல; தான் பழகும் நண்பர்கள்,தன்னைத் தேடிவரும் ஏழை எளியவர்கள் அத்தனை பேர்களிடத்திலும் மாறாத அன்பும் பணிவும்காட்டிப் பழகி வந்தவர்.

நோயின் துன்பம் கண்டு கொஞ்சமும் சலனமின்றி குளிர்ந்த முகம் காட்டியவாறே தன் இரு மைந்தர்களும் அருகிருக்க, அன்பு மனைவியின் முகம் பார்த்தவாறே அணைந்து விட்டது, இந்த ஹரிதாஸ் ஜோதி.

என் நட்புத் தோட்டதில் பூத்திருந்த உத்தம மலர் ஒன்று இன்று உதிர்ந்து விட்டது.

வாழ்வில் இணையற்ற பாச நட்பை இழந்து விட்டேன்.

‘மாப்பிள்ளை’ என்று உரிமையுடன் நான் அழைத்து வந்த அந்த வெள்ளை மனத்தின் வேந்தருக்கு  எனது நெஞ்சம் நினைவாஞ்சலி செலுத்தி நெகிழ்கின்றது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.10.2013

1 comment:

Unknown said...

IVARAI PONDRAVARKALAI MAKKALUKKU ARIMUGAM SITHU VAITHATHU NALLA PARATTA THAKKA SEYAL.I t is good to bring such visionaries to public light.Bala has done many good things it is one among that.Haridas was a Zamindar and done many good things which has to be brought out so that many will follow.kkrishnaswamy gounder.chennai.