Monday, October 7, 2013

தேடல்-1: உடல்,உயிர்,ஆன்மா!


ந்த உடல்,உயிர்,ஆத்மா மூன்றும் வேறுவேறுதான்.

இதைத்தான் மனம்,செயல்.வாக்கு என்கிறோம்.

உயிர் இந்த உடம்புள் இருக்கின்ற காலம் வரைமுறை செய்யப்பட்டிருக்கிறது. உயிரோடு இணைந்துள்ள உடம்புக்கான தேவைகளை அந்தக் உயிர்க்கூட்டின் உணர்வுகள்தான் தீர்மானிக்கின்றன. ஆத்மா அங்கே மவுனமாகத்தான் மனச்சாட்சியாக இருக்கின்றான்.

இந்த உடலில் உயிர் இருக்கும்வரை அந்த மனசாட்சி ஒரு முடவன்தான்;எழுந்து ஓட முடியாது. ஆனால் கூடவே இருக்க முடிகிறது. அது ஒரு ஊமைதான் ;பேச முடியாது. ஆனல் கூரிய பார்வை மட்டுமே உண்டு.

உண்மையில் ஆத்மாவின் தேவையை, அதன் மேன்மையை இந்த உடலின் உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

அதனால் இருட்டில் நடக்கும் குருடனாக மனம் இந்த உடலை இயக்குகிறது.

பசியும் காமமும் ஒன்றுதான். ஒன்று உடற் பசி;இன்னொன்று உணர்வுப் பசி.

அவற்றுக்கு இரை கிடைத்தவுடன் அவை இரண்டும் அடுத்த பசி தோன்றும்வரை அடங்கிவிடுகின்றன.

ஆனால் ஆத்மா உறங்குவதில்லை. மனசாட்சியான அது,உடலின் உணர்வுகளால் தூண்டப்படும் இழிசெயல்களைத் தடுக்க முடியாது  அழுது கொண்டிருப்பதை விட,வேறு ஒன்றும் செய்ய இயலாது.

அறிவு மிகுந்தவர்களும்  உண்மையான தேடல் மிகுந்தவர்களும் நிச்சயம் தங்கள் ஆத்மாவைக் குறைந்த பட்சம் அழாமல் வைத்துக் கொள்ளவே முனைவார்கள்.

-கிருஷ்ணன்பாலா
  7.10.2013

No comments: