Sunday, October 6, 2013

அரசியல் சதுரங்கம்:3 (மோதிக்கு முன்னூறு)



ரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அமையவுள்ள  கூட்டணி குறித்து மக்களிடையே விவாதங்களும் விசனங்களும் தோன்றி விட்டன.

காங்கிரஸுக்குப் பல இடங்களில் டெபாசிட் பறி போகும் நிலைமை; அதனுடன் கூட்டுச் சேரும் எந்தக் கட்சியும் இந்தப் பரிதாபத்தைப் பங்கீட்டுக் கொள்ளத்தான் வேண்டும்

பிஜேபிக்கு சரியான வாக்கு வங்கி இதுவரை இல்லாதிருந்த நிலைமை மாறி, நடு நிலையாளர்களும் காங்கிரஸுக்கு எதிரான எதிர்ப்பு அலையும் சேர, நிச்சயம் 15 சதவீத வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளது.

மோதியின் எழுச்சி,அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுக்கு எப்படி காங்கிரஸ் இதுவரை தமிழகத்தில் திமுக ,அதிமுக முதுகில் ஏறிப் பயணம் செய்ததோ அதுபோல் ’மோதி’ அலைவீச்சின் மீது வரும் தேர்தலில் தேமுதிக,மதிமுக, காங்கிரஸின் அதிருப்தியாளர் பிளவுக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு,கொங்கு மக்கள் தேசியக் கட்சி,IJK என்ற பாரிவேந்தர் கட்சி, மற்றும் சிறு சிறு குழுக்கள் (குறிப்பாகத் தென் மாவட்டங்களில் தேவரினக் குழுக்கள்) எல்லாம் இணைந்து காங்கிரஸுக்கு எதிரான பலம் மிக்க கூட்டணியாக  உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமையுமானால் மோதியின் அலையால் தமிழ்நாட்டில் 30 முதல் 35 இடங்கள்வரை நரேந்திர மோதியின் அணிக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.

இதேபோல், அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் கட்சிக்கு எதிராகக் கொடி பிடித்து, மோதியுடன் கை கோர்க்கும் அரசியல் சூழல் ஏற்படும் என்பது உறுதி.

காரணம் மோதிக்கு  நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதும்,காங்கிரஸ் தனது சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத அவலம் பெருகி நிற்பதும்தான்.

இதன் எதிரொலியால் அகில இந்திய அளவில் மோதியின் கரம் 300 இடங்களுக்குக் குறையாமல் எட்டும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.

காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிக அளவில் அதிருப்தியாளர்களாக மாறுவார்கள் என்று நான் முன்பே  சொன்னதில் மாற்றமில்லை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
6.10.2013

No comments: