என
ஆடுகளைக் கைவிட்டான்
மேல்சாதிக்காரன்;
மேய்ச்சலைத் தேடி
தோட்டம் தோட்டமாக
அலைந்து
தோட்டக்காரர்களால்
விரட்டி அடிக்கப்பட்ட
அந்த ஆடுகள்,
மேய்ச்சலை விடவும்
மேய்ப்பனுக்காக
ஏங்கின....
இதோ-
’நான் இருக்கிறேன்,
உங்கள் மேய்ச்சலுக்கு’
என்று
மார்தட்டிக் கொண்டு
கசாப்புக் கடைக்காரன்
ஒருவன் வந்தான்..
நல்ல மேய்ப்பன்
கிடைத்து விட்டதாய்
அந்த ஆடுகள்
மந்தை மந்தையாப் பிரிந்து
தங்களுக்கு இஷ்டமான
மேய்ப்பனிடம்
அடைக்கலம் ஆகின.
இப்போது
அந்த மேய்ப்பன் சொன்னான்:
“இனி,
நானே உங்கள் மேய்ப்பன்;
உங்களுக்குப்
பரலோக ராஜ்யம்
பக்கத்திலிருக்கிறது!”
-கிருஷ்ணன்பாலா
14.11.2012
No comments:
Post a Comment