Sunday, March 11, 2012

கருத்துப் பரவல் தேவை!

Dear Friends,


LET INDIA BE A 'LITTER FREE ZONE" BY ELECTING
Dr.A.P.J. ABDUL KALAM AS PRESIDENT OF INDIA

--------------------------------------------------------------------------
As a true Indian, each and every one  has to share this... in all manner in motivating  the selection of  Dr.APJ Abdul Kalam as our next President of India once again.

Dr APJ Abdul Kalam,the true patriot,Great Scientist, like saint and proud of India should be elected as our next President of India, again.

The Veterans of Indian political scenario  Mulayam Singh,Jayalalithaa,Mamta Banerjee,Nitish Kumar,Navin Patnaik, Omar Abdullah,Sharad  Pawar and all opposition Parties including CPM and CPI in India  should elect  Dr Kalam as their  choice for this First Citizen of India.

If  BJP put his strongest will in electing Dr.Kalam, then the most corruptible Congress can not  put his 'rubber stamp' Candidate and has to obey the majority decision of  all other opposition parties.

Thus Dr.Kalam has the chance of unanimous selection.

This will be the First time in India where the corruptive hand of Congress is going to be broken and dynasty rule is also going to be thrown into dust bin.

Let India be a 'litter free zone'  by electing Dr.APJ Abdul Kalam.

It is true motto of each and every Indian Citizen who wants honest, disciplined and well experienced leader to be our President.

LET US UNITE!

Thanks to all,
Yours,
Krishnan Balaa
------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே,
இந்தியாவின் மிகப் பெரும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சென்ற வாரம் நடந்து முடிந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முலாயம் சிங் அவர்களின் சமாஜ்வாடி கட்சி பெரிய வெற்றி பெற்றிருப்பதன் மூலம் நமது முன்னாள் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மறுபடியும் வரப் போகும் இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் அவர் நமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுகின்ற வாய்ப்புத் தோன்றி உள்ளது..


இதற்கான காரணத்தை நான் இதே பகுதியில் 7.3.2012 அன்று எழுதியிருந்தேன்.


இப்போது காங்கிரஸும் அதன் நெருங்கிய கூட்டுக் களவாணியுமான தி.மு.க வும் இனி மக்கள் மனதில் நிற்க முடியாதபடி அவர்களின் ஊழல் வெட்ட வெளிச்சமாகி விட்டதுடன், அவர்களுடன் மானமுள்ள எவரும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நிலைமையும் ஏற்பட்டு விட்டது.


சென்றமுறை கலைஞர் கருணாநிதி நினைத்திருந்தால் டாக்டர் கலாம் அவர்களையே ஒருமனதாகத் தேர்வு செய்து அப்போதே இரண்டாம் முறையாகத் தொடர்ந்து அவரைக் குடியரசுத் தலைவராய் கொண்டு வந்திருக்கலாம்.


ஆனால், சோனியாவும் கலைஞரும் திட்டமிட்டுக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாய் இருந்த காரணத்தால், தங்கள்
இஷ்டத்துக்குத் தாங்கள் விரும்பியவாறு செயல்படக் கூடியவரை ’பெண்’ என்ற தகுதியில் பெருமை சொல்லித் தேர்வு செய்ய வைத்து, அவரை ஜனாதிபதி மாளி’கை’க்குள் வைத்துக் கொண்டனர். 


இப்போது அவர் மூட்டை முடிச்சுக்களுடன் அந்த மாளிகையை விட்டு வெளியேறுவதாலும் அவர் இருந்த அந்தப் பதவியின் உயர் கண்ணியம் கருதியும் இதற்கு மேல் குடியரசுத் தலைவராக இருந்தவரின் செயல்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றேன்.


ஆனால், மிகப் பெரும் ஊழல் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமின்றி இன்றி, பிரதமர் பதவிக்கும் மிகத் தந்திரமாக அடிபோட்ட சோனியாவுக்கும் அந்தக் கொள்ளையில் பங்கு பெறுவதற்காக அவருக்கு அடிவருடிய கலைஞருக்கும் கலாம் கசப்பாக இருந்தார் என்பதால் அவரை மறுபடியும் குடியரசுத் தலைவராகத் தொடர சோனியாவும் விரும்பவில்லை; நமது ‘சுத்தத் தமிழர்’ கலைஞர் கருணாநிதியும் விரும்பவில்லை.


மறுபடியும் இந்தியாவின் குடியரசுத் தலைவராக கலாம் வந்தால், ‘தங்கள் சுரண்டல்களுக்குச் சுமூகமான பாதை அமையாது’ என்பதை நன்றாகவே புரிந்து கொண்டுதான் கலாம் அவர்களின் பெயரை இரண்டாம்முறை முன்மொழியாது தவிர்த்து அதற்கு ஒரு போட்டியை உருவாக்க முயன்றனர்.


அவர்களின் உள்நோக்கங்களில் காயப்பட்டுப் போன கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பாது கண்ணியத்தோடு வெளியேறினார்.


அப்போது மிகச் சிறந்த பார்லிமெண்டேரியனாகவும் கண்ணியம் நிறைந்த சிந்தனையாளராகவும் இருந்த சோம்நாத் சாட்டர்ஜி அவர்களையாவது அந்த உயர் பதவிக்குக் கொண்டுவரும் வாய்ப்பும் அதற்கான ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையும் இருந்தும் காங்கிரஸ் எண்ணிய சூழ்ச்சிதான் வென்றது.


கடந்த 5 ஆண்டுகளாக இந்தியப் பார்லிமெண்ட்டில் நடந்த கூத்துக்களையும் ஊழல் விமர்சனங்களையும் இதுவரை இல்லாத அளவுக்கு நாடு பார்த்தது; நாமெல்லாம் வெட்கித் தலை குனிந்தபோதும் வெட்கமின்றி வீர நடைபோட்ட நமது பிரதமரும் அவருடைய கட்சித் தலைமையும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அடித்த அத்தனை கொள்ளைகளுக்கும் புதிய அகராதி சொல்லிக் கொண்டிருந்தார்கள். 


அவர்களுக்கு உற்ற துணைவனாக,தி.மு.க அடித்த கேவலம் மிக்க
2ஜி கொள்ளைக்கு சோனியாவும் அவரது குடும்பமும்தான் ’மானேஜிங் பார்ட்னர்ஸ்’ என்பதை சுப்ரீம் கோர்ட் வரையில் பேசியாகி விட்டது.


ஆக,இனி இம்மாதிரியான கொள்ளைகளுக்குக் கடிவாளம் போட்டு, ஊழல் அற்ற, ஒழுக்கம் நிறைந்த ஆட்சியைக் கண்காணிக்கின்ற நேர்மை கொண்ட ஒருவர் இப்போது இந்திய ஜனாதிபதியாக வருவது ஒன்றே இந்திய ஆட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கும் மாமருந்து என்பேன்.


அதற்குத் தகுதி சான்றவர்தான் நமது அப்துல் கலாம் அவர்கள்.


நண்பர்களே,


இந்த உண்மையை நாம் அனைவரும் மனதில் ஏற்றி ,கட்சி வேறுபாடு கருதாமல் நமது இந்தியத் தமிழரை மறுபடியும் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நம் நாட்டின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பரிந்துரை செய்யும் அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துப் பரவலை ’ஓர் பேரலை’ போல் ஏற்படுத்தி Facebook,Twitter,Orkud எந்த சமூகத் தளமாயினும் அவற்றில் உங்களுக்கு எழுத வாய்ப்பிருப்பின் இதையே வலியுறுத்துங்கள்;உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரின் நண்பர்களிடமும் இதையே பரப்புங்கள்,இந்தப் பதிவை உங்கள் பக்கங்களில் பங்கீடு (Share) செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் முகநூல் பக்கங்களிலும் இக்கருத்தைப் பார்வையிட வையுங்கள்.


இந்திய மொழிகள் யாவிலும் இதுவே எதிரொலிக்க வேண்டும்


டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் குடியரசுத் தலைவராகி இந்தியாவுக்கும் வளமான எதிர்காலத்தை வரைமுறை செய்யட்டும். 


அதில் ‘தமிழனின் வரலாறு எழுதப்படவேண்டும்’ என்பதே எனது அவா; உங்கள் லட்சியமும் அதுவாகவே இருக்கும் என நம்புகிறேன்.
வாழ்க!


நன்றி,
இவண்,
இந்தியத் தமிழன்.
கிருஷ்ணன்பாலா
11.3.2012

No comments: