Saturday, March 3, 2012

சினம் என்னும் சிந்தனை!


நண்பர்களே,

சினம் கொள்ளுதல்குறித்தான
சிந்தனை மீது எனக்குச் சினம்தான் வருகிறது.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
என்று
வள்ளுவன் சொல்லி விட்டானே
என்பதற்காக
நானும் உயிர் மீது பற்றுக் கொண்டு
அதனைக்கொள்ளாதுவிட்டிருந்தேன்.

ஆனால் -

சிறுமைத் தனமும் சிந்திக்கின்ற அறிவும் இன்றி அரைவேக்காட்டுத்தனமான
ஆர்வக் கோளாறுகள் மட்டுமே கொண்டு
பண்பு நலம் தெரியா மூடர்களும் ஒழுக்கக் கேடர்களும்
நான் எழுதும் அறம் கண்டு சினமுற்றுச் சீண்டுகிறார்கள்.

அந்தச் சினம் -
அவர்களைக் கொல்லாது
நம்மைக் கொல்வது போல் வந்தால்,

நாம் அண்ணல் காந்தியின் அஹிம்ஸைக் கட்சியிலிருந்து விலகி நேதாஜியின் ராணுவத்தில் சேர வேண்டியதுதான்!

கொலை வாளினை எடடா;
கொடியோர் செயல் அறவே
என்று உசுப்பி விட்ட பாரதிதாசனின் கவிதைச் சீற்றம்
ஏனோ சில சமயம் நம்மைக் கவ்வத்தான் செய்கின்றது!

இவண்-
கிருஷ்ணன்பாலா
3.3.2012

No comments: