Friday, March 9, 2012

இலக்கியப் பேழையைத் திறக்க...

அறிவார்ந்த நண்பர்களுக்கு,


வணக்கம்.


’இலக்கியப் பேழை’ என்னும் ஒரு புதிய வலைத்தளத்தை ஏற்படுத்தி உள்ளேன். அது எனது பதிவுகளுக்கு மட்டுமே என்றில்லாமல் பயன் உள்ள விஷயங்களைச் சொல்லத் தெரிந்தோர் யாவரும் அதில் தங்கள் சிந்தனைகளைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதற்கான எண்ணம் மேவ இதைச் செய்துள்ளேன்.


அதற்கான விரிவான செயல்பாட்டுக் குறிப்புக்களை நண்பர்களுடன் விவாதித்து முடிவு செய்யவும் உத்தேசம்.


இதன் ஆரம்பக் குறிக்கோளைப் படித்த நண்பர் ஒருவர் சொன்னார்:


இலக்கியச் சிந்தனையில் வறுமை குன்றியிருப்போருக்கு
இது ஒரு அறிவுக் களஞ்சியம்தான்.


நான் அவர் கருத்தை ஏற்கவில்லை; சொன்னேன்:


வறுமை என்பது அறிவில் இல்லை; அது பற்றிய சிந்தனையில் நுழைவதில்தான் இருக்கிறது.


வாருங்கள்;வந்து திறவுங்கள்;
பசியுள்ளோர் புசிக்க;
ருசியுள்ளோர் ரசிக்க!


இரண்டும் அற்றோர் நல்ல வைத்தியரைத் தேட!


நட்புடன்.
கிருஷ்ணன்பாலா
9.3.2012
at: http://ilakkiyappezhai.blogspot.com

No comments: