Monday, April 30, 2012

ஆண்டவன் சொல்கின்றான்;அர்ஜுன் சம்பத் செய்கின்றார் -


நண்பர்களே,
வணக்கம்
மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்என்று 293 ஆவது
ஆதீனமாக பிடாதி  ’யோக வியாபாரிநித்தியை
292 ஆவது ஆதீனமானவர் நியமித்தது பற்றி,
நமது கடுமையான விமர்சனத்தை இங்கே எழுதியிருந்தோம்.

திரு.அர்ஜுன் சம்பத் தலைமையிலான
இந்து மக்கள்  கட்சியினர்  நமது பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீனத்தின் மரியாதையை  மீட்கும்
பொருட்டும் தெய்வீகத் தன்மையோடு கடந்த
பலநூற்றாண்டுகளாகத் தமிழும் சைவம் காத்து வந்த மதுரை
ஆதீனத்தை, ஒரு அயோக்கியக் களவாணியின் கைக்குள் சென்று விடாது காக்கும் பொருட்டும்  மரபு,வழியில் போராட்டத்தைத்
தொடங்கி உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக மதுரை ஆதீனத்தில் நடந்து வரும்
எதிர்ப்புக்கள், போராட்ட நடவடிக்கைகள் அதற்குப் பத்திரிகைகளில்
வந்த செய்திகள் இவற்றைத் தொகுத்து,இந்து மக்கள் கட்சியின்
தலைர் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் மின்னஞ்சலில் நமக்குச்
செய்தி அனுப்பி உள்ளார்.

அந்தச் செய்தியின் சாரம்சத்தைப் பார்த்தால்292 ஆவது மதுரை
ஆதீன கர்த்தரானவர் ஏதோ ஒரு வகையில் சுய நினைவின்றி,
தன்புத்தியில் நில்லாது 293 ஆவது ஆதீனமாக பிடாதியில் இருக்கும் நித்தியானந்தாவை நியமித்து இருக்கிறார் என்பதுதான் உண்மை
என உணர முடிகிறது.

நித்தியானந்தா வெட்கமும் விவஸ்தையும் கெட்டவர் என்பது
நாடறிந்த உண்மை.வழக்கு மன்றத்தில் இவர் மீதான குற்றங்கள்
சுமத்தப் பட்டு வழக்கு  நிலுவையில் உள்ளது. துறவின் மேன்மைமிக்க அனைத்து லட்சணங்களையும் துறந்து விட்டுத் தலைமறைவாகத்
திரிந்த ஒரு கிரிமினல்தானே?.

அந்த நபரை அவருக்குச் சற்றும் தொடர்பே இல்லாத இந்த மதுரை
ஆதீனம் தேடிச் சென்று அவருடைய பிடாதி ஆசிரமத்தில் சில நாட்கள்
தங்கியிருந்து அங்கேயே மதி மயங்கிக் கிடந்து அந்த மயக்கம் தீர்வதற்குள்ளாக அவசரம் அவசரமாகப் பிடாதியிலே நித்திக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

நித்தியானந்தா மிகவும் நல்லவர்;வல்லவர்எனச் சான்றிதழ் அளித்து
இந்தக் கிழட்டு ஆதீனம் பேசவேண்டிய பெருமை யாது?

தமிழகத்திலும் தென்னகத்திலும் ஏராளமான சைவ மடங்களும் மடாதிபதிகளும் பிற துறவி மடங்களூம் இருக்க,அவர்களையெல்லாம்
கலந்து ஆலோசித்து விழாவை முடிவு செய்து எல்லோருடைய
வருகையிலும் வாழ்த்திலும் நடை பெற வேண்டிய ஒரு தெய்வீக
விழாவை ஒரே ஒரு தெருப் பொறுக்கியோடு சம்பந்தம் கொண்டு
திடீர் சாம்பார்,’ ‘திடீர்  ரசம்’ போல்திடீர் பட்டாபிஷேக’த்தைத்
தீர்மானிக்க வேண்டிய அவலம் ஏன்?

மதுரை ஆதீனம் மட்டுமல்ல;எந்த ஒரு ஆதீனமும் புதிய
வாரிசை நியமிக்கும் போது கடை பிடிக்க வேண்டிய எந்த ஒரு
மரபையும் பின்பற்றாமல் மரபு மீறியவராக ,நாக்கிலும் நடத்தையிலும் நரம்பின்றிச் செயல்பட்டிருக்கிறார்  இந்த292 ஆவதுசிட்டிங்’ (Sitting))
ஆதீனம் ; இவர் நியத்திருப்பது ஒருசீட்டிங்’  (Cheating)ஆதீனம்.

இந்து மக்கள் கட்சி தலைவர்
திரு அர்ஜுன் சம்பத்
‘இதில் புதைந்துள்ள பேரங்களும் 
அவலங்களும் அம்பலத்துக்கு 
வந்தாக வேண்டும்’ என்பதை ஆண்டவன் தீர்மானித்து விட்டான்;அதை இந்த 
அர்ஜுன் சம்பத் செய்கிறார் 
என நம்புகிறோம்.

இந்த விஷயத்திலும் விஷமத்திலும் பல கோடிகள் பல கைமாறி இருப்பதாக  மக்கள் 
சந்தேகம் கொள்கிறார்கள்; கோடிகளில் கொடி
பிடிக்கும் கேடிதான் நித்தியானந்தா என்பதை கடந்த காலம்
காட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனல் நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்த மதுரை ஆதீனகர்த்தர்
பாரம்பரியம் மிக்க திருஞான சம்பந்தரின் திரு மடத்தின் பெருமைக்கு
அந்தக் கேடி,நித்தியை நியமித்ததன் மூலம்கோடிபோர்த்தி விட்டார் என்பதுதான்.

இந்த இருவரின் உறவுகளுக்குச் சட்ட ரீயாக நாம் கருமாதி
நடத்த வேண்டாமா?

எந்த மதத்திலும் செய்கின்ற பாவங்களுக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்கலாம்;பணமும் செல்வாக்கும் அங்கே அவற்றைச் சரி செய்து
விடலாம்.

ஆனால் இந்து மதம் அதை ஆமோதிப்பதில்லை நண்பர்களே.

பாவம் செய்கின்றவர் யாராக இருந்தாலும் அவர் எத்தகைய உயர் செல்வாக்கில் இருந்தாலும் செய்த பாவத்துக்கு உரிய தண்டனை நிச்சயம் உண்டு. 

பாரதி சொன்னானே “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ‘அய்யோ’என்று போவான்”

இவர்கள் போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம்!

இவண்,
கிருஷ்ணன்பாலா
30.4.2012

இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் அவர்களின் மின்னஞ்சல் செய்தி உள்ளது உள்ளவாறு,கீழே:

--------- Forwarded message ----------
From: Arjun Sampath 
>Date: 2012/4/30
Subject: இந்து அமைப்பின போராட்டம்

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததை  எதிர்த்தும், ஆதீனத்தை மீட்பதற்காகவும், தமிழகத்திலுள்ள மற்ற மடாதிபதிகளை திரட்டி, போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை தேர்வு செய்தது தொடர்பாக ஆதீனத்திடம் நேரில் இந்த பிரசனை தொடர்பாக விளக்கம் கேட்க இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர். இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பேரூர் திருப்பானந்தாள் மடாதிபதியின் தூதுவராக சுரேஷ்பாபு மட்டும் ஆதீனத்தை பார்க்க சென்றார். வெளியே வந்த சுரேஷ்பாபு, இந்துஅமைப்புகளை சேர்ந்தவர்களை வெளியே அழைத்து வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்: மதுரை ஆதீனம் சூழ்நிலை கைதியாக உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மடாதிபதிகளை ஆலோசனை செய்து ஆதீனத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரை ஆதீனத்தின் ஈனச் செயலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினரின் அறப்போர்
இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,‘ நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள் ஏற்கவில்லை. மடாதிபதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நித்யானந்தாவை நீக்கும் வரை போராடுவோம்என்றார். சீடர்கள் , போலீசார் மோதல்: ஆதீன மடத்தில் இந்து அமைப்பினர் உள்ளே இருந்த போது சீடர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு தரப்பினரும் கோஷம் போட்டனர்

இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது மடத்தின் பின்வாசல் வழியாக நித்யானந்தா காரில் புறப்பட்டு சென்றார். பின்னணி என்ன: சைவ சமயத்தை பரப்பும் நோக்குடன் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தை தமிழ் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இதன் 292,வது ஆதீனமாக அருணகிரிநாதசுவாமி இருந்தார். இளைய ஆதீனமாக பல ஆண்டுகள் பணியாற்றி, 291,வது ஆதீனம் மறைந்த பிறகு 1980,ல் ஆதீனம் பொறுப்பை ஏற்றார். சம்பிரதாயப்படி ஆதீனம் ஓலைச்சுவடி பார்த்து இளைய ஆதீனம் தேர்வு செய்யும் பழக்கம் உள்ளது. அதன்படி தான், தானும் தேர்வு செய்யப்பட்டதாக கூறி வந்தார்.

இந்நிலையில், 2004,ல் சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை துறவறம் பூணச் செய்து இளைய ஆதீனமாக பட்டம் சூட்டினார். சிறிது காலத்தில் அவரை நீக்கி மடத்தை விட்டு வெளியேற்றினார். இதன் பிறகு 8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் அவர் நியமிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு: இந்த நிலையில் பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஒரு வாரத்திற்கு முன் மதுரை ஆதீனத்திற்கு வந்து சென்றார். இதன் பிறகு சில நாட்களில் மதுரை ஆதீனம் பெங்களூர் ஆசிரமத்திற்கு சென்று தங்கினார். திடீரென்று மதுரை 293,வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

நேற்று காலையில் மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு பட்டம் சூட்டினார். அப்போது நித்தியானந்தாவை புகழும் பாடல்கள் ஒலிபரப்பபட்டன. விழாவில் மரபுபடி தமிழகத்திலுள்ள வேறு எந்த ஆதீனங்களும் அழைக்கப்படவில்லை.

அன்புடன்,
அர்ஜுன் சம்பத் 
(இந்து மக்கள் கட்சி).

No comments: