Friday, April 13, 2012

நான் எழுதின சுவிஷேசங்கள்


நான் எழுது சுவிஷேம்-30
-----------------------------------
என்னோடு ஒத்துப் போவதற்கு நீங்கள் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை:
எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம்;

என்னோடு முரண்படுவதால்
நான்
உங்களை எதிரி என்று
அறிவித்துக் கொள்ளவும் மாட்டேன்;
ஏனெனில் -
நீங்கள்
எனது நண்பராகவும் இருக்கலாம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.4.2012




நான் எழுதிய சுவிஷேசம்-31
-----------------------------------------------


எழுத்து!
எழுதுவதெல்லாம் 
எழுத்து என்பதை
நான்
ஏற்றுக் கொள்வதில்லை!

எனது
எழுத்துக்களை
எதிர் கொள்ளாதவர்களை
நான்
எதிர் கொண்டு
ஏற்றுக்கொல்லுவதுமில்லை!

என்ன செய்வது!

எனக்குத் தலை என்று
ஒன்று இருக்கிறது;
அது
எனக்குச் சுமையாகவும் இருக்கிறதே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.4.2012


நான் ஏற்கெனவே எழுதியதுதான்;1979களில் கல்கி வார இதழிலும் பிரசுரம் ஆனதுதான்.இருந்தாலும் மறுமொழி செய்கிறேன் இங்கே:

அழைப்பிதழ்கள்
--------------------------------
தாழிப்படாத கதவு;

பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் மணி பர்ஸ்;

பெண்ணின் மார்பகத்தை விட்டு விலகியிருக்கும்
முந்தானை...

இவை-

குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
12.4.2012

No comments: