Saturday, April 28, 2012

நீதி நிச்சயம் வெல்லும்





அறிவார்ந்த நண்பர்களே, 
வணக்கம்.

முன் எப்போதும் இல்லாதவகையில் உலகத் தமிழர் மையத்தில் நாம் பதிவு செய்த ‘மதுரை ஆதீனத்தின் ஈனச்செயல்’என்ற கட்டுரையை ஒரே நாளில் ஆயிரக் கணக்கான தமிழ் உணர்வாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து படித்துள்ளார்கள்.

இதிலிருந்தே மதுரை ஆதீனத்தின் அயோக்கியத் தனத்தின் மீது நம் தமிழர்களுக்குள்ள வெஞ்சினம் விளங்குகின்றது.

படித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

நண்பர்களே,

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே!”

என்று
எப்போதோ திருமூலர் சொன்ன திருமந்திரத்தை மெய்ப்பிக்க வந்த
குருடர்கள்தாம் இந்த 292 ஆவது மதுரை ஆதீன கர்த்தரும் 293 ஆவது ’மதுரை ஆதீனம்’ என பட்டம் சூட்டப்பட்டுள்ள பிடாதிப் பெருச்சாளியும்.

கூட்டிக் கழித்தால் இந்த இருவருமே 420க்கள்தாம். 
இந்தக் குருடர்கள்  எந்தக்குழியில் விழுந்தால் என்ன?

ஆனால்-

1500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட நமது  தெய்வீகத் திருமடத்தை, தேவாரம் பாடி அருளிய  திருஞானசம்பந்தாரால் தோற்றுவிக்கப்பட்ட திருஞான பீடத்தைக் களங்கப் படுத்த இவர்களுக்கு எவ்வித யோக்கியதையும் இல்லை.

இது விஷயமாக மடத்தோடு தொடர்பும் அதற்கான மரபு வழி உரிமையும் உள்ள சான்றோர் எவரேனும் வழக்கு மன்றம் சென்றால் நிச்சயம் நீதி பேசும்.

எனினும்
‘பணம் பாதாளம் வரை பாயும் என்பது பொய்; அது வேதாளம் வரையும் பாயும்’ என்று  நிரூபித்துள்ள இந்தக் கோடங்கிக் குரங்குகளின் கூட்டில், மாட்டிக் கொள்ளாத ’மாண்புடை மனிதர் யாரேனும் இதற்கு,  முன்வர வேண்டும்’ என்பதே நம் எதிர்பார்ப்பு.

நிச்சயம் வருவார்கள்: நீதி தன் மேன்மையை நிச்சயம் நிலை நிறுத்தும்.

குருட்டுக்கு வெளிச்சம் புரியாது;ஆனாலும்
இருட்டுக்கு நீதி விலகாது நண்பர்களே!

அரசு அன்றே கொல்லும்;
தெய்வம் நின்று கொல்லும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.4.2012

1 comment:

nadupangu said...

அன்பு பாலா தங்கள் பதிவு கண்டேன்.மிக அருமை.தொடரட்டும் உங்கள் பணி.
உங்கள் அன்பு சகோதரன் நடுப்பங்கு துரை.