Friday, April 27, 2012

முற்றமும் சுற்றமும்!


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

முக நூலில் ‘முகநூல் முற்றம். என்ற
குழுமத்தை நாம் நடத்தி வருவதை உங்களில் பலரும்.அறிவீர்கள்.

பிற குழுமங்களைப் போலன்றி,நல்ல விஷயங்களைப் படிக்கவும் சிறந்த விஷயங்களை நண்பர்கள் அங்கே பதிக்கவும் வாய்ப்புள்ள பகுதியாக அது பலராலும் பாராட்டுப் பெற்று வருகிறது.

அந்த ’முகநூல் முற்றத்தை’ மொழி,இலக்கியம், பண்பாடு,அரசியல் நடுநிலைக் கருத்துக்களால் யாரும் நிரப்பலாம்;அங்கே வந்து படித்து சிந்திக்கலாம் என்ற அளவில் தரத்தோடும் சிரத்தோடும் நடத்தி வருகின்றேன்.

சிலர் நான் அறிவித்த விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் கொல்லன் பட்டறையில் நுழைந்ததைப் போல் நுழைந்து பின் அதன் சூடு தாங்காமல் அலறுவது கண்டு இதை எழுத நேர்கின்றேன்.

நண்பர்களே,

அரசியல் சார்புத் தன்மைக்கும் அரசியலையே விமர்சிப்பதற்குமான இடைவெளியை உணராமல் எனது கருத்துக்களில் யாரும் உடன்பாடு காண முடியாது; நடுநிலை நீதியைப் பேணவும் இயலாது.

‘இங்கே அரசியலைச் சார்ந்து ஒருதலைப் பட்சமான கருத்துக்களை எழுத வேண்டாம்’ என்பதே எனது அறிவிப்பு. அதற்குத் தப்புரை செய்வோர் தடுமாறி விழுந்தால் யார் பொறுப்பு?

எனது எழுத்துக்கள் இங்கே உங்கள் சிந்தனைக்கு வைக்கப்படும்போது அதன் சித்தாந்த விமர்சனங்களை யாரும் செய்யலாம்;  ‘நானோர்
ரசியல்,கலை,இலக்கியப் பண்பாட்டு விமர்சகன்’ என்கிற அளவில் என் எழுத்துக்கள் இங்கே வைக்கப் படுகின்றன.

இங்கே தரமான தமிழுக்கன்றி கத்துக் குட்டித்தனமான எழுத்துக்களுக்கு இடமில்லை என்பதைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அதே சமயம் இங்கே விமர்சனத்தை வைப்போர் போலி முகவரிகளை வைத்துக் கொண்டும் முக்காடு போட்டுக் கொண்டும் உளறுவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை.

அது பாராட்டுரையாயினும் சரி; பக்குவமற்ற பசப்பு மொழியாயினும் சரி; பெயர் பதிக்கப் பெருமை பேசும் பதிப்புக்கள் ஆயினும் சரி.

இந்தமுகநூல்முற்றம்அறிவும் செறிவும் கொண்டு எழுதும் அனைவருக்கும் சொந்தம்; ஆனால் வெட்டிப் பேச்சும் வீண் பொழுதுபோக்கும் கொண்ட திண்ணைக் கூட்டாளிகளுக்கு அல்ல.


இதைப் புரிந்து கொள்ளும் நண்பர்கள் யாரும் இம் முற்றத்தின் நல்ல சுற்றமென இணைந்து எழுதலாம்;படிக்கலாம்;இன்புறலாம்.

அதன் லட்சிய நோக்கு:
பயனுள்ள கருத்துக்கள்;நாளும் இங்கே
பண்பாட்டின் எழுத்துக்கள்;படைத்து ஒரு
நயமான கற்பனையை வளர்ப்பதுதான்
நாட்டுக்கு நாம் செய்யும் நல்ல சேவை
!

என்பதுதான்.

வாருங்கள் அதன் பக்கத்தில்.வரவேற்கின்றேன்

இணைப்புக் கோர: muganoolmutram@groups.facebookcom


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
27.4.2012

No comments: