Tuesday, April 3, 2012

இவர் ஒன்றும் புனிதமானவரல்ல!



நண்பர்களே,

பொய்யும் புரட்டுத் தனமும் மிகுந்து
புத்திகெட்ட
போலிகளின் கூட்டத்துக்குப்
புரட்சித் தலைமை
என
மகுடம் சூட்டிக் கொண்டு
மக்களை ஏமாற்றும்
கபட நாடகத்துக்குப் பெயர்தான் அரசியல்
என்பதை
மேடம் ஜெ. அவர்கள்
நாட்டுச் சிந்தனை மிகுந்த
நமக்கெல்லாம்
வெட்கமின்றி
அறிவித்து விட்டார்.

இவர்
எதற்காக
சசிகலா அம்மையாரின்
கூட்டத்தைத்
தனது அந்தப்புரத்திலிருந்து
வெளியேற்றினார்?

அவர்களைப் பற்றித்
தொண்டர் குழாத்திடையே
எப்படியெல்லாம் முழங்கினார்?

பெங்களூர் கோர்ட்டில்
சசிகலா அம்மையார்
என்ன மாதிரி சாட்சியம் அளித்தார்?
பிறகு என்ன நடந்தது

என்பதை எல்லாம்
நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

நமக்கு மேல் -
தர்மம் தலை குனிந்து
பார்த்துக் கொண்டிருக்கிறது.

சசிகலா குழுமத்தை
வெளியேற்றியபோது
இவர் ஒன்றும்
புனிதம் ஆகி விடவில்லை;
இப்போது
அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதாலும்
இவருடைய அரசியலின் தரம்
மாறிவிடப் போவதும் இல்லை.

தமிழனின் தலை எழுத்து
இப்படிக் கேவலமாகப்
போய்க் கொண்டிருக்கிறதே?”

என்ற கவலை ஒன்றுதான்
இன்று நம் மனதில் கனத்துக் கொண்டிருக்கிறது?

நமது கவலை என்று தீரும்?

குரங்கு பிடித்த பூமாலையாய்
இன்றைய தமிழக அரசியல்!

யானைக்குத் தன் தலையில்
’தானே மண்னை வாரி 
இறைத்துக் கொள்வதில்’
அவ்வளவு ஆனந்தம்!

கூடவே -
ஏனோ அதற்குத் தொண்டு செய்ய
நரியின் நட்பை நாடி நத்திக் கொண்டிருக்கிறது!

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’

என்கிறார் இளங்கோ அடிகள்.

நாம்-
கவலையோடு கனத்துக் கொண்டிருக்கிறோம்.

இவண்.-
கிருஷ்ணன்பாலா
3.4.2012

3 comments:

Unknown said...

arasiyalil yaar punithamaanavar!!!!ellaame onruthaan!!!thamizhagaththil current vilaiyai kuraichchuttathaala ellorum makizhchchiyaaka irukkiraarkal.ungalaala illa, yaaraalayum TN kaappaarramudiyathu.ithu ungalukkum theriyum.

ulagathamizharmaiyam said...

உண்மைதான் திரு சுகுமார் அவர்களே,

அரசியலில் யாரும் புனிதமானவர்கள் இல்லைதான்.

ஆனால்,’இவர் நன்மை செய்வார்’ என்று தேர்தலுக்குத் தேர்தல் முடிவு செய்து ஏமாந்து போகும் பாமர ஜனங்களைப் பற்றி நாம் கவலைப் படுவது நமக்கும் ஒரு வெட்கமற்ற செயலாகவே மாறி விட்டது. என் செய்வது?

Unknown said...

இவர் நன்மை செய்வார்’ enru JJ virku ottu podavillai.srilanka tamilar issue,2G-kollai, ellaa thuraiyilum MK kudumbam pukunthu oruvaraiyum thozhil seyya vidaamal himsai seithathu ellaam sernthu MK vai veettukku anuppa JJ virku ottu pottom! JJ enna seythaalum 5 varudaththirku porumaiyaaka irukkavendum. vera vazhiyillai.