Thursday, July 4, 2013

கவின் மலர் அவர்களின் கருத்துப் பொக்கிஷங்கள்!







றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
நேற்று (3.6.2014) பெண்ணியம் குறித்து முகநூலில் திருமதி Geetha Narayanan என்பவர் ஒரு கருத்தை எழுத, அது என்நியூஸ் ஃபீடுக்கு வந்தது.

அதற்கு எனது கருத்தூட்டத்தைக் கண்ணியமான முறையில் பதித்தேன். அதன் பிறகு………

யாரோ தமிழ்ப்பெண்ணாம் (?) விலாசினி என்பவர் மூக்கை நுழைக்க, நான் அந்த மூக்கை எனது எழுத்தால் நறுக்க கவிதாயினி (இனித்தான் கவிதா என்றுதான் கேட்க வேண்டும்) என்னும் கவியரசி சொர்ணவல்லி என்பவர் அங்கே நுழைந்து புரட்சி முழக்கமிட, தமிழ்நாட்டின் ஒப்பற்ற(?) தலித் இயக்கப் போராளியும் பரபரப்பு உமன் ஜர்னலிஸ்டுமான சகோதரி கவின் மலர் அவர்கள் தனது காழ்ப்புணர்வை எப்படியோ காட்டியாக வேண்டும்என்ற துடிதுடிப்பில் இடையே புகுந்து தூள் பரத்திய கருத்துப் பொக்கிஷங்களை (?) நான் எழுத்து என்னும் துடைப்பத்தால் அள்ளிக் கொட்ட படாத பாடு பட, இறுதியில் முதல் பதிவை எழுதிய மேடம் கீதா நாராயணன் அவர்கள்தயவு செய்து இங்கிருந்து வெளியேறுங்கள்என்று தீர்ப்பு வழங்க நமது நியாயமான கேள்விகள் கேட்பாரின்றிப் பரிதாப நிலையில் அனாதையாகி விட்டன.

எந்தக் கருத்தை முன் வைத்தேனோ அதற்கு உணர்வு பூர்வமாகப் பதில் உரைக்க, இந்தப் போலிப் பெண்ணீயவாதிகளுக்கு இயலவில்லை;  “எங்களை யாரும் - குறிப்பாக ஆண்கள் யாரும் இங்கு வந்து கேள்விகள் கேட்க உரிமையில்லை. எங்களை எதிர்ப்போரையும் ஏளனம் செய்வோரையும் நாங்கள் பொறுப்பதுமில்லை; நட்பு பூணுவதும் இல்லைஎன்பதைத் தெளிவாக அவர்கள் கூட்டணி போட்டுக் கொண்டு சொல்லி விட்டனர்.

இதை எனது பகுதியில் நேற்று மாலை தனிப் பதிவாக இட்டு நான் எழுதும்போது இந்தப் பெண்மணிகளின் பெயரைக் குறிப்பிடாமல்தான் எழுதுவதாகத்தான் சொல்லியிருந்தேன்.

ஆனால், விவாததுக்குக் காரணமான திருமதி கீதா நாராயணன் அவர்கள் எனது பதிவைப் பார்த்து விட்டு, தான் ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கத் தலைப்பட்டார்கள். பட்டதுடன் எனது அலைபேசியில் கூப்பிட்டு, சமாதானமும் பேசினார்கள். ”எனக்கு அந்தப் பெண்மணிகளிடத்தில் நேரிடைத் தொடர்பு ஏதுமில்லை. அவர்கள் எழுதுதிய கருத்துக்கும் தனக்கும் சம்மதமில்லை; தனக்கு இது போன்ற சர்ச்சைகளில் நுழையவும் இஷ்டமில்லை;தானுண்டு தன் வேலையுண்டு இருந்த நிலையில் என் மனதுக்குப் பட்டதை எழுதினேன்;அதில் நீங்கள் கோபம் மேலும் மேலும் எழுதி விஷயத்தைப் பெரிது படுத்த வேண்டாம்என்று கேட்டுக் கொண்டார்.

நான் சொன்னேன்: நீங்கள் எழுதியதற்கு நான் எழுதிய கருத்தூட்டதில் என்ன தவறு? சரியான கோணத்தில்தானே இருந்தது, பிறகு சம்பந்தமில்லாமல் எனது கருத்துக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல் நீங்கள் மூவரும் கூட்டணி போட்டுக் கொண்டு குதர்க்கம் பேசியதுடன் என்னை அங்கிருந்து விலகிப் போகும்படிச் சொன்னதும் ஒழுக்கம் கெட்ட பெண்களாயினும் அவர்களுக்குக் குரல் கொடுத்து ஆதரிப்பேன்;அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லைஎன்று நீங்கள் சொன்னதும் சரியா? என்றும் உங்களோடு எத்தகைய குணாதிசயம் கொண்டவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு கொக்கரிக்கின்றார்கள் என்பதை முகநூல் வட்டம் அறியத் தருவது எனது கடமை; அதை நான் எழுதுவேன்;அங்கு வந்து வாதம் செய்யுங்கள்;அங்கே உங்களைப்போல் பின் வாங்கிக் கொண்டுவிலகிப் போங்கள் என்று சொல்ல மாட்டேன்என்றும் சொன்னேன்.
விடாது என்னிடம் தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டே தொடர்ந்து சம்பந்தமற்ற பேச்சையே வளர்க்க யத்தனித்த மேடம் கீதாத நாராயணன் அவர்களிடம் நான்  சொல்லிவிட்டு அலைபேசியைகட்செய்ய நேர்ந்தது.
பிறகும் விடாது எனது பதிவில் வந்து (நேற்றைய பதிவைப் பார்த்தவர்களுக்கு இது புரியும்) என்னோடு வேறு ஒரு கோணத்தில் தன்னிலை விளக்கம் அளித்து கொண்டே வந்தவர் பின் அமைதியாகி விட்டார்.

நான் இந்தக் கருத்தாடல்களை வெறும் வீண் சண்டைக்கோ,விளம்பரத்துக்கோ இங்கே வைக்கவில்லை.கண்ணியம் அற்ற வகையில் ஜாதி பின்புலத்தையே குறிக்கோளாகக் கொண்டு தலித்துக்களை இங்கு பிற சாதிகள் மேலாதிக்கம் செய்கின்றனர்என்ற விஷமத்தனமான கண்ணோட்டம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு,பத்திரிகைப் பின்புலத்தையும் தவறாகப்பயன் படுத்திக் கொண்டு சகட்டு மேனிக்குத் தன்னைப் புகழாதவர்களையெல்லாம் தனது விரோதிகள் என்று கொஞ்சம் கூட கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவராய் எழுதியும் பேசியும் வருகின்ற சகோதரி, கவின்மலர் அவர்களின் சிந்தனை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் இருக்கிறது என்பதை முகநூல் வாசகர் வட்டம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்என்பதற்கே இங்கு அதை வைக்கின்றேன்.

இங்கே அவர் என்னுடன் அறிவுக்கு பொருந்தாத கருத்துக்களை வெளியிட்டு, வக்கிரப்பார்வையோடு வாதிட்டதுடன், தமிழ்ப்பண்பாட்டின் ஆதார சக்திகளில் ஒன்றாய்ப் போற்றப்படும் கண்ணகி குறித்து அவராகவே அவரச,ஆத்திரத்தில் சொன்ன அவமானகரமான  கருத்தூட்டம் என்ன என்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் சிந்திக்க வேண்டும்

திரு கிஷோர் அவர்களின் பதிவுகளில் எல்லாம் புகுந்து அவரை உற்சாகப்படுத்தும் ரசிகனாம் நான்.

நான் அங்கு எழுதிய கருத்துக்கும் கிஷோருக்கும் என்ன தொடர்பு? எனது நண்பர்களின் பட்டியலில் கிஷோர் இருப்பதற்கும் அவருடைய எழுத்துக்களில் உள்ள தீரத்தையும் சாரத்தையும் குறிப்பிட்டு நான் சில கருத்துக்களைச் சொல்வதற்கும் இவருடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?

எல்லோரும் தன்னையும் தனது கருத்துக்களையும் மெச்சிப் புகழ வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கும் இந்தப் பத்திரிரிகையாளர், தொடர்பற்ற விஷயங்களில் என்னை இணைத்து விவேகமற்றுப் போய்
விமர்சிக்கின்றாரே? தன்னையும் பிறர் அப்படித்தானே விமர்சிக்கின்றார்கள் என்று வருந்தும் இவர். இதில் மட்டும் தானும் அவ்வாறே மனச்சாட்சியில்லாமல் எழுதுவது ஏன்? சரியா? என்ற சிந்தனை யில்லையே?

இது போன்ற பலப்பல கேள்விகள் உண்டு; அவற்றை எல்லாம் இங்கு எழுதுவதை விட இன்னொரு தனி கட்டுரையில் எழுதுவது சால்பு என குறைத்துக் கொள்கிறேன்.

இங்கே திருமதி கீதா நாராயணன் (Geetha Narayanam) Kavin Malarகவின்மலர், கவிதா சொர்ணவல்லி(Kavitha Sornavalli) மற்றும் சில பெண்கள் எம்மாதிரியான கூட்டணி வைத்துக் கொண்டு பாமரப் பெண்களையும் பாதிக்கப்பட்ட பெண்களையும் ஈர்த்துக் கொண்டு பெண்ணீயம் பேசுகிறார்கள் என்பதைக் கட்டாயம்நல்ல - பண்பட்ட சமுதாயம் நாட்டுக்குத் தேவைஎன்போர் அறிய வேண்டும்.

பெண்மை வாழ்க! என்று கூத்திடுவோமடாஎன்று பாரதியைப் படித்தவர்களும் பண்புமிக்க அறிவுடையோரும் நிறைந்துள்ள சபையில் இம்மாதிரியான பெண்மணிகள் செய்யும் விஷமத்தனமான கருத்தாடல்கள் கண்டிக்கப்பட வேண்டும். இவர்களின் பொய்ம்முகங்களும் போலிச் சித்தாந்தங்களும் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும்.

பத்திரிகையாளர் என்ற வகையில்  பார்க்கப்படும் கவின்மலர் போன்றோர் கண்ணியமான எழுத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும்சகட்டு மேனிக்குஎல்லோரும் ஓர் நிறை;எல்லோரும் ஓர் விலைஎன்று ஜாதீய உணர்வைக் கொண்டு எழுதக் கூடாது;பேசக் கூடாது

தரம் அறிந்து பேசவும் சிந்திக்கவும் தன்னை நடுநிலையும் நியாயமும் மிக்க பத்திரிகையாளர் என்று நிரூபிக்கவும் முன் வர வேண்டும்.
இதோ கவின் மலர் அவர்கள் என்னைத் தரமற்ற வகையில் விமர்சித்து கொக்கரித்த கருத்து விவாதம்!


(இதை விவாதம் என்று நாகரிகமாகத்தானே சொல்ல வேண்டும்?)
-------------------------------------------------------------
Geetha Narayanan:
இணையம் ஒரு மிகப் பெரிய அரசியல் வெளியைத் திறந்திருக்கிறது.அதை பெண்களிடமிருந்து பறிக்க எத்தனை முயற்சிகள்...நான் சமைத்தேன்,குழந்தைகளைப் பார்த்துக் கொண்டேன் என்று மட்டும் எழுதினால் பிரச்சினையே இல்லை பாருங்கள்.அவதூறு செய்யப்டும் பெண்களோடு நமக்கு கருத்தொருமை இருக்கிறதோ இல்லையோ இதை ஒரு வன்முறையாகக் கருதி நம் குரலைப் பதிவு செய்வது மிக முக்கியம்.அது சுய மரியாதை உள்ள பெண்களின் கடமையும் கூட!
Geetha Narayanan:  
(மறுபடியும் கூடுதல்பதிவாக): I support all the women who face /have faced violence on internet.The list is very long!

Krishnan Balaa:  தவறில்லை; ஆனால் பரதநாட்டியக் கலைஞருக்கும் காபரே காரிகளுக்கும் உள்ள வித்தியாசம் அறிந்து குரல் கொடுங்கள்.


தமிழ்ப்பெண் விலாசினி:  @krishnan bala : என்ன தீர்க்கமா யோசிக்கிறீங்க??? வெளங்கிடும்! 

Krishnan Balaa:@தமிழ்ப்பெண் விலாசினி : ‘ ....தீர்க்கமாக யோசித்தாலே விளங்கிடும்’ என்ற உண்மையை விளங்க வைக்கின்றீர்களா? Good Teacher!

Geetha Narayanan: என்னைப் பொறுத்தவரை பரதநாட்டியம் உயர்வும் இல்லை.கரகம் தாழ்த்தியும் இல்லை.இருவரும் கலைஞர்களே.இருவரும் பெண்களே.
Geetha Narayanan: அனைவருக்கும் மாண்பு,மனித உரிமைகள் உண்டு.

Krishnan Balaa:
தொழில் முறையில் அனைவருக்கும் சம மதிப்பீடு என்பதில் எனக்கு ஒன்றும் பேதம் இல்லை; ஆனால்,தனிப்பட்ட ஒழுக்கமும் பண்பும் கெட்ட பெண்களையும் பண்புநிலை தவறாப் பெண்களையும் பிரித்துணர்ந்து குரல் கொடுக்கச் சொன்ன எனது கருத்தில் நீங்கள் பேதம் காணக் கூடாது.  

Krishnan Balaa:எனது பக்கத்தின் இன்றைய பதிவு கூட இதை முன்கூட்டியே சொல்லி இருக்கிறது என்பதையும் அறிக.

Kavitha Sornavalli: பெண்களை அவமான படுத்துற பேஜ்ல விழுந்து விழுந்து லைக்கும் காமன்ட்டும் ஆதரவு கடிதங்களும் எழுதுபபவர்கள் எல்லாம் எப்படி நம்முடைய பக்கத்திலும் வந்து பேசுகிறார்கள் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியையும் ஒரு சேர அளிக்கிறது

Geetha Narayanan: : எது பண்பு நிலை என்பதை ஆண்கள் தீர்மானிப்பதுதான் சிக்கல்.

Kavin Malar கவின் மலர்: கிருஷ்ணன் பாலா என்பவர் கிஷோர் கே.ஸ்வாமியின் ரசிக கண்மணி அவர். பின் எப்படி பேசுவார். அங்கே அந்த ஆளுடன் சேர்ந்து  இவர் பேசிய பேச்சுக்களைப் பார்த்தால் தெரியும்.

Kavitha Sornavalli: என்னைப் பொறுத்தவரை பரதநாட்டியம் உயர்வும் இல்லை.கரகம் தாழ்த்தியும் இல்லை.இருவரும் கலைஞர்களே.இருவரும் பெண்களே. ///

கீதா அவர் சொல்ல வர்றது கரகம் கூட இல்ல ! காபரே காரிகள் ! ஆஹா என்ன ஒரு வார்த்தை பிரயோகம் ! அட அட

Geetha Narayanan:
இருவருக்கும் பசித்த வயிறு கவிதா.அவர்கள் பக்கம் நிற்போம்.கவிதா.

Kavin Malar கவின் மலர்:   மஞ்சள் எழுத்துக்கு ரசிகரே! காபரேகாரிகளையெல்லாம் எதுக்கு உங்க மெயிலிங் லிஸ்டுல வைத்து நீங்க எழுதும் குப்பைகளை எல்லாம் படிக்க அனுப்பினீங்க இத்தனை நாளா? உங்களைப் பத்தி தெரியும். தர்மபுரி விஷ்யத்தில் நீங்கள் எந்த லட்சணமாக எழுதினீர்கள் என்பதை பார்த்தேனே. உங்களுக்கு ஏற்ற பக்கம் கிஷோரின் பக்கம்தான். அங்கே சென்று கமெண்ட் போடுங்கள்.
   
Kavitha Sornavalli: :@Geetha Narayanan: கீத்ஸ் ! அவருடைய அந்த வார்த்தை பிரயோகம் அத்தனை அருவருப்பு ! அது என்ன காபரே காரிகள் ? எவ்வளவு கேவலமாக இருக்கிறது பாருங்கள் !
தமிழ்ப்பெண் விலாசினி:  "ஒழுக்கம்" "பண்பு நிலை" இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை தான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த ஆண் சமுதாயத்தில் இந்த வார்த்தைகள் பெண்களுக்கெனவே யோசிக்கப்படுவதாகவும், அவளின் உடல் சார்ந்தே இவை குறிக்கப்படுவதாகவும் உண்ர்ந்தேன். அதனால் நான் இந்த வார்த்தைகளுக்கும் அதை 'பயன்'படுத்தும் ஆண்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. Geetha Narayanan Pls forgive me for writing on your page without your permission..

Geetha Narayanan: you are welcome vilasini.

Kavitha Sornavalli:  @Kavin Malar கவின் மலர், கவின் ! இப்போ பாருங்களேன் ! அந்த கிசோர் பேஜ் க்கு போய் - கவிதா மேடமும் கவின் மேடமும் இப்படி எழுதிட்டு இருக்காங்க உங்கள பத்தி ! அப்படின்னு இத ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு அவங்கள உச்சி குளிர வைப்பாங்க பாருங்க 

Geetha Narayanan: @krishnan bala we cannot take the authority of being a moral police to anyone's life.lets end the discussion here. 

Krishnan Balaa:@Kavitha Sornavalli://பெண்களை அவமான படுத்துற பேஜ்ல விழுந்து விழுந்து லைக்கும் காமன்ட்டும் ஆதரவு கடிதங்களும் எழுதுபபவர்கள் எல்லாம் எப்படி நம்முடைய பக்கத்திலும் வந்து பேசுகிறார்கள் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியையும் ஒரு சேர அளிக்கிறது// 

... கச்சைக் கட்டிக் கொண்டுஆண் என்றும் -பெண் என்றும் பேதத்தை வளர்த்துக் கொண்டு இங்கே முகமிட்டுள்ளீர்கள் என்பது இப்போது புரிகிறது. எனது News feedல் வரும் பதிவுகளுக்கு மட்டுமே நான் கருத்தூட்டம் இடுவது வழக்கம். கருத்தை எதிர்கொள்ளத்தெரிந்தவர்கள் அதிர்ச்சி அடைய மாட்டர்கள்;வரவேற்பார்கள். முகநூல் அதற்குத்தான் வாய்ப்பளித்திருக்கிறது சகோதரி. மிரளாமல் பேசப் பழகுங்கள்.

Kavitha Sornavalli:  /Krishnan Balaa //47 நிமிடங்களுக்கு முன்பு தன்னம்பிக்கையும் தளரா பண்பு நெறியும் கொண்ட பெண்கள் ஆணாதிக்கம்,சாதி வெறி என்றெல்லாம் சண்டாளத்தனம் பேச மாட்டார்கள்!

அதேபோல் அறிவும் ஒழுக்கமும் உண்மையும் கொண்டு வாழும் எந்த ஆடவரும் பெண்களை இழிவுபடுத்திப் பேச மாட்டர்கள்; சாதியுணர்வோடு செயல்படவும் மாட்டார்கள்.

சாதிகெட்ட பெண்களும் நீதி கெட்ட ஆண்களும்தான் இங்கு இனவெறி,பால்வெறி கொண்டு உளறல் பதிவுகள் மூலம் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.//

அட பெருமாளே ! இந்த மனுஷன் பக்கத்துக்கு போனா - இது என்ன இவ்ளோ மோசமா இருக்கு ! வயசுக்கு ஏத்த மாதிரி கூட இந்த கிருஷ்ணன் பாலா எழுதலையே @Kavin Malar கவின் மலர்:@ Geetha Narayanan

Kavitha Sornavalli: //பக்கத்திலும் வந்து பேசுகிறார்கள் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியையும் ஒரு சேர அளிக்கிறது// ... கச்சைக் கட்டிக் கொண்டுஆண் என்றும் -பெண் என்றும் பேதத்தை வளர்த்துக் கொண்டு இங்கே முகமிட்டுள்ளீர்கள் என்பது இப்போது புரிகிறது. எனது News feedல் வரும் பதிவுகளுக்கு மட்டுமே நான் கருத்தூட்டம் இடுவது வழக்கம். கருத்தை எதிர்கொள்ளத்தெரிந்தவர்கள் அதிர்ச்சி அடைய மாட்டர்கள்;வரவேற்பார்கள். முகநூல் அதற்குத்தான் வாய்ப்பளித்திருக்கிறது சகோதரி. மிரளாமல் பேசப் பழகுங்கள்.//

வரவேற்கிற மாதிரி நீங்க என்ன கருத்து எழுதி இருக்கீங்க சார் யார பார்த்தும் மிரலுற பழக்கம் எங்களுக்கு இல்ல சார் நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகி எழுதி இருக்கீங்க! 

Geetha Narayanan: i have to take a break. i ll come back after an hour.

 Krishnan Balaa:@Kavin Malar கவின் மலர்: //கிருஷ்ணன் பாலா என்பவர் கிஷோர் கே.ஸ்வாமியின் ரசிக கண்மணி அவர். பின் எப்படி பேசுவார். அங்கே அந்த ஆளுடன் சேர்ந்து இவர் பேசிய பேச்சுக்களைப் பார்த்தால் தெரியும்.// அம்மணி.... நீங்கள் கருத்து வெளியிட்டிருப்பதைப்பார்த்தால் நான் ஏதோ இங்கு வந்து உங்களிடம் எல்லாம் வருத்தம் தெரிவிப்பதைப்போலும் எனது பதிவுகளை மறைத்துக் கொண்டு பேசுவதும்போலும் குறிப்பிடுகிறீர்கள்; நான் கிஷோரின் ரசிகக் கண்மணி என்ற மதிப்பீட்டையும் வழங்கி இருக்கிறீர்கள். நான் கிஷோருக்கும் முன்னதாக போலிச் சித்தாந்தவாதிகளை,புரட்டு எழுத்தாளர்களைப் புரட்டி எடுத்து எழுதி வருகின்றவன் என்பது உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்என்பது போல் ஒரு கருத்தை எழுதுகின்றவனின் நட்புப்  பட்டியலில் இருக்கின்றவர்களை எல்லாம் உங்கள் கருத்தின் எதிரிகள் என்று மிரண்டு போய் UNFRIEND செய்து கொண்டபோதுதான் உங்கள் சிந்தனைத் திறனின் அளவுகோல் என்ன?’ என்பது புரிந்தது. எல்லோரையும் உங்கள் பின் அணி திரண்டு நிற்கச் செய்ய வேண்டும் என்ற வெறி உங்களைப் போன்ற பத்திரிகையாளருக்கு வந்தது குறித்தும் எழுதியிருந்தேனே...அதையும் இங்கே சொல்ல வேண்டியதுதானே? நான் எவருக்கும் எதிரியும் இல்லை;கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவனும் இல்லை’ என்று எழுதியதை மட்டும் ஏனோ வசதியாக மறந்து விட்டீர்கள்!.

Krishnan Balaa: @ Geetha Narayanan // எது பண்பு நிலை என்பதை ஆண்க்ள் தீர்மானிப்பதுதான் சிக்கல்.//  அப்படியானால் நம் பண்டைய இலக்கியங்களைப் படைத்த ஆன்றோர்கள் வகுத்த,  பெண்களின் இலக்கணம் என்ன என்பதை உணராதோருக்கு மலச் சிக்கல்தான்.!

Kavin Malar கவின் மலர்:: கற்புக்கரசி கண்ணகி என்று ஒரு பேஜ் இருக்கு பேஸ்புக்கில். போய் அதுக்கு லைக் போட்டு அதில் எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை. இங்கே எங்களை விட்டுடுங்க.. 


Geetha Narayanan:
I don't want to discuss further.But truth and being upright are the values I believe in.That's same for women and men.no one has any right to dictate what women should do.lets stop it here krishnan bala

.Krishnan Balaa: @Kavitha Sornavalli //வரவேற்கிற மாதிரி நீங்க என்ன கருத்து எழுதி இருக்கீங்க சார் யார பார்த்தும் மிரலுற பழக்கம் எங்களுக்கு இல்ல சார் நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகி எழுதி இருக்கீங்க//// Good Joke... எனது தமிழை எல்லோரும் படித்து எளிதில் அர்த்தம் கொள்ள முடிவதில்லை. நீங்கள் அதில் விதி விலக்கு இல்லை என்பதைத்தான் காட்டியிருக்கிறீர்கள்.

Kavin Malar கவின் மலர் அடடா..என்ன அழகு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. சார்..கண்ணகி பேஜ்ல உங்களைக் கூப்பிடுறாங்க. கிளம்புங்க.

Kavitha Sornavalli:: ஆவ்வ்வ்வ்வ் ! என்க்கு அவ்ளோ டேமில் தெர்யாத் சார் !

Kavin Malar கவின் மலர்: காபரேகாரிகளுக்கு கண்ணகி எப்படி பிடிக்கும் சார்?

 Krishnan Balaa: @Kavin Malar கவின் மலர்:ஏன் உங்களுக்குக் கண்ணகி என்றாலே கடுப்பேற்றுகிற விஷயமோ?

Geetha Narayanan: : Pl lets stop!kavin kavita .let him leave.

Geetha Narayanan:  i'm forced to remove your comment krishnan bala!

Geetha Narayanan::  pl why don't you leave?

 Krishnan Balaa: ம்ம்... சரி...இது உங்கள் பக்கம்; எனது நியூஸ் ஃபீடில் வந்த கருத்துக்கு பதிலூட்டம் இட்டேன். அதற்குப் பதில் அளிக்கும் திறன் இல்லாமல் எதிர்க் கருத்தே சொல்லக் கூடாது என்றஆதிக்க உணர்வுடைய கூட்டம்இது என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
கற்றாரோடு கருத்தாடுவதே எனது இயல்பு
திருமூலர் தெளிவு படுத்தியகுருடும் குருடும் குருட்டாம் ஆடி; குருடும் குருடும் குழி விழுமாறேஎன்ற உண்மையின்படி நான் இந்தக் குழியில் விழுவதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. நீங்கள் தாராளமாக ஆடுங்கள்; இந்த ஆட்டத்துக்கு இனி வர மாட்டேன்.

Geetha Narayanan Thanks! 

(இதன்பிறகு நான் இப்போது அவர்களின் பக்கத்திலிருந்து நாகரிகம் கருதி விலகி விட்டேன்; அதன் பிறகு நடந்த உரையாடல் வருமாறு;) 



Geetha Narayanan:
கிருஷ்ணன் பாலா.யாரையும் மட்டம் தட்டுவது என் வழக்கமல்ல.ஆனால் சம்பந்தப்பட்டவரின் மன உணர்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் என்னென்ன வார்த்தைகளைப் பயன் படுத்துகிறீர்கள்.இன்னொருவரைப்பற்றி இந்த அபிப்பிராயங்களைச் சொல்ல உஙகளுக்கு ஒரு உரிமையும் கிடையாது.கவின்மலரின் கட்டுரையில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை அவருக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். அவ்வளவே.எந்தப் பெண்ணைப் பற்றியும் கருத்துச் சொல்ல உங்களுக்கு உரிமையில்லை.

Tiruchirappalli Sivashanmugam://கிருஷ்ணன் பாலா.யாரையும் மட்டம் தட்டுவது என் வழக்கமல்ல.ஆனால் சம்பந்தப்பட்டவரின் மன உணர்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் என்னென்ன வார்த்தைகளைப் பயன் படுத்துகிறீர்கள்.இன்னொருவரைப்பற்றி இந்த அபிப்பிராயங்களைச் சொல்ல உஙகளுக்கு ஒரு உரிமையும் கிடையாது.கவின்மலரின் கட்டுரையில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை அவருக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். அவ்வளவே.எந்தப் பெண்ணைப் பற்றியும் கருத்துச் சொல்ல உங்களுக்கு உரிமையில்லை.// I too agree with Krishnan Bala sir. I think many had misunderstood his writing. He is pointing two things:
1. Justice
2. Discipline
Justice must be done for woman; and the wrong doing women folk should be punished.

Is there anyone to say that the wrong doing woman should not be punished?
We have every right to criticize the crime irrespective of the gender!
Hope this helps!

Geetha Narayanan:  my simple statement is you don't have any right to pass a judgement on a person who is no way connected to u.we all have sense of justice and discipline.bye

Tiruchirappalli Sivashanmugam:Hello Geetha Narayan, this is a nation, not a multinational company. If something goes the wrong, we have granted rights to punish, even capital punishment too! What is the right which you are talking about?




Tiruchirappalli Sivashanmugam: Freedom does not mean lack of responsibility!!!

Geetha Narayanan:  i don't think u understand the context about which we are talking about.


Tiruchirappalli Sivashanmugam:Okay No problem.... But, it will take long time for you people to understand the social dynamics.

 

Geetha Narayanan: I have worked in social development sector for 23 yearsi.With my experience on social research and training I understand social dynamics quite well.we are talking about an issue of abuse.if you think you need to support the abuser i'm not interested in discussing.read the entire conversation.he has done name calling to women just because they have put forward a different perspective.you don't know the context.this is not a general discussion.our values,perspective,discipline everything is intact..

(இத்துடன் அந்த மேடை வாதம் முற்றுப் பெறுகிறது. தெளிவுதான் முற்றுப் பெறவில்லை) 

இவண்-
கிருஷ்ணன்பாலா
4.7.2013

1 comment:

சிவ குமார் said...

இவர்கள் பத்திரிகையாளர்களா..? இவர்கள் பணிபுரியும் பத்திரிகை சத்தியமாய் 'உறுப்படும்'...?