ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உச்ச நீதிம்னறத் தலைமை நீதிபதியாக தமிழர் ஒருவர் இன்று பதவி ஏற்றுள்ளார்.
அவரது பதவிக் காலத்தில் நேர்மையும் சத்தியமும் தர்மமும் தலை நிமிர்ந்து பேசப்பட்ட வரலாறு வடிக்கப்பட்டு, இந்திய உச்ச நீதிமனறத்தின் பெருமை உலகெங்கும் பேசப்பட வேண்டும்; இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் உரிக்கப்பட வேண்டும்.
”தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா”
என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகள் இங்கு மெய்ப்பட வேண்டும்.
உலகத் தமிழர்களின் சார்பாக உளமார வாழ்த்துவோம்:
வெல்க, நீதியரசர் சதாசிவம் பழனிச்சாமி அவர்களின் நீதி முறைமை!
இவண்-
கிருஷ்ணன்பாலா
19.07.2013
.
No comments:
Post a Comment