Saturday, December 28, 2013

அரவிந்த் கெஜ்ரிவால் லட்சியம் வெல்க!



ண்மையிலேயே மைனாரிட்டிதான்.

ஊழலை ஒழிக்கக் குரல்கொடுப்பதில்; நேர்மையான ஆட்சியைத் தரவேண்டும் என்பதை மக்கள் முன்னிலையில் ஓங்கி ஒலிப்பதில். எளிமையாக இருந்து மக்கள் சேவை செய்வோம் என்று சபதம் செய்வதில்.

உண்மையிலேயே மைனாரிட்டிதான்.
அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி பார்ட்டி சகாக்களும்.
 

‘கேஜ்ரிவாலின் சபதத்தைத் தோற்கடிப்போம்’ என்று இன்று காங்கிரஸும் சொல்லமுடியாது;பி.ஜே.பி.யும் சொல்ல முடியாது. நாட்டுக்கு இன்று தேவைப்படும் செயல்திட்டங்களைத்தான்  அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது கவர்ச்சியான வாக்குறுதிகளா? உண்மையிலேயே இந்திய அரசியலரங்கை வியப்பிலாழ்த்தும் வாக்குறுதிகளா?

அரவிந்த் கேஜ்ரிவால் டில்லியின் புதிய முதல்வரகாப் பதவி ஏற்றுக் கொண்டு நிகழ்த்திய உறுதிமொழிகள் நிறைவேற்றப் படுவதைப் பொறுத்து, வரும்நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சியின் வாக்குறுதிகளின் எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே இருக்கும்.

போதிய மெஜாரிட்டி இல்லாமலேயே,அதுவும்தன்னை வலிய வந்து ஆதரிக்கும ’காங்கிரஸின் ஊழலை விசாரிப்போம்’ என்று அறிவித்து விட்டு, மன உறுதியுடன் டில்லியின் முதல்வராகாப் பொறுப்பேற்றிருக்கும் அரவிந்த கேஜ்ரிவாலை வாழ்த்துவோம்:

எடுத்துக் கொண்ட லட்சியத்தில் அவர் வெல்லட்டும்!

No comments: