Monday, December 30, 2013

அரசியல் அரங்கம்:8

டித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவியர்,இணையத்தில் உலா வரும் எண்ணிக்கை மிகுந்த சமூக அக்கறையாளர்கள்  இவர்களுக்கெல்லாம் ஜாதி, மதம்,இன உணர்வுகளுக்கு அப்பால் ’இந்தியாவின்  எதிர்காலம் வளமாகவும் வலிமையாகவும்  இருக்க  வேண்டும்’ என்ற எண்ணமே மிகுந்துள்ளது.

அதை உருவாக்கித் தரக்கூடிய திறமைமிக்க பிரதமராக நரேந்திர மோதியே வர வேண்டும்’ என்ற  தீர்மானம் அவர்களின் மனதில் படிந்து விட்டது.

எனவே, மோதியின் தலைமை இந்தியாவுக்கு அமைய வேண்டுமென்ற உறுதியைக் கொண்ட கட்சிகளை மட்டுமே மோதியின் உள்ளரங்கு அறிஞர் குழு கூட்டணி வைக்க ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், கூட்டணி பற்றிய கொள்கை முடிவுகளுக்குக் கட்சியின் நிர்ப்பந்தமோ கட்சித் தலைவர்களின் அபிலாஷைகளோ எடுபட முடியாது போகலாம்.

காரணம்,ஆம் ஆத்மி பார்ட்டி எப்படி படித்தவர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் ஈர்த்து, ஓட்டு வங்கியைக் குவித்ததோ அப்படி  இம்முறை நரேந்திர மோதியின் தலைமை இந்தியாவின் இளைஞர்களையும் படித்தவர்களையும் ஈர்க்கும்  வகையில் இந்த நாடாளுமன்றத்தேர்தல் அமைய உள்ளதால் நரேந்திர மோதியின் ThinkTank எனப்படும்  அறிவார்ந்த வட்டம் அதற்கேற்ப தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கும்   வியூகத்தை வகுக்கப்போகிறது.

இதில் பெரியண்ணன் வேலைகளெல்லாம் எடுபடப்போவதில்லை.

அதேபோல் தான் பெரிய ஓட்டு வங்கியை வைத்திருப்பதால் எனக்கு இவ்வளவு சீட் கொடுத்தால்தான் உங்களோடு கூட்டணி என்று தலைக்கனம் காட்டும் கட்சிகள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.

நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மோதி கூட்டணிக்கு ஒப்புக் கொண்டால்  ‘வாஜ்பேயி பட்ட அவமானத்தைத்தான் படநேரிடும்’ என்பது மோதியின் Think Tank க்குத் தெரிந்தே இருக்கிறது.

-கிருஷ்ணன்பாலா
30.12.2013

No comments: