ஆம் ஆத்மி கட்சி என்பது ஒரு விபத்தன்று; அது படித்த நடுத்தர வர்க்கத்தின் மனச்சாட்சி; நியாயத்தின் நடுகல்.
வீரமும் தீரமும் மிக்க இளைஞர்களை விழித்து நோக்கிய சுவாமி விவேகாந்தரின் வேட்கைக் கனவு.
இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ்-பிஜே.பி.என்று இரு பிளவுகளில்தான் இந்திய வாக்காளர்கள் பற்று வைத்துள்ளனர்.
ஆனால், உண்மையான தேசப்பற்றும் 'மக்களுக்கு உண்மையாகவே அரசியல்பணி புரிய வேண்டும்' என்ற லட்சியமும் அதிகார அரசியலுக்கு அஞ்சாமல் துணிந்து எதிர்த்து நிற்கும் உறுதியும் கொண்ட ஒருவர் முன் வருவாரானால் அவர்பின்னே அணிதிரள நடுத்தர வர்க்கம் தயாராக இருக்கிறது' என்பதற்கு ஆம் ஆத்மி கட்சியும் அதன் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஓர் எடுத்துக் க்காட்டு.
‘அரவிந்த கேஜ்ரிவால் எப்படி ஆட்சி செய்வார் பார்ப்போம்?’ என்று கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு, தூங்காமல் இருப்பதை விட, அவர் எப்படியும் தனது லட்சியங்களையும் உறுதி மொழிகளையும் நிறைவேற்றும் வகையில் ஆட்சி புரிய ஒத்துழைப்பது காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. கட்சிகளின் அரசியல்கடமை.
அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றுப் போவாரானால், அது அவருடைய தோல்வியாக இருக்க முடியாது; நமது நாட்டின் ஊழல் அரசியல்வாதிகளின் வெற்றியாகவே அது பார்க்கப்படும்.
அத்தகைய தோல்வியில் பி.ஜே.பி. யோ காங்கிரஸோ குளிர்காய முற்பட்டால் இந்த நாட்டுக்கு விமோசனம் என்பது இந்த நூற்றாண்டில் இல்லை என்றாகி விடும்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12.2013
1 comment:
ARVIN GAJRIWAL ENBAVAR PATRIYA NINAIVU MARANTHU POTCHU.OODAKAM AVARAI PESUVATHILLAI.MAKKALUM NINAIPATHILLAI.
Post a Comment