Friday, October 28, 2011

இது ஒரு தெருக் குறள்!

நானும் எனது நண்பரும் உணவு விடுதி ஒன்றில் உண‘வருந்தி’க் கொண்டிருந்தோம்,நேற்று (27.10.2011).

மூன்று பேர் சேர்ந்த உடல் கொண்ட ஒரு மேலை நாட்டுப் பெண் ஒருவர் தம் குழாத்துடன் பக்கத்து மேஜையில் மிகுந்த சிரத்தையோடு உண்டு கொண்டிருந்தார். தன் உடலை அதன் நாற்காலியில் பொருத்தி உட்கார அவர் படும் பாடு பரிதாபமாக இருந்தது. எல்லோரும் அவரைப் பார்த்து ஏளனப் பார்வை செய்வது போல் இருந்தது;நான் பரிதாபம் கொண்டேன்.

அருகில் இருந்த இன்னொரு மேஜைக்கு வேறு ஒரு பெண் உற்றார் சிலருடன் ‘சிக்’ என்ற தோற்றப் பொலிவில் வந்து அமர்ந்தார்.

அந்த ரெட்டை நாடிப் பருத்தவுடல் பெண்மணி மற்றவர்களோடு சேர்ந்து அந்த மெல்லிய மேனிப் பெண்மணியை ஏக்கத்தோடு பார்த்தார்.

நண்பரிடம் நான் சொன்னேன்:

‘சிக்’கென்று வாழ்வாரே வாழ்வார்;மற்றெல்லாம
‘சிக்’குண்டு வாடு பவர்.


(முதல் ’சிக்’ = மெல்லிய,அளவான,,அழகான தோற்றத்தைக் குறிப்பது; இரண்டாவது ’சிக்’= நோய்,மன வாட்டம்,தவிப்பு,ஏக்கம் என்றெல்லாம் பொருள் நிற்கும்)

நண்பர்களே,
இது நம்ம தெருக் குறள்;இது போல் யார் வேண்டுமானலும் இடம்,பொருள் ஏவலுக்கேற்ப எண்ணலாம்;எழுதலாம். ஆனால், வள்ளுவப் பெருமானுடன் மட்டும் வம்பு செய்து கொள்ளாதீர்கள். ப்ளீஸ்.

----------------------------------------------------------------------------------------------
இதன் நீதி:
உணவைச் சுருக்கி உடல் நலம் பெருக்க! (உடலை அல்ல!)
-----------------------------------------------------------------------------------------------

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
28.10.2011

1 comment:

V.Rajalakshmi said...

Hahahahaha அருமையான குறள் sorry "குரல்"