Thursday, October 6, 2011

முகநூல் முற்றம்-அறிவிப்பு : 4 / 5-10-2011

நண்பர்களே,வணக்கம்.
முகநூல் முற்றம்’ ( Elite Friends in FaceBook) என்று இந்தக் குழுமம் நம்மிடையே எழும் நயமான சிந்தனைகள இங்கே பொதுவில் வைக்கவும் அது குறித்து, ஆரோக்கியமான வாதங்களை வளர்த்துக் கொள்ளவும்தான்.


முகநூலில் ஆயிரக் கணக்கில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலும் சின்னஞ் சிறார்களின் கிறுக்கல்களாகவே மாறி,அது மாசுபட்டுத்தான் போயிருக்கிறது.


நல்ல தகவல்களும் கருத்துக்களும் இதில் கரைந்துபோய் விடுகின்றன.


இயன்றவரை, இலக்கியத்தரம் வாய்ந்த எண்ணங்கள்;தெளிந்த அரசியல் கருத்துக்கள்,தேவையான சமூக எழுச்சிச் சிந்தனைகள், கட்டுக்கோப்பான தரக் கவிதைகள். கருத்துரையாடல்கள்,நேர்முகக் கருத்தரங்கங்கள், மாவட்டம் தோறும் முகநூல் முற்றம் அமைப்பு போன்ற பயனுள்ள செயல்முறைகளை வகுத்து, மக்களிடையே மகத்தானதோர் சிந்தனைக் களமாக இயக்கும் முயற்சிகள் தொடங்கப் படவுள்ளன.


முகநூலில் அறிவார்ந்த சிந்தனைகளோடு பங்கு பெறும் யாவரும் கூடுகின்ற முற்றமாக இது இயங்கும்.


இந்த நோக்கத்தை விரும்புவோர்,ஆதரிப்போர்,இது வளர வேண்டும் என் எண்ணுவோர்,இதில் பங்கு கொண்டு முன்னிலையில் நிற்க விரும்புவோர் யாவருக்கும் இதுவே அழைப்புக் கடிதம்.


அவ்வாறு இதை ஏற்கின்ற நண்பர்கள் எல்லோரும் இதற்கான விதி முறைகள், நெறிமுறைகள் குறித்துத் தாங்கள் எண்ணுபவற்றைச் சுருக்கமாக, தெளிவாக வரிசைப் படுத்தி எனது தனி அஞ்சலுக்கு எழுதலாம்.


நீங்கள் எழுதும் சிறந்த எண்ணங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைமுக நூல் முற்றத்தின் நெறிமுறைகளிலும் சட்ட விதிகளிலும் சேர்ப்போம்.


தகுதி மிக்கவர்கள் என்று தெரிவு செய்யப் படுவர்கள் முகநூல் முற்றத்தின் புரவலர்களாகவும் ஆலோசனைக் குழு அங்கத்தினர்களாகவும் நிர்வாகிகளாகவும் ஏற்கப் படுவார்கள்.


இங்கு எனது நண்பர்களாக மட்டுமின்றி,முகநூலில் உயர் நோக்கதோடும் சாதி,இனம்.மதம் கடந்து மக்கள் நலக் கருத்துக்களோடும் இணைந்திருப்போர் யாரும் இம்முற்றத்தில் இடம் பெறலாம்.


இம்முற்றத்தில் வெறும் பார்வையாளராக இருப்போர் இதன் நிர்வாகக் குழு எதிலும் பங்கு பெற முடியாது.அவர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே தொடரலாம். எனினும் எவ்விதப் பங்களிப்பும் கூட இல்லாதவர்கள் - குறைந்த பட்சம் கருத்தாடல்களில் கலந்து கொள்ளாதவர்கள் - விரைவில் பெயர் நீக்கம் பெறுவார்கள்.


இந்த சமூக வலைத்தளத்தின் உண்மையான மேன்மையை உணர்வுப் பூர்வமாக உணர்வோர் இனி இது குறித்து எழுதலாம்.நன்றி.


அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
 5.10.2011

No comments: