Wednesday, October 5, 2011

முகநூல் முற்றம் - அறிவிப்பு - 3 / 5.10.2011

அறிவுசால் நண்பர்களே,வணக்கம்.
’முகநூல் முற்றம் என்கிற அமைப்பு சிறந்த முறையில் செயல்படப் பலரும் விருப்பம் தெரிவித்து எனக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.


‘முகநூல் முற்றம் என்பது இங்குள்ள பிற குழுமங்களைப் போல் அல்லாமல்,முகநூல் என்ற வளையத்தையும் தாண்டி இயங்கும் ஓர் சமூக அறிவியல் இலக்கியப் பண்பாட்டு மையமாக உருவாக்கப் பட வேண்டும் என்பதென் நோக்கம்.


அதன் நோக்கங்களும்,நெறிமுறைகளும் அதற்கேற்ப உருவாக்கப் படும். அதற்குச் சற்றுக் கால அவகாசம் கட்டாயம் தேவைப் படுகிறது. இது பற்றி நான் முன்னமே அறிவித்தும் உள்ளேன்.


இதில் இங்கு எத்தனை பேர் இதுபற்றிய லட்சிய உணர்வோடு எழுதிய வருகிறார்கள்? என்பதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.


தனி ஒரு மனிதனால் இதன் லட்சியங்கள் முழுதும் வரைமுறைப் படுத்தப் பட்டுச் செயல் படுத்தப்படும் என்பது வெறும் கனவாகாவே போய்விடும். தனி மரம் தோப்பாகாது.


நான் வலைகளை வீசிக் கொண்டிருக்கின்றேன். அவ்வாறு வீசுவது அயிரை மீன்களுக்கு அல்ல; வயிர மீன்களுக்கு.


அதாவது நன்கு செழித்த சிந்தனையாளர்களுக்கு.
பொறுத்திருந்து பாருங்கள்.


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
5.10.2011

No comments: