Sunday, March 29, 2015

இந்த நா’றி’மணிகள்...

அறிவார்ந்த நண்பர்களே,

முகநூலில் தங்கள் அறிவார்ந்த விஷயங்களைக் காட்டிக் கொள்ள எந்த அளவுக்கு சுதந்திரம் உண்டோ?, அதுபோலவே, ஒருவருடைய ஒழுக்கங்கெட்ட சிந்தனைகளைப் புளகாங்கிதப்படுத்தி, அம்பலமாக்கிக் கொள்ள,சுய தம்பட்டம் அடித்துக் கொள்ள  அதைவிட அதிக சுதந்திரம் இருக்கிறது.

இதில் சில பெண்களின் பதிவுகளைச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது:

சில பெண்கள் இங்கு-முகநூலில்  ஆடுகிற ஆட்டமும் போடுகிற கூத்தும் சகிக்க முடியவில்லை:எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

இவர்களின்  பதிவுகளுக்கு உடனுக்குடன் உற்சாகம் ஏற்றிக் கொண்டிருக்கிற  (கைப்) பானங்களானவெத்திப்பயல்களை மேலும் உற்சாகப்படுத்தி இந்தப்பெண்கள் எழுதும் எழுத்துக்களும் அந்த எழுத்துக்களின் மூலம் இவர்களைப் பற்றி எழும் உருவகமும் இந்த வலைத்தளத்தில் வக்கிரப் புத்தியாளர்களையே வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.

பொற்பும் கற்பும் உள்ள மாதர்கள் பொதுச் சந்தைக்கு வர மாட்டார்கள்; அப்படி வந்தால் நாம் எதிர்பார்க்கின்ற பண்பாட்டை,கட்டுப்பாடுகளைத்தான்ஆணாதிக்கத்தின் கொடிய விலங்குகள்எனச் சாடி, தங்களுக்கென்று  கூப்பாடு போடுகின்ற கூட்டத்தைத் துணைக்கு அழைத்துக் குத்தாட்டம் போடுவதில் இந்த நாறிமணிகள் மேலும் குஷிப்படுபவர்களாகி விடுகிறார்கள்.

இப்பெண்கள் இப்படியெல்லாம் எழுதிக் குத்தாட்டம் போடுவது இவர்களுடைய குடும்பத்தாருக்குத் தெரியுமா? அல்லது  அவர்கள்தான் யார்எப்படிப் பட்டவள் ? என்பது தங்கள் குடும்பத்தாருக்கு இதன் மூலமாவது தெரியட்டும்என்பதற்காக எழுதுகிறார்களா?

இவர்களுடையஅஜண்டா என்ன? என்பது  ஆண்டவனுக்கும் கூடத் தெரியாதுஎன்னும்போது இவர்களின் கணவன்மார்களுக்கோ, குடும்ப உறவுகளுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லைஎன்றுதான் நம்ப வேண்டியிருக்கின்றது..

இவர்களின் நடை, உடை, நக்கல் எழுத்துக்கள் அதைத்தான் இங்கே நாட்டிக் கொண்டிருக்கின்றன.

‘நச்’சென்று நாணிக் கொள்ளும் அளவுக்கு இவர்களை இடித்துச் சொல்லி நெறிப்படுத்த ஏதேனும் வழி உண்டா?

குறைந்த பட்சம் அடுத்த இளம்தலைமுறைகளாவது ஒழுக்கம் மிக்க பெண்களாய் இருக்க வேண்டுமே?

ஆராய்ச்சி செய்துதான் பார்க்க வேண்டும்.

-கிருஷ்ணன்பாலா

29.3.2015

No comments: