Friday, March 27, 2015

மண்டைக் கிறுக்கை மாற்றிக் கொள்க!


முதிர்ச்சியற்ற ஆரவாரம்; கண்மூடித்தனமான புகழுரைகள்; முடிவு வரும் முன்னரே தீர்ப்புரைகள்; பெரும்பான்மை முட்டாள்களின் ஆதரவு என்பது இன்றைய அரசியலில் மட்டும் இல்லை;கிரிக்கெட் விளையாட்டிலும் மலிந்து விட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின்மீது இருந்த அதீத நம்பிக்கை, இன்று வேரோடு அடி சரிந்து போய்விட்டது நமது கிரிக்கெட் இந்திய தேசபக்தர்களுக்கு.
கிரிக்கெட் ஒரு வீர விளையாட்டும் அல்ல; இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் விளையாட்டும் அல்ல.அது ஒரு Mind Game. அதாவது மூளைத் திறன் சார்ந்த சூதாட்ட விளையாட்டு.

எதன் மீது அதிக ஆர்வமும் எதிர்பார்ப்பும் கொண்டு பெரும்பாலோர் ஆரவாரம் செய்கின்றார்களோ அதன்மீது தான் அதிகப் பந்தயம் வைக்கப்படும் என்பது சூதாட்டத்தின் சூத்திரதாரிகளுக்குத் தெரியாததல்ல.

பெண்ணாசையிலும் பணத்தாசையிலும் கிறுக்குப்பிடித்தவன் வீரனே அல்லன்; இந்திய கிரிகெட் அணியில் இருப்பவர்கள் பெண்ணாசையையும் பணத்தாசையையும் விட்டு,இந்த தேசத்தின் கவுரவம் காக்க விளையாடுகின்றவர்கள் அல்லவே!.

நான் இரண்டு நாளைக்கு முன்பு எழுதின இந்த விஷயத்தை இப்பொழுதும் 29 ஆம் தேதி மாலையிலும் படித்தாவது கிரிக்கெட் மண்டைக் கிறுக்கை ஒழித்துக் கொள்ளப் பார்ப்பது புத்திசாலித்தனம்.

-கிருஷ்ணன்பாலா
26.3.2015

No comments: