Saturday, October 18, 2014

இந்தப் பென்சில் ஓவியம்….!

பென்சில் ஓவியத்தில்  நான்
ஓவியம் :Bhahavath Kumar
ண்பர்களே,

எனது உள்ளுணர்வின் எதிர்பார்ப்புத் தோற்றம்இனி இப்படித்தான் இருக்க வேண்டும்என்ற உணர்வைத் தூண்டும்படி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி என்னை பென்சில் ஓவியமாக்கி அதைத் தனது பக்கத்தில் கமுக்கமாகப் பதித்துக் கொண்டிருக்கிறார் நண்பர்,திரு.Bahavath Kumar அவர்கள்

அது எனது  கண்களுக்கு Feed ஆனதும் என்னுடைய பதிவுதான் அந்தப்படத்தில் முதலில் பட்டது;பிறகு படம். அது எனது தலை முடியை கரும்பென்சிலால் தீட்டப்பட்டிருந்ததால் பக்க வாட்டில் முடி நீண்டுள்ளதுபோன்ற தோற்றம் அமைந்து (அழகாக,சொல்லப்போனால் அழகைக் கூட்டித்தான்) கிட்டத்தட்ட 1980களின் ஜெயகாந்தன் அவர்களை நினைவு படுத்தி விட்டது.

என்னுடைய மதிப்பிற்கும் நட்புக்கும் உரிய இலக்கிய ஆசான் களில் ஒருவர் அவர்

1977களில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை TTK சாலையில் உள்ள அவருடைய ஞானச் சபையில் அவருடையை இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் தொடர் தொடர்பாக அநேகமாக தினசரி சந்தித்துக் கொள்கின்ற வாய்ப்புப் பெற்றவன் நான்

இப்போது-முடி சூடா மன்னன் எனத் திகழும் நான் அவ்வாறு முடியைச் சிலுப்பிக் கொள்ள என் செய்வேன்?

இருந்தாலும் நண்பர் திரு பஹவத் குமார் அவர்கள் தீட்டிய இந்த (சதி :-) ) ஓவியத்தைப் போன்றே  எனது தலையின் பக்கவாட்டில் இருக்கின்ற தலைமுடி நீண்டு தவழ்ந்திருக்க இன்று முதல் முயற்சி எடுப்பதுஎன்ற தீர்மானத்தை முன் மொழிகின்றேன், இன்று.

வழி மொழிபவர்கள்  மொழியலாம்! :-)

இவண்-
கிருஷ்ணன்பாலா

18.10.2014

No comments: