Friday, October 24, 2014

பொய்யுரை வேண்டேன்!



வானத் தா ரகைகள் போல்                 
வரிசைகட்டி வாழ்ந் திருக் கும்  
கேனத்  தமிழ்க் கவி தைக்
கிறுக் கர்கள் கூட்டத் தில்
நானு மொரு கவிஞ னென
நத்து கின்ற  பெயரெ டுத்து
ஈனப் புகழ் சுவைக் கும்
எண்ணம் எனக் கில்லை!

அங்கொன் றும்இங் கொன் றும்
அவர் உரைத்த பாட் டென்றும்
பங்கிட் டுமெடுத் துரைத் தும்
பலவீட் டுச்சோ றுண் டும்
தங்கு  தடை  இல் லாமல்
தமிழ் வாந்தி  எடுத் திங்கு
சங்கப் புலவன்  என்று  
சாதிக்க  ஆசை இல்லை!

ஆலை யில்லா ஊ ருக்கு
இலுப் பைப்பூ, சர்க்க ரைதான்;
வேலை யில்லா  வெட்டிகட்கு
வீண்பொழுது  பெருஞ் சுகந் தான்;
வேலி  இல்லாப் பயிர் கட்கு
வெள்ளா டே எஜ மானன்;
காலி களின் கூட்டத் தில்
கைத் தடிகள் கவிஞ ரடா?

குயிலி சையின் ராகத் தை
கூட்டுகின்ற தமிழ்ச் சுவை யை;
மயிலா டும்பே ரழ கை
மறக்கவைக் கும்அதன் நடை யை
உயிர்ப் போடு பிணைத்திந்த
உலகிற்கு எடுத் துரைக் கும்
நயமா னசிந் தனை யை
நாட்டுவதே கவிதை யடா!

சொல்ல  வரும் கருத்தி னிடை
சொக்க வைக்கும் சுவை கூட்டி
வெல்ல வரும் கருத்துக் கள்
வீழ்ந்தொழியும்  தமிழு ரைத்து
வெள்ளைத்  தா மரை மீது
வீற்றிருக் கும் அன்னை யவள்
’செல்லப் பிள் ளை’ எனச்
சேதி சொலக் காத்திருப்பேன்!

கூகை களின் கூவல் களைக்
குறிப் பாகக் கண்டு ணர்ந்து
ஏக லைவன் வில் வித்தை
இன்ன தெனும் காலம் வரும்!
ஆகை யினால் நண்பர் களே,
அதுவ ரையில் எனை யிங்கு
நோக வைக்கும் பொய் யுரையில்
நுடங் கவைக்கப் பார்க் காதீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2014

No comments: