முக நூல் நட்பு வட்டத்தில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு எழுதினார்,இப்படி:
//thangalin pathivugal migavum arumai pathirikkail elutha muyarchi seiyavum thangalin samooga sinthanaikalukku en vanakkankal//
(தங்களின் பதிவுகள் மிகவும் அருமை;பத்திரிகைகளில் எழுத முயற்சி செய்யவும். தங்களின் சமூக சிந்தனைகளுக்கு என் வணக்கங்கள்)
நான் அவருக்குச் சொன்னேன்:
பத்திரிகைகள் அவ்வாறு எழுதுவதற்கு ஊக்கம் தருவதில்லை.
அப்படி எழுதத் தாகம் கொண்டு அலைகின்ற அவலம் என்னை ஆட் கொள்வதுமில்லை.
.jpg)
பத்திரிகைகளில் பணிபுரிந்து அவற்றின் அறங்கெட்ட தகுதிகளில் சினமுற்றே நான் அவற்றைப் புறக்கணித்து வெளி வந்தவன்.
எனக்கென்று அமைந்துள்ள முகநூல் தளத்தில் வெகு சுதந்திரத்தோடு எழுதி வருவதையே சமூக அக்கறையின் முதன்மைத் தகுதியெனக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment