Thursday, December 1, 2011

எது சாத்தானின் வேலை?

"யோகா கலை என்பது சாத்தானின் வேலை 


என்று - 


கேபீரியல் அமோர்த் என்னும் 85 வயது போதகர் திருவாய் மலர்ந்திருக்கிறார். (ஆதாரம்: தினகரன் நாளிதழ் / 1.12.2011/பக்கம் 12) 

இவர் சாதாரண போதகர் எனில் நாம் இந்தக் கருத்தை வழிப்போக்கன் ஒருவன் சொன்னதாகக் காதில் போடாமல் இருந்திருக்க முடியும்.

ஆனால், இத்தாலியில் உள்ள வாடிகனின் கிறிஸ்துவ மதத் தலைமைப் போதகர் என்ற தகுதியில் சொல்லியிருப்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.

உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்தி மனிதனை ஆரோக்கியமுள்ளவனாக்கி, அவனை மெய்ஞ்ஞானத்தில் மிதக்கச் செய்து இறைநிலையோடு கலந்து இன்புறச் செய்யும் ஆற்றல் படைத்தது யோகக் கலைஎன்பதை இன்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் உணர்ந்து ஆர்வத்தோடு பின்பற்றத் தொடங்கி இருக்கின்றார்கள். இது ஒருவகையில் பிரபஞ்ச அறிவை மனிதனுக்குள் புகுத்தும் வல்லமை கொண்டது.
இதன் மெய்ப்பாடாகத்தான், இன்று,உலகெங்கிலும்,குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் யோகக் கலை அமைப்புக்கள் பெருகி வருகின்றன.

பதஞ்சலி முனிவர் மூலம்,இந்தியப் புராதன ஞானியர் உலக மாந்தருக்கு அருளிய உன்னதமான இறைஞானக் கலை என்பதாலும் உலகின் எல்லா மதத்தினரின் உணர்வுகளிலும் இதன் பெருமை இன்று வேர்விடத் தொடங்கியிருப்பதாலும்இதன் மூலம் கிறித்துவர்களின் மனம் மெய்ஞ்ஞானத்தை நோக்கி மாற்றம் அடைந்து விடுமோ?’ என்கிற மத உணர்வின் மாசு பட்ட எண்ணத்தினாலும்தான் இவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.




’எது சாத்தானின் வேலை?’ என்பதைப் புத்தியுள்ளோர் புரிந்து கொள்வர்.


இவண் - 
கிருஷ்ணன்பாலா
1.12.2011

No comments: