Monday, December 26, 2011

இது எந்தச் சங்கு?

நண்பர்களே,


நமது மத்திய அமைச்சர்களில் இப்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் 2ஜி  ஊழல் ராஜாவின் TeleCom துறையின்  மந்திரி  பொறுப்பில் இருந்து கொண்டு இந்தியாவின் மாபெரும் ஊழலுக்கு வாக்காலத்துப் பேசிய வக்கீல் கபில் சிபல், அண்மையில் கலந்து கொண்ட சர்வதேசக் கவனத்தை  ஈர்க்கும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நடந்து கொண்ட   ‘தேசீய’அவமானமிக்க நடத்தை’ சாட்சிதான் இந்தப் புகைப்படம்.


இதில், கபில் சிபல் இன்னொரு நாட்டின் அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதும், அவர் கண் முன்னே நமது இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருப்பதும் புகைப் படமாகப் பறைசாற்றுகிறது.


இத்தகைய தேசிய அவமானத்தைச் செய்த இந் நிகழ்ச்சி பற்றியோ, அக் குற்றத்துக்குக் காரணமான மத்திய அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்பது பற்றியோ நமது இந்தியப் பிரதமரோ செய்தி ஊடகங்களோ இதுவரை ஏன் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவில்லை   என்பது நமக்கு விளங்கவில்லை

.

இந்தப் புகைப்படம் எனது கண்ணில் பதிவான இன்று (25.12.2011) காலையில்,எனது முகநூல் பக்கத்தில்து குறித்து “இப்பொழுது புரிகிறதா?   ‘முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் எதை வேண்டுமானாலும் எழுதும் எழுத்துக்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும்’ என்று இந்த ஆள் ஏன் திருவாய் மலர்ந்தார் என்பது? இந்த அவமானமிக்க செயலைச் செய்தவனுக்குத்தான் இன்னும் மத்திய மந்திரி பதவியில் நீட்டிக்கச் செய்யும் காங்கிரஸின் தேசிய லட்சணம் தொடர்கிறது.  ‘இந்திய தேசிய மரியாதையைக் காப்பாற்றுவது காங்கிரஸ்தான்’ என்று குரைத்துக் கொண்டிருப்பவர்கள் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை? ஒருவேளை அவர்கள் இத்தாலியக் கொடியை இப்படித் தலை கீழாக மாட்டியிருந்தால்தான் இந்த மந்திரியை மாற்றுவார்களோ?” என்று கேட்டிருந்தேன்.


இவ்வாறு நான் எழுதிய கடுமையான கருத்துக்கு, முக நூல் நண்பர் திரு.Mani Manivannan அவர்கள் ‘அது வேண்டுமென்றே தொழில் நுட்ப ரீதியில் ’மார்பிங்;. செய்து வெளியிடப் பட்ட படம்’ என்பதாக் கூட இருக்கும் என்று எழுதி,அப்படித் தவறான படத்தைச் சித்தரித்து வெளியிடுபவர்களுக்கு சட்டப்படித் தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உண்டு என எழுதியிருந்தார். அவர் எழுதியதாவது: // This looks like a photo shopped fake. No other news media seem to have picked it up. It is ok as a satire but if this was created for fake news, the person that created it is liable for defamation and all the people propagating this without verifying this should apologize and post that apology as their public status, no?//


நான் கேட்கிறேன்:


அந்தப் படம் வேண்டுமென்றே தொழில் நுட்ப ரீதியில் மாற்றி  ‘நமது தேசியக் கொடியை கபில் சிபல் அவமானப் படுத்தி விட்டார்’ என்பதாக அவருடைய அரசியல் எதிர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும்கூட, அது பற்றிய  உண்மைகளைக் கண்டாய்ந்து  “அவ்வாறு நமது தேசீயக் கொடிக்கு  எவ்விதமான  அவமானமும் ஏற்படுத்தப் படவில்லை;அதில் மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எவ்விதத்திலும் பங்கு இல்லை” என்று சொல்லும் அதிகாரமும் பொறுப்பும்  யாருக்கு இருக்கிறது?

அது மட்டுல்லாது அவ்வாறு செய்யப் பட்டிருந்தால் அதுவும்கூட ஒரு மாபெரும் தேசியச் சதியாகவும் கிரிமினல் குற்றமாகவும் அறியப் பட வேண்டுமா?,கூடாதா? அப்படிச் செய்தவர்கள்மீது மான நட்ட வழக்குத் தொடுக்கும் உரிமை கபில சிபலுக்கு இருப்பது சட்ட நிபுணரான அவருக்குத் தெரியாததா?


இந்தப் படம் நிஜமாக இருந்தால்,முதலில் பதவி நீக்க்கம் செய்யப் பட வேண்டியவர் கபில் சிபல்தான். இன்னும் சொல்லப் போனால், உண்மை தெரிந்ததும் தானாகவே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது இந்தப் படமே பொய் என்று அறிக்கை விட்ட கையோடு அது பற்றிய விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்.


இதை மிகக் கடுமையான நடவடிக்கைகுரிய விஷயமாகக் கவனத்தில் கொள்ளாது மெத்தனமாக இருக்கும் கபில் சிபல் பற்றியோ,நமது உள்துறை அமைச்சகம் பற்றியோ அதற்கு மேலான நமது பிரதமரின் கவனமின்மை பற்றியோ நாம் எப்படி எடுத்துக் கொள்வது?


இதற்கெல்லாம் விளக்கம்  சொல்ல வேண்டியது அவரும் அவர் சாந்த மத்திய அரசும்தான் என்பதுடன் இந்தப் படத்தை வேண்டுமன்றே தவறாகச் சித்தரித்துப் பிரசுரித்தவர்கள் மீதும் சம்பந்தப் பட்ட ஊடகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?

நமது உள்துறையும் அதன் உளவுத் துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?


ஏன் செய்யவில்லை?


நண்பர்களே,


இப்போதெல்லாம் இம்மாதிரியான கவனக்குறைவான நிகழ்வுகள் சகஜம்போல் ஆகி விட்டதாலும்; அதிகாரவர்க்கம் இது போலியான - இட்டுக்கட்டிய புகைப்படச் செய்தியாக இருப்பினும்கூட அதுபற்றியெல்லாம் எண்ணாது ஊழல் குறித்து எழும் விமர்சனங்கள் மக்களிடையே பெரிய அளவில் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதில் மட்டுமே விழிப்புக் கொண்டிருப்பதாலும்தான் சர்வதேசக் கவனத்துக்குரியதும் தேசிய அவமானச் செயலுக்குரியதுமான இந்திய தேசியக் கொடியைத் தலை கீழாகப் பறக்க விட்டுக் கொண்டு பவிசு காட்டிய மத்திய மந்திரி பற்றி எவ்விதமான கண்டனக் குரலும் எழவில்லை என்கிறேன்.


தேசியக் கொடி பற்றிய தெளிவான சட்டப் பிரிவுகள் இருக்கும்போது சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அரசே இதில் மவுனம் சாதிப்பதும்,இது பற்றிய கவன ஈர்ப்பை நமது எதிர்க் கட்சிகள் காட்டாதிருப்பதும் நமது இந்தியச் செய்தி ஊடகங்கள் இதில் மழுங்கிப் போய் இருப்பதும் ஏன்?


இந்தக் கேள்வி,செவிடன் காதில் ஊதிய சங்கா?இல்லை நமது தேசீய விழிப்புணர்வுக்கு ஊதப் பட்ட சங்கா?


ஊதிக் கொண்டிருக்கும்-
கிருஷ்ணனன்பாலா

25.12.2011

No comments: