Wednesday, August 18, 2010

வருக,எந்தன் முகநூலில்!

நண்பரே 'முக நூல்' முகவரி யாளரே!
நமக்கு முக நூல் "Facebook " என்பது:
அண்மையில் உங்கள்,அக நூல், பார்த்தேன்;
அகநூல்'என்றால் 'விவரக் குறிப்பு"


உங்களுக்கிந்த அழைப்பிதழ்,ஏற்பீர்!
ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்வோம்;
எங்கிருந்தாலும் நட்பில் தளைப்போம்:
இணையதளத்தில் எண்ணத்தை உரைப்போம்!


முன்பின் நமக்கு அறிமுகம் எதற்கு?
முழுமை பெற்ற மனிதர்கள் என்றால்;
அன்பின் அளவு ஆழம் செறிந்தது:
அதில் நம் பயணம் கடல்போல் விரிந்தது!


மனிதர்கள் நாம் இதில் முத்துக் குளிப்போம்;
மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் உயிர் கொடுப்போம்:
இனி யொரு விதியை எழுதிடச் செய்வோம்:
எந்த நாளும் அதை நாம் காப்போம்!








என்னைப்பற்றிக் கொஞ்சம் உமக்கு
எழுதிச் சொல் கின்றேன்; இது
தன்னைப் பற்றிய தற் பெருமைதான்;
தாங்கிக் கொள் ளுங்கள்!


வியக்க வைக்கும் வார்த்தைகளாலே
வேள்விகள் செய்கின்றேன்;பிறர்
மயக்கம் போக்கி மதி நலம் கூட்டி
மனங்களை வெல்கின்றேன்!


தயக்கம் இன்றி எழுதுக்கள் மூலம்
தமிழைத் தருகின்றேன் ;நலம்
பயக்கும் நட்பில் என்றும் எந்தன்
பணியைச் செய் கின்றேன்!


புதிதாய் நல்ல எழுத்தைக் காணப்
புகுவீர் என் முக நூல்; அதில்
பதமாய்நல்ல படைப்புக்கள் கண்டு
பாராட் டுரைப் பீரே!


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
7.8.2010 / 07:30 pm

No comments: