நண்பர்களே,
மறுமடியும் சொல்ல வேண்டியுள்ளது:
இங்கு விவாதம் என்று வைத்தால் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே ஆளாகி அர்த்தமற்ற கோஷங்களோடு எழுத்தின் இலக்கறியாமால் எழுதுகின்றவர்கள் காளான்களைப் போல் முளைப்பது முக நூல் தந்த வாய்ப்பு.
நாம் அந்தக் காளான்களை வளர்க்கவும் முடியாது; வளைக்கவும் முடியாது.
அது நமது வேலையும் அல்ல.
மறுமடியும் சொல்ல வேண்டியுள்ளது:
இங்கு விவாதம் என்று வைத்தால் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே ஆளாகி அர்த்தமற்ற கோஷங்களோடு எழுத்தின் இலக்கறியாமால் எழுதுகின்றவர்கள் காளான்களைப் போல் முளைப்பது முக நூல் தந்த வாய்ப்பு.
நாம் அந்தக் காளான்களை வளர்க்கவும் முடியாது; வளைக்கவும் முடியாது.
அது நமது வேலையும் அல்ல.
ஆனால், தமிழரின் மரியாதையும் தன் மானத்தையும் வளர்ச்சியையும் உலக சமுதாயத்தில்
உயர்த்தி வைப்பதற்கான விஷயங்களை இங்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது:
- தமிழினத்தின் ஒற்றுமையும் வலிமையும் இதில்தான் ஓங்கி நிற்க முடியும்:
- தமிழ் மொழி,இயல்பாகவே நமக்கு வழங்கும் உயர் பண்பாட்டை உணர்ந்திருத்தல்.
- தமிழரின் தொன்மையையும்‘ வன்மையையும் தெரிந்திருத்தல்.
- நம்மிடையே இன வேற்றுமை களைந்திருத்தல்.
- ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை ஆதரிக்காதிருத்தல்.
- பதவிகளைப் பெறுவதற்காக மானம் கெட்டு வாழாதிருத்தல்.
- உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழர்களுக்கு உலக அரங்கில் உயர் மரியாதை இருக்கும் வகையிலான சிந்தனைகளை வளர்த்தல்.
- மதம்,இன உணர்வுகளின் அடிப்படையில் தமிழர் சமுதாயத்தைப் பிரிக்காதிருத்தல்.
- பிற மொழிகளின் பெருமையையும் பிற இனத்தவரின் சிறப்புக்களையும் மதித்தல்.
- நமக்குள்ளேயே பிரிவினையையும் பகைமையயும் தூண்டும் துராக்கிரமப் புத்திக்குள் புதையுண்டு சாகாதிருத்தல்.
இவற்றை முழுமையாக ஏற்றுக்
கொண்டவர்கள் சிந்திக்கவும் பேசவும்தான் நமது எழுத்துக்களை இங்கே
நடுகின்றோம்.
இதற்கு எதிரானவர்களோடும் ஏளனம் செய்கின்றவர்களோடும் நமக்கு நட்புமில்லை;நாட்டமும் இல்லை.
“ஊருக்கு நல்லது சொல்வோம்;நமக்கு
உண்மை தெரிந்ததைச் சொல்வோம்”
என்ற பாரதியின் முரசை இங்கேயும் கொட்டுவோம்.
இவண்-
இதற்கு எதிரானவர்களோடும் ஏளனம் செய்கின்றவர்களோடும் நமக்கு நட்புமில்லை;நாட்டமும் இல்லை.
“ஊருக்கு நல்லது சொல்வோம்;நமக்கு
உண்மை தெரிந்ததைச் சொல்வோம்”
என்ற பாரதியின் முரசை இங்கேயும் கொட்டுவோம்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
No comments:
Post a Comment