Thursday, September 20, 2012

ஒற்றுமைக்கான நெறிகள்


நண்பர்களே,

மறுமடியும் சொல்ல வேண்டியுள்ளது:

இங்கு விவாதம் என்று வைத்தால் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே ஆளாகி அர்த்தமற்ற கோஷங்களோடு எழுத்தின் இலக்கறியாமால் எழுதுகின்றவர்கள் காளான்களைப் போல் முளைப்பது முக நூல் தந்த வாய்ப்பு.

நாம் அந்தக் காளான்களை வளர்க்கவும் முடியாது; வளைக்கவும் முடியாது.

அது நமது வேலையும் அல்ல.

ஆனால், தமிழரின் மரியாதையும் தன் மானத்தையும் வளர்ச்சியையும் உலக சமுதாயத்தில் உயர்த்தி வைப்பதற்கான விஷயங்களை இங்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது:
  1. தமிழினத்தின்  ஒற்றுமையும் வலிமையும் இதில்தான் ஓங்கி நிற்க முடியும்:
  2. தமிழ் மொழி,இயல்பாகவே நமக்கு வழங்கும் உயர் பண்பாட்டை உணர்ந்திருத்தல்.
  3. தமிழரின் தொன்மையையும்வன்மையையும் தெரிந்திருத்தல்.
  4. நம்மிடையே இன வேற்றுமை களைந்திருத்தல்.
  5. ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை ஆதரிக்காதிருத்தல்.
  6. பதவிகளைப் பெறுவதற்காக மானம் கெட்டு வாழாதிருத்தல்.
  7. உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழர்களுக்கு உலக அரங்கில் உயர் மரியாதை இருக்கும் வகையிலான சிந்தனைகளை வளர்த்தல்.
  8. மதம்,இன உணர்வுகளின் அடிப்படையில் தமிழர் சமுதாயத்தைப் பிரிக்காதிருத்தல்.
  9. பிற மொழிகளின் பெருமையையும் பிற இனத்தவரின் சிறப்புக்களையும் மதித்தல்.
  10. நமக்குள்ளேயே பிரிவினையையும் பகைமையயும் தூண்டும் துராக்கிரமப் புத்திக்குள் புதையுண்டு சாகாதிருத்தல்.


இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் சிந்திக்கவும் பேசவும்தான் நமது எழுத்துக்களை இங்கே நடுகின்றோம்.

இதற்கு எதிரானவர்களோடும் ஏளனம் செய்கின்றவர்களோடும் நமக்கு நட்புமில்லை;நாட்டமும் இல்லை.

ஊருக்கு நல்லது சொல்வோம்;நமக்கு
உண்மை தெரிந்ததைச் சொல்வோம்

என்ற பாரதியின் முரசை இங்கேயும் கொட்டுவோம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா

No comments: