//சாந்தோமில் கிறித்துவப்பணி ஆற்றிவந்த புனித தோமசிடம் நெருங்கிப்
பழகியும், ஞான உபதேசம் பெற்றும்
இயேசு பெருமானின் கொள்கைகளை நன்கு உணர்ந்திருந்ததாலுமே வள்ளுவர்
இத்தகைய சிறப்புமிக்க அற நூலை இயற்ற
முடிந்தது //.
என்று முகநூல் நண்பர் ஸ்ரீகந்தராஜா
கங்கைமகன் அவர்கள் ஒரு நிலைத் தகவலை
இன்று (29.8.2012) தனது முகநூல் பக்கத்தில்
பதிவு செய்திருந்தார்.
நான் இதை முற்றாக எதிர்க்கின்றேன்.
இதை என்றால்,பெரியார் சொல்லி
இருக்கும் கருத்தை.

உண்மைக்கும் நமது முன்னோரின் அறிவுசார்
சொத்துரிமைகளுக்கும் எதிரான இக்கருத்தைச் சொன்னதன்
மூலம் நமது மெய்ஞ்ஞானச் செறிவை-
பண்பாட்டை அந்நியர்க்கு அடமானம் வைத்து, மூடர்களின்
உச்சுக் கொட்டலை வெகுமானமாகப் பெறும்
விவஸ்தை கெட்ட சிந்தனையாக இது வெளிப்பட்டிருக்கிறது.
’தீக்குறளை ஓதோம்’ என்று ஆண்டாள்
பாடியது இத்தகைய தீய கருத்துக்கள்
கொண்ட செய்திகளை ஓத மாட்டோம்’ என்ற
ஞானத்தை நம்மிடையே நடுவதற்குத்தான்.
ஆனால் ’திருக்குறளையே தீய குறள் என்பதாகத்
திரிபு வாதம் கொண்டு அந்தத்
தீக்குறளை ஓத மாட்டோம்’ என்று
ஆண்டாள் சொன்னதாக ஒரு அடியாள் தெருக்கூட்டம்
சொதப்பித் திரியவில்லையா? அதுபோல்தான் இதுவும்.
‘பெரியார் சொன்னதே வேதம்’ என்று
மூடத்தனமாக நம்பும் கூட்டத்துக்கும் மத
வெறி உணர்வுகொண்டு கதைக்கும் கூட்டத்துக்கும் நான் வேறுபாடு காண்பதில்லை.
வள்ளுவன் காலத்துக்கும் புனிதர் தோமையரின் காலத்துக்கும்
முடிச்சுப் போட்டுப் பெரியார் சொன்ன கருத்து முற்றிலும்
ஆதாரமற்றது. அதை, அவரது மொழியிலேயே
சொல்வதானால் ‘வெங்காயம்’.
உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. கண்ணீர்தான்
வரும்: இந்த மொக்கை வாதத்தை
உரித்துப் பார்த்த மூடத் தனத்துக்காக.
வள்ளுவனின் வான் புகழை வரைமுறைக்குள்ளாக்கும் வக்கிரப் புத்தி கொண்ட இக்கருத்து
ஒரு செல்லாக் காசு.
“எப்பொருள் யார்
யார்
வாய்க்
கேட்பினும்;அப்பொருள்
பொய்ப்பொருள்
காண்ப
தறிவு”
என்பேன் நான்.
பெரியாரின் அறியாமையை இங்கே நினைவு படுத்திய
நண்பருக்கு நன்றி.
இவண்-
கிருஷ்ணன்பாலா
29.8.2012
No comments:
Post a Comment