Sunday, August 26, 2012

பெரியோரே,வாழ்த்துங்கள்!


அருமை நண்பர்களே,
வணக்கம்.

தேனியில் இன்று  (26.8.2012) காலை 11 மணி அளவில் எனது நண்பரும் போடித் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு V.பன்னீர் செல்வம் அவர்களின் பேத்தியும் அவரது மகன் V.P.மணிமாறன்- மேனகா தம்பதியின் புதல்வியுமான செள.நகுல்யாவுக்கு காதணி விழா நடைபெறுகிறது.

தென் மாவட்டங்களில் இம்மாதிரியான குடும்ப விழாக்களுக்கு குடும்ப உறவுகளும் பிற சமுதாயத்து நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்துவதும்
 உறவின் அடையாளமாகவும் நட்பின் நாட்டமாகவும் விருந்தில் கலந்து கொண்டு கம்பீரமாக போட்டி போட்டுக் கொண்டு   ‘செய்முறை’ என்னும் மொய்வைத்துத் தங்கள் உறவின் தகுதியை காட்டிக் கொள்வதும் வித்தியாசமான நடைமுறை.

பேனரில் உள்ள கவிதையைப்
படிக்கும் விருந்தினர்கள்
இம்மாதிரியான குடும்ப விழாக்கள், மன வருத்தத்தில் விலகி இருக்கும் உறவுகளைக் கூட,ஒன்று கூட வைத்து விடும் சிறப்பை மதுரை ,தேனி மாவட்டங்களில் காண முடிகிறது.

எனது அருமை நண்பரின் பேத்தியை வாழ்த்தி நான் எழுதி இருந்த கவிதையை மிகப் பெரிய ஃப்ளக்ஸ் போர்டாகவைத்து அமர்க்களப்படுத்தி விட்டார் குழந்தையின் தந்தையும் எனது அன்பிற்குரியவருமான திரு மணிமாறன்.

செள. நகுல்யாவுக்கு உங்களின் வாழ்த்தும் ஆசிகளும் எனது கவிதையோடு கலக்கட்டும் என்பதென் விழைவு.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
26.8.2012






1 comment:

Unknown said...

azhagaana kavithai ....arputhamanavarin kai vannathil....nandri ayya...