Saturday, September 6, 2014

குருவே அனைத்தும்!



நண்பர்களே,

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று வரிசைப் படுத்தி இவர்களை நாம் பயபக்தியோடு வணக்கம் செய்து வரவேண்டும் என்று பண்பட்ட வாழ்க்கை முறைமைக்கு முதல் சுழி போடுகிறது நமது அறநெறிச் சித்தாந்தம்.

உண்மையில் குரு என்று வணங்கப்படும் ஆசிரியனே அனைத்திலும் முன் நிற்கின்றான்.

எப்படி?

அன்னை,தந்தை,தெய்வம் என்ற முப்பொருளையும் தெரிந்திருக்கும் தேர்ந்த சிந்தனையை நம்முள் விதைக்கும் வித்தைக்குரியவரே குருதான்.

அந்தக் குரு அன்றி தாய்,தந்தையர் பெருமையை, தெய்வத்தின்பால் தெளிந்த நம்பிக்கையை நம்முள் உணர்த்துபவர் யாருமில்லை.

அவர் போதித்த அறிவைக் கொண்டுதான் உலகியல் வாழ்க்கையில் அனைத்தையும் மனிதன் உணர்கின்றான்.

பண்பட்ட அறிவுடையோர் எந்த நிலையிலும் குருவை வணங்குவதே வாழ்வென்றிருப்பர்.

’அந்த வாழ்வே வாழ்வாங்கு வாழும் முறை’ என நாம் தெளிந்திருக்க,இந்த ஆசிரியர் தினம் நினைவு படுத்துகிறது.

குரு என்ற அந்த உறுபொருளை நான்,

‘குருவே தாணு மால் அயன் ஆகும்;
குருவேதான் என்பெற்றவர் ஆகும்;
குருவேதான் என் குரவனும் ஆகும்;
குருவேதான் நான் நினைப்பதும் ஆமே!

என்று -
நித்தம் வணங்கும் வாய்ப்பை குருநாதர் வழங்கி இருக்கிறார் என்பதில் நெகிழ்கிறேன்;மகிழ்கிறேன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.9.2014

No comments: