Thursday, September 11, 2014

இது ஒரு சூட்டுக் கோல்!




பாரதியைப் ’பார்ப்பான்’ என்று பறை’கின்றவர்க்கெல்லாம் இது ஒரு சூட்டுக் கோல்!

தமிழா,தமிழா!
----------------------------

தமிழா,
உனக்கு ஹிந்தி,மராத்தி முதலான வடநாட்டுப் பாஷைகள் தெரிந்திருந்து. ’அந்தப் பாஷையிலே பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன?’ என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால்,தமிழ் நாட்டிற்கு எத்தனை எத்தனை நன்மை உண்டாகும்?

’தமிழ்.தமிழ்,தமிழ்’  என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்.

ஆனால்,புதிய புதிய செய்தி,புதிய புதிய யோசனை,புதிய புதிய உண்மை,புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தம்பீ,
நான் ஏது செய்வேனடா?
தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது.

தமிழனைவிட மற்றொரு ஜாதிக்காரன் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லைதமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

-மகாகவி பாரதி
1915 ஜூலை 19.1915ல் எழுதிய கடிதங்களிலிருந்து

(நன்றி: இளந்தமிழன் மாத இதழ் நவம்பர்-2009 –மலர்-8/இதழ் 3)

#பாரதியை நான் நேசிக்கவும் வாசிக்கவும் சுவாசிக்கவுமான தூண்டல் சிந்தனைகளில் ஒன்று இது.#


இவண்-
கிருஷ்ணன்பாலா

11.9.2014

No comments: