Thursday, July 3, 2014

‘மாஸ்டர் யோகா’வின் ’மாஸ்டர்’

றிவார்ந்த நண்பர்களே, 
இன்றைய நவீன உலகின் வாழ்க்கையில் மனிதனின் தேவை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அவனது தேவைக்கேற்ப அறிவியல் கண்டுபிடிப்புக்களும் பெருகி வருகின்றன.

ஆனால்,பண்டைய மனிதனின் வாழ்வியல் முறைகளும் அவனது பழக்க வழக்கங்களும் இன்றைய மனிதனின் வாழ்வியல் முறைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் முற்றிலும் மாறுபட்டதான வாழ்க்கைமுறையாக அமைந்து, முன்பில்லாத நோய்களும் பிரச்சினைகளும் புதிது புதிதாக உருவாகி, ஆரோக்கியம் என்பது மனித குலத்துக்கே சவாலாகி வருகின்றது.

மனிதன் அன்றும் பிறந்தான்; இறந்தான்.
இன்றும் அதே நிலைதான்

எனினும், அன்றைய மனிதன் ஆனந்தமாக வாழ்ந்தான்.

அன்று மெய்ஞ்ஞானம் தேடும் மேலான எண்ணங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தான் அவன்.

’மனம் செழுமையுற்றிந்தால் நோய்களும் கவலைகளும் தன்னை அண்டுவதில்லை’ என்ற உண்மை அவனுக்குத் தெரிந்திருந்தது.

இன்றைய மனிதன் கவலைகளும் சோர்வுமாகத் தன் வாழ்நாளைத் தூக்கத்தில் பாதியாகவும் நோய் கொண்டலைந்து நொந்து வாழும் துக்கத்தில் மீதியாகவும்தான் ஆயுளைத் தள்ளிக் கொண்டு நடக்கின்றான்.

காரணம்,
இன்றைய மனிதனின் வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள் பெருகிவிட்டிருப்பது.

விஞ்ஞானம் வளர வளர மனிதனுக்குத் தேவைகளும் அதைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான போராட்டமும் பற்றாக் குறையும் அவனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருப்பதால் அதன் ‘By-Product களாய் (அதாவது பக்க விளைவுகளாக) சோர்வுகளும் நோய்களும் உடலையும் உணர்வையும் வருத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைய மனிதர்களுக்கு ஏதோ ஒருவகையில் ஏதாவது ஒரு நோய் அல்லது மனக்கவலை பற்றிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இன்றைய கால கட்டத்தில், மருத்துவர்களைத் தேடிச் சென்று பணத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற அவல நிலை மனித குலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று பல ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவ மனைகளும்  ஊர்தோறும் பெருகி விட்டபோதிலும் மனிதர்களுக்கு  ஏற்படும் நோய்களை முற்றாகக் குணப்படுத்துவதாக அவை இல்லை.

பணத்தைச் செல்விட்டுக் கொண்டே இருந்தாலும் நோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும்  நோயைக் கண்டுபிடிப்பதிலும் அதன் காரணத்தை அறிவதிலும் இன்றைய மருத்துவத்தால் இயலாத நிலைதான் தொடர்கிறது.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், எவ்வளவுதான் மருந்துகள்தான் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை எல்லாம் மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

இருந்தபோதும் இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர் நவீன மருத்துவத்தையே நம்புகிறார்கள். நோய்களை வளரச் செய்யும் சூழ்நிலையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்களே தவிர இயற்கையாகவே ஆரோக்கியமாக உடலையும் மனதையும் வைத்துக் கொள்ள்ள வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் வாய்த்திருக்கவில்லை.

இன்றைய யுகம் ’கணினி யுகம்’ என்று அறியப்பட்டபோதும் நோய்களும் அமைதியின்மையும் பீடித்திருக்கும் காலமாகவே பரவி நிற்கிறது; மனிதனுக்குப் பணமும் வசதிகளும் பெருகி விட்டபோதிலும் அற்றொடு பெருகி நிற்கும் கவலையைப் போக்கி, மனித குலத்தைச் செழிக்கவைக்கும் மருந்தை மட்டும் எவராலும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

அதற்கு மாற்றாகத்தான், எளிய முறையில் இயற்கையோடு இயைந்து வாழும் ஆனந்த நிலையைக் கற்பிக்கின்ற யோகாப் பயிற்சி முறைகள் இருக்கின்றன.

நம் முன்னோர் நமக்குப் புராதனச் சொத்தாக அதைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த அற்புதமான அறிவு ஞானத்தை நாம் உணர்வோமானால் அதுதான் நம்மை வளமும் நலமும் மிகுந்த மானுடர்களாக இம்மண்ணில் வாழ வைக்கும்; நம் சந்ததியினரையும் பெருமைபடப் பிறக்க வைக்கும்.

நமது இந்தியப்பாரம்பரியத்தின் முன்னோடிகளான ரிஷிகள், இம்மாதிரியான பிற்கால மனிதர்களின் பிசகான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டுதான் உலகில் வேறு எந்த நாட்டிலும் சொல்லப்படாத இந்த ’சூக்கும ஞானக் யோகக் கலை’யை அறிவுள்ள மாந்தர் கடைப்பிடித்து உய்யும் வகையில் உரைத்துச் சென்றிருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தையும் வென்று அதனைச் சரண் அடையவைக்கும்  மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை மையமாகக் கொண்டிருக்கும் ’யோகா அறிவு’ என்பது உலகின் அறிவு சான்ற மக்கள் யாவரும் வியக்கும் நமது இந்தியப் பாரம்பரியத்தின் இணையற்ற சொத்து.

வேதகாலம் தொட்டு ஈடிலா இறைஞான சக்தியை மனிதருக்குள் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த ‘யோகாப் பயிற்சி முறை’ என்பதை இந்த உலகிற்கு எடுத்துரைத்து நிரூபித்தவர்கள் நம்நாட்டு ரிஷிகளும் சித்தர்களும்தான்.

’யோகா சக்தி’ மூலமே அவர்கள் ’சாகாக் கலை’என்னும் காயசித்தியை அடைந்திருந்தனர்.

அதைக் கொண்டேதான்,’இறைவன், ஆன்மா (மனம்), உடல் மூன்றையும் ஒருமைப்படுத்திய ஒப்பரிய தெய்வீக ஆற்றலைப் பெற்றனர்.

’தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்ற பரந்த அன்பினோடு அவர்கள் ’யோக சித்தியின் மெய்ஞ்ஞானப் பயன்களை உலக மாந்தர்க்கு எடுத்துரைத்து,தூய்மையும் ஆரோக்கியமும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இம்மண்ணுலகை நிரப்ப முயன்றனர்.

அத்தகைய ரிஷிகள் காட்டிச் சென்ற ’முறையான யோகாப் பயிற்சிகளை’க் கற்று, அதைத் தெய்வீக ஞான ஈடுபாட்டோடு பிறருக்குக் கற்றுத்தரும் தெள்ளறிவு மிக்க யோகா மாஸ்டர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் யோகா மாஸ்டர்களில் எளிமையும் நேர்மையும் ஞானமும் கொண்ட தனிச் சிறப்புக்களோடு இன்று முறையான யோகாப் பயிற்சியைக் கற்றுத் தருகின்றவராகவும் மருந்தில்லாமலே சில அற்புதமான யோகா முறைகளை நோயாளிகளைச் செய்யவைத்து நோய் தீர்க்கும் ‘யோகா தெரபிஸ்ட்’டாகவும் எனது உற்ற நண்பராகவும் திகழ்கிறார் ஒருவர்.
 
வெளிநாட்டுப் பெண்மணிகள் மாஸ்டர் லாராவிடம் யோகா கற்கும் காட்சி
நான் பெற்றுள்ள நட்பை இதைப் படிக்கின்ற நண்பர்களும் பெற்று பயனுறு வாழவேண்டும் என்பது என் நோக்கம்.

நண்பர் லாரா அபிஷேக்.
தமிழ் நாட்டுக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய பொக்கிஷம்.
மாஸ்டர் யோகாவின் மாஸ்டர்
  லாரா அபிஷேக்
வியக்கத்தக்க யோகாக்கலை அறிவைப் பிறவியிலே பெற்றவராகி, அதைத் தனது சொந்த அறிவினால் விருத்தி செய்து கொண்டவர்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உயர் கல்வியைக் கற்கும் வசதி இன்றி அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றவர் கற்ற கல்விக்கும் மேலான வருவாயைத் தந்த வேலையில் சேர்ந்த போதும் இரவு பகலாக அவருக்குள் யோகாக் கலை அறிவு’ பற்றிய  உணர்வு மானசீகமாகத் தோன்றிக் கொண்டே இருந்தது.

பிழைப்புக்காக வாழும் சூழ்நிலையைக் கைவிட்டுத்  தாய் நாட்டுக்கே போய் உண்மையான யோகா ரகசியங்களை உரிய முறையில் தெரிந்து கொண்டு உலகத்தார்க்கு யோகாக்கலையின் உன்னதமான பயிற்சியாளர்களை உருவாக்கவும் தன்னை நாடிவருவோரின் நோய்களை யோகாப் பயிற்சிகள் மூலம் மருந்தில்லாமல் குணப்படுத்தும் மாஸ்டராக உயரவும் அந்த  ‘மானசீக உணர்வு தூண்டித் தூண்டி,’மாஸ்டர்யோகாவின் மாஸ்டராகும் ’காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; புறப்படு புறப்படு’ என்ற வலியுறுத்தலை உள்ளுணர்வு கட்டளையாக இட்டுக் கொண்டே இருந்தது.

அதன் அழுத்தம் அதிகமாகவே ஒருநாள் அரேபியாவில் கிடைத்திருந்த நல்ல வருமானம் தந்துவந்த வேலையை தோளில் போட்டிருக்கும் துண்டுபோல் உதறித் துணிவோடு தமிழ் நாட்டுக்கே வந்தார்.

சென்னைக்கு வந்த லாரா, இந்தியாவில் பிரசித்தி பெற்றிருந்த யாக்ஞவல்கியர் பாரம்பரிய யோகாப் பயிற்சி மையத்தை நடத்தும் மிகப் பிரபலமானவரிடம் சென்று தனது விசேஷமான யோகாப் பயிற்சி முத்திரைகளின் படத் தொகுப்பைக் காட்டினார்.

அதுவரை வேறு எவரும் செய்து காட்டியிராத அற்புதமான யோகா முத்திரைகளை லாராஅபிஷேக்கிடம் உருவாகி இருப்பதைக் கண்டு வியந்த அவர், இவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் அங்கு யோகாப் பயிற்சியாளராக இருந்த லாராவுக்கு அக்கலையின் வியக்கத்தக்க அறிவும் ஆராச்சியும்  கைகூடிக்கொண்டே வந்தன.

நண்பர்கள் பெருகினர்; நம்பிக்கையும் பெருகிற்று.

பிறரிடம் பணியில் இருந்து கொண்டு யோகாக் கலைஞானத்தை அடகு வைத்து வாழும் நிலையைத் துறந்தார்.

இறைஅருளால் தனக்குள் வாய்த்திருக்கும் யோகாக் கலையை உலக மாந்தர்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அக்கலையினால் மனிதர்களுக்கு ஆரோக்கியமும் ஆனந்தமும் பெருக வேண்டும்; நோயற்ற உலகில்  மனிதர்கள் நடக்கப் பாதை அமைக்கும் பணியில் பங்கு கொள்ள வேண்டும்’ என்ற லட்சியத்தை வலுப்படுத்திக் கொண்டுவிட்டார்.

இதன் காரணமாகத் தனது யோகாப் பயிற்சிகளைப் போதிப்பதற்கென்று ஒரு யோகா மையத்தை இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்.

’விநியோகா ஹீலிங் சென்டர்’ (Vinie Yoga Healing Center) என்பது இவரது யோகாமையத்தின் பெயர். சென்னையில் பெசன்ட் நகரில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

யோகாவின் ஆழமான நேர்த்தியான,எளிமையான பயிற்சி முறைகளை தன்னிடம் பயில வருகின்றவர்களுக்குக் கற்றுத்தருவது இவருடைய தனிச் சிறப்பு.

இம்மையத்தின் மூலம் ஒருவருடைய உடல் மற்றும் மன நிலைக்கேற்ப ஆசனப் பயிற்சி, பிராணயாமப் பயிற்சி, பிராணக் கிரியாப் பயிற்சி, தியானப் பயிற்சி முதலானவற்றைப் போதிக்கிறார்.

மனதினைத் தூய்மைப்படுத்தி உடலையும் உணர்வுகளையும் ஒன்றிணைத்து உற்சாகமுறச் செய்யும் அற்புதத்தை உருவாக்குவதில் இவர் ஒரு ’மாஸ்டர் ’என்பதை அனுபவத்தின் மூலம் எவரும் உணர முடியும்.

தன்னிடம் இயற்கையாகவே குடிகொண்டு வளர்ந்து வரும் யோகா ஞானத்தைக் கொண்டு உடலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நோய்களை எல்லாம் மருந்தே இல்லாமல் டாக்டர்களே வியக்கும்படி முழுமையாகத் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் நோய் தீர்க்கும் யோகா தெரபி முறையில் நோயாளிகள் எல்லோருக்கும் பொதுவான யோகா முறைகளைச் செய்ய வைக்காமல் ஒவ்வொருடைய உடல் அமைப்புக்கு ஏற்றவகையிலான யோகா உத்திகளை இவராக அனுமானித்துத் தருகின்ற பயிற்சிகள்தான் நோயாளிகளின் நோய் விரைவில் குணமாகக் காரணமாகின்றது.

இந்த முறையில் டாக்டர்களால் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராமல் நோயாளிகளின் தன்னம்பிக்கையைச் சிதைத்து வந்த நோய்கள், இவருடைய யோகாப் பயிற்சி முறையால் வியக்கத்தக்கவாறு ஓரிரு நாட்களில் கட்டுப்படுத்தப்பட்டு இரண்டு மூன்று மாதங்களில் முழுமையாகக் குணமாகி விடுவதுதான்.

குறிப்பாக முதுகுவலி, இடுப்பு வலி, ஜவ்வு விலகி இருத்தல், சியாட்டிகா (நரம்பு அழுத்தம்) கழுத்து வலி, தலைச் சுற்றல், தோள் பட்டை வலி, கை,கால் மரத்துப்போதல், ஆஸ்துமா,சைனஸ், உயர் ரத்த அழுத்தம்,தூக்கமின்மை,மன அழுத்தம்,குதிகால் வலி,ஒற்றைத் தலைவலி மற்றும் உடல் பருமன்,பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினகள் என்று பலவிதமான உடல் மற்றும் மனப் பாதிப்புக்களைத் தனது யோகாப் பயிற்சி முறைகள் மூலம் மிக எளிதில் தீர்த்து வைத்து அவர்களுக்குக் கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

உலகிலேயே வேறு எவரும் சொல்லாத முறையில் நவீன உத்திகள் மூலம் இவர் கற்றுத் தரும் யோகாப் பயிற்சிகள் வியப்பான ஆற்றல் கொண்டவை. தொடுவர்மக் கலையும் பாரம்பரிய யோகா முறைகளும் இணைந்த பயிற்சி முறையை இவராகவே கண்டுணர்ந்து போதித்து வருகிறார்; டாக்டர்களால் குணமாக்க முடியாத நோய்களை எல்லாம் குணமாக்கிச் சாதித்து வருகிறார்.

மாஸ்டர் லாரா அபிஷேக் அவர்கள் மற்ற யோகா மாஸ்டர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட யோகாக் கலை வித்தகர்; ’மாஸ்டர் யோகா’வின் மாஸ்டர்தான்..

அன்பும் எளிமையும் ஆடம்பரமற்ற நட்பும் கொட்டிப் பழகும் பண்பாளர்.

இக்கலை மூலம் மனிதர்களுக்கு நோயற்ற வாழ்வில் தலை நிமிர்ந்து வாழும் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் தனது நோக்கம் என்கிறார்.

யோகாப் பயிற்சியை உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கற்றுத்தந்து,அவர்களையும்  யோகாப் பயிற்சியாளர்களாக உருவாக்கும்  பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஐரோப்பா, ஆஸ்திரேலியா,மலேஷிய, சிங்கப்பூர் மற்றும் துபாய் முதலான அரபு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற் கொண்டு வருகிறார்.

விரைவில் பல நாடுகளிலும் தனது ‘விநியோகா ஹீலிங் சென்டரின்’ கிளைகளைத் தொடங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

டாக்டர்களாலும் தீர்க்க முடியாத உடல் பாதிப்புக்கள் கொண்டோரும் இவரிடம் யோகாக் ககலையைக் கற்க விரும்புவோரும் தொடர்பு கொண்டு, திரு லாரா அபிஷேக் அவர்களை நேரில் சந்திக்கலாம்.

தொடர்புக்கு:
----------------------- 
Lara Abhisheik
Vinie Yoga Healing Centre
(Centre For Higher Learning in Yoga and Yoga Therapy)
No.7, 25th Street, Besant Nagar
CHENNAI-600 090

mail: vhcyogatherapy@yahoo.in
   &  vhcyogatherapy@gmail.com

பயன் பெறுங்கள் நண்பர்களே! 

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
3.7.2014

No comments: