அறிவார்ந்த நண்பர்களே,
’’ஈழப் பிரச்சினையை ஈனப்பிரச்சினை ஆக்காதீர்’” என்று முன்பு நான் எழுதி இருந்தேன்.
இதோ அந்த ஈனப்பிரச்சினைக்கு முடிவு கட்டியாகி விட்டது.
“ஈழம் தேவையில்லை’ நாங்கள் .ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரித்து இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலக்கிறோம்’’ என்று இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று அறிவித்து விட்டது.
இலங்கை நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவே கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்தக் கொள்கை முடிவானது உலகின் அனைத்து நாடுகளாலும் குறிப்பாக இந்திய மக்களால் சொல்லப்போனால் இலங்கைவாழ் தமிழர்தம் இன்னல் என்றுதீரும் என்று கவலை கொண்ட தமிழருக்கெல்லாம் தித்திப்பூட்டும் செய்தி.
இதுதான் இலங்கைத் தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கும் அவர்களுடைய அறிவுத் திறன் மேம்பாட்டுக்கும் சரியான அரசியல் நிலை.
’தனி ஈழம்’ தனி ஈழம்’ என்று நம் செவிகள் கிழிய கத்திக் கொண்டிருந்த வெத்து வேட்டுக் காகிதப்புலிகள் இனி தங்கள் உதார்களைக் காட்டிக் கொண்டு ஏமாளித் தமிழர்களை மிரட்ட முடியாது.
’நாயர் பிடித்த புலிவாலாய், ஈழப்பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பேந்தப்பேந்த முழித்துக் கொண்டிருந்த அரசியல் வியாபாரிகள் அப்படா இனியாவது நாம் தப்பித்துக் கொள்ள வழி ஏற்பட்டு விட்டதே” என்று உள்ளுக்குள் பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதுவரை ஈழப்பிரச்சினையைக் காட்டி,இலங்கைத் தமிழர்களைத் தேசியப் பயங்கரவாதிகளாய்ச் சித்தரித்து இலங்கையின் ஆளும் கட்சி மகிந்தா ராஜ பக்ஷேவின் தலைமையில் நடத்தி வந்த காட்டுத் தர்பார் உலக அரங்கில் இனி எடுபடாது போய் விடும்.
தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்குச் சிங்களவர்களுக்குச் சமமான ஜனநாயக உரிமைகளையும் சட்டச் சலுகைளையும் இலங்கை அரசு இலங்கைவாழ் தமிழர்களுக்கு அதன் அரசு தந்தே ஆக வேண்டிய நிலை உருவாகி விட்டது.
இதுவரை இலங்கைத் தமிழர்களை தங்கள் கைப்பாவைகளாகக் கொண்டு ஆட்டிப்படைத்த பிரிவினை வாதப்பேய்களான தமிழ் நாட்டு அயோக்கிய அரசியல் எத்தர்களின் கொட்டம் அடங்கியாக வேண்டிய சூழ்நிலையை நரேந்திர மோதியின் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் ஒரு தலைமுறையினரின் வாழ்க்கையையே சீரழித்து,அடுத்த தலைமுறையை அகதிகளாக்கி, வரும் தலைமுறையினரை அடிமைகளாகவே ஆக்கிக் கொண்டிருந்த இந்த’ ஈழப்பிரச்சினை- ஒரு ஈனப்பிரச்சினை’ என்பதை இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொண்டு துணிச்சலாக அதைக் கைவிட்டதன் மூலம் இங்குள்ள ஈனர்களின் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதில் அளவற்ற பூரிப்புக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் இப்படியாக நரேந்திர மோதியின்வெற்றிக்குப் பிறகு வந்து விட்டது என்பதில் தமிழ் இனம் வாழ எண்ணும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டுகிறது நண்பர்களே.
இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014

இதோ அந்த ஈனப்பிரச்சினைக்கு முடிவு கட்டியாகி விட்டது.
“ஈழம் தேவையில்லை’ நாங்கள் .ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரித்து இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலக்கிறோம்’’ என்று இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று அறிவித்து விட்டது.
இலங்கை நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவே கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்தக் கொள்கை முடிவானது உலகின் அனைத்து நாடுகளாலும் குறிப்பாக இந்திய மக்களால் சொல்லப்போனால் இலங்கைவாழ் தமிழர்தம் இன்னல் என்றுதீரும் என்று கவலை கொண்ட தமிழருக்கெல்லாம் தித்திப்பூட்டும் செய்தி.
இதுதான் இலங்கைத் தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கும் அவர்களுடைய அறிவுத் திறன் மேம்பாட்டுக்கும் சரியான அரசியல் நிலை.
’தனி ஈழம்’ தனி ஈழம்’ என்று நம் செவிகள் கிழிய கத்திக் கொண்டிருந்த வெத்து வேட்டுக் காகிதப்புலிகள் இனி தங்கள் உதார்களைக் காட்டிக் கொண்டு ஏமாளித் தமிழர்களை மிரட்ட முடியாது.
’நாயர் பிடித்த புலிவாலாய், ஈழப்பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பேந்தப்பேந்த முழித்துக் கொண்டிருந்த அரசியல் வியாபாரிகள் அப்படா இனியாவது நாம் தப்பித்துக் கொள்ள வழி ஏற்பட்டு விட்டதே” என்று உள்ளுக்குள் பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதுவரை ஈழப்பிரச்சினையைக் காட்டி,இலங்கைத் தமிழர்களைத் தேசியப் பயங்கரவாதிகளாய்ச் சித்தரித்து இலங்கையின் ஆளும் கட்சி மகிந்தா ராஜ பக்ஷேவின் தலைமையில் நடத்தி வந்த காட்டுத் தர்பார் உலக அரங்கில் இனி எடுபடாது போய் விடும்.
தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்குச் சிங்களவர்களுக்குச் சமமான ஜனநாயக உரிமைகளையும் சட்டச் சலுகைளையும் இலங்கை அரசு இலங்கைவாழ் தமிழர்களுக்கு அதன் அரசு தந்தே ஆக வேண்டிய நிலை உருவாகி விட்டது.
இதுவரை இலங்கைத் தமிழர்களை தங்கள் கைப்பாவைகளாகக் கொண்டு ஆட்டிப்படைத்த பிரிவினை வாதப்பேய்களான தமிழ் நாட்டு அயோக்கிய அரசியல் எத்தர்களின் கொட்டம் அடங்கியாக வேண்டிய சூழ்நிலையை நரேந்திர மோதியின் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் ஒரு தலைமுறையினரின் வாழ்க்கையையே சீரழித்து,அடுத்த தலைமுறையை அகதிகளாக்கி, வரும் தலைமுறையினரை அடிமைகளாகவே ஆக்கிக் கொண்டிருந்த இந்த’ ஈழப்பிரச்சினை- ஒரு ஈனப்பிரச்சினை’ என்பதை இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொண்டு துணிச்சலாக அதைக் கைவிட்டதன் மூலம் இங்குள்ள ஈனர்களின் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதில் அளவற்ற பூரிப்புக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் இப்படியாக நரேந்திர மோதியின்வெற்றிக்குப் பிறகு வந்து விட்டது என்பதில் தமிழ் இனம் வாழ எண்ணும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டுகிறது நண்பர்களே.
இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014
1 comment:
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் இப்படியாக நரேந்திர மோதியின்வெற்றிக்குப் பிறகு வந்து விட்டது என்பதில் தமிழ் இனம் வாழ எண்ணும் அனைவருக்கும் மகிழ்ச்சி ...நிதர்சனமான வார்த்தைகள்
Post a Comment