Saturday, July 19, 2014

தீவிர வாதத்தின் திசை!



                    


அறிவார்ந்த நண்பர்களே,

ரஷ்யா-உக்ரைன் எல்லைப் பகுதியில் வான் வழியில் பறந்த மலேஷியன் பயணிகள் விமானம் MH 17  சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கிறது.

சர்வதேச விமான சேவையில் மலேஷியன் விமானங்களுக்கு இது இரண்டாவது பெரிய அடி;இடி.

இதன்மூலம் ‘விமானப் பயணம்’ என்பது  ‘உயிருக்கு உத்தரவாதமில்லாதது’ என்னும் அச்சம் விமானப்பயணிகளிடையே  வேரூன்றத் தொடங்கி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இதே மலேஷிய நாட்டு MH 17 ரகப் பயணிகள் விமானம், சீனக் கடல் பகுதி அருகே ஆழ்கடலில் வீழ்ந்து எந்த அறிவியல் முயற்சியாலும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும் அவலம் நீடித்திருக்கும் நிலையில், இப்போது மறுபடியும் உலகத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் உக்ரைன்-ரஷ்ய எல்லையில் இதே மலேஷிய நாட்டு இன்னொரு  விமானம் பயணிகளுடன் ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

உலகில் தீவிரவாதத்தின் எல்லைகளும் உத்திகளும் வளர்ந்து வருவதற்கும் அதன் பலம் கூடி வருவதற்கும் இந் நிகழ்வுகள்  ஆதாரம்.

இதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்ற போது பல்வேறு ஊகங்கள் சிறகடிக்கத் தொடங்கி உள்ளன.

அவற்றில் மூன்று முக்கிய ஊகங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. மலேஷிய நாட்டுக்குள் தீவிரவாத இயக்கத்தின் வேர் பற்றி இருப்பது.அதை வெளி உலகம் அறியாதவாறு மலேஷியாவே மறைக்கின்றதோ என்னும் `யூகம்.

2.பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்வதற்கான ’வான் வழித் தாக்குதல் ஒன்றே தங்களுக்கு எளிதானது என்பதைச் செயல் படுத்திட, இந்தியாவுக்கு எதிரான  தீவிரவாதிகளின் சதித்திட்ட திட்டத்தின் முன் வரைகளோ இம்மாதிரியான வான்வழித் தாக்குதல்?’என்ற ஐயப்பாடு.

3. சர்வதேச அளவில் பலம் பெற்று வரும் அல்கொய்தாவின் ஆயுத பலத்துக்கு எடுத்துக் காட்டாக  இம்மாதிரியான பயணிகள் விமானங்களை வீழ்த்தி சர்வதேசம் சமுதாயத்தை அச்சுறுத்தும்  வேலைகளை அந்தத் தீவிரவாதிகள் இயக்கம் தொடங்கி உள்ளது’ என்ற செய்திகளின் உண்மைத் தன்மை.

இம்மாதிரியான தீவிரவாதச் செயலானது வளர்ந்து வரும் அறிவியல் உலகத்துக்கு அபாயகரமான எதிர் விளைவுகளின் வித்துக்களாய் வீறு கொண்டெழுந்துள்ளன என்பதையும் தீவிரவாதத்துகென்று ஒரு புதிய திசை வீசத் தொடங்கி இருக்கிறதென்பதையும் நாம் உதாசீனப்படுத்தி விட முடியாது,

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014

No comments: