Monday, June 18, 2012

நட்டம் அவருக்கில்லை;நாட்டுக்குத்தான்!


நண்பர்களே,

“இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மறுபடியும் நான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் அமர விரும்பவில்லை” என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் 2012 குடியரசுத்தலைவர் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியரால்
விரும்பப்பட்டவருமான டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் அறிவித்து விட்டார் என்ற செய்தி
நம் அனைவரையும் வாடச் செய்துள்ளது.

சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் நாம் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் காண விழைந்தோம்.

ஒரு உண்மையான தமிழனைத் தங்கள் தலைக்குமேல் வைத்து அழகு பார்க்க கலைஞரும் விரும்பவில்லை; மேடம் ஜெ,அவர்களும் விரும்பவில்லை.

ஊழலின் ஒட்டு மொத்தக் குத்தகைதாரர்களாய் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை,முறைமாற்றிக் கொள்ளும் இவர்களுக்கு அந்தக் குத்தகைச் சட்டத்தையே ரத்து செய்யத் துடிக்கும் ‘லோக்பால் மசோதாவும் இந்த டாக்டர் கலாம் அவர்களும் ஒன்றுதானே?

எப்போதும் எங்கும் கலைஞர் அவர்களுக்கு எதிரான முடிவுகளையே
எடுக்கும் மேடம் ஜெ.அவர்கள், நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் கொண்டு வரும் விஷயத்தில் திரைமறைவில் ஒன்று கூடி, கூட்டணி வைத்து, கலாம் அவர்களுக்கு ஆதரவான தனிக் கட்சியைத் தோற்கடித்து விட்டனர்.

இதனால், கலாம் அவர்களுக்கு நட்டம் இல்லை;நமக்குத்தான்;இந்த நாட்டுக்குத்தான்.

கலாம் அவர்களின் அறிக்கையின் நுட்பமான வரிகளைக் கவனியுங்கள்;
நல்லோருக்குக் கண்ணீர் வரும்.

அதில் நீந்தித்தான் நாம் கரை ஏறமுடியும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.6.2012
---------------------------------------------------------------------------------------




APJ Abdul Kalam
OFFICIAL STATEMENT
--------------------------------

My dear friends,

You are aware of the developments in the run up to the Presidential election. 
Though I have never aspired to serve another term or shown interest in contesting 
the election, TMC Chief Mamata Banerjee, other political parties wanted me to be their
candidate. Many, many citizens have also expressed the same wish. It only reflects their
 love and affection for me and the aspiration of the people. I am really overwhelmed by 
this support. This being their wish, I respect it. I want to thank them for the trust they 
have in me.

I have considered the totality of the matter and the present political situation, and decided not to contest the presidential election 2012.

APJ Abdul Kalam
18th June, 2012


No comments: