Monday, August 8, 2011

தொடரும் எனது பயணம்.

நண்பர்களே,
வணக்கம்.

உலகளாவிய பார்வை கொண்ட ஊர்க்குருவி நான்.

பார்வைக்கு ஊர்க் குருவிதான்; ஆனால்,பார்ப்போரின் மனதை ஊடுருவி விடும் வல்லூறு என்பதை வரலாறு சொல்லும்.


உண்மையைச் சொல்வது;
உண்மையைப் பார்ப்பது;
உண்மையைக் கேட்பது...

இதில் உறுதி எடுத்துக் கொண்டு உலா வரும் கொள்கை எனது;


முகவரிகளில் வாழாமல் எழுத்துக்களில் வாழும் லட்சியம் கொண்டதென் மனது.


எண்ணிக்கையற்ற நண்பர்களைத் தேடிச் சேர்க்க விரும்பாமல்,
எண்ணிப் பார்க்கும் நண்பர்களை இணைப்பதற்காக எனது பயணத்தைத் தொடர்கிறேன்….

என்னோடு பயணத்தில் விருப்பம் கொண்டோருக்கு இது ஒரு இனிய நறுஞ் சோலைதான்.

இவண்-
கிருஷ்ணன் பாலா
8.8.2011

1 comment:

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.