அறிவார்ந்த நண்பர்களே,
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!
என்பது திருமூலர் வாக்கு.
அவரது வாக்கையே எனக்கு வழங்கப்பட்ட அதிகாரமாய்க்
கொண்டு நான் தமிழை,அதன் உயர் நெறிகள் ஓங்கியிருக்க
உயிர்ப்புடன்
செய்து தமிழன்னைக்கு அணிகலன் ஆக்கி
வருகின்றேன்.
ஆனால்,அக்கிரமத்தையும் அயோக்கியத்தனங்களையும் தனது
அணிகலன்களாகக் கொண்டு, கடந்த நான்கு மாதங்களாக ஆர்ப்பரித்தும்
அடங்காது திமிரியும் வந்தவன், இன்று அடிபட்ட பாம்பென ஓடி ஓடி
ஒளிகின்றான்;அடைக்கலம் தேடித் தேடி அலைகின்றான்,
பார்த்தீர்களா?.
உள்ளொன்றும் புறம் ஒன்றும் பேசித் திரிந்தவன்; ஊத்தைச் சரீர மயக்கத்தில் உப்பித் திரிந்தவன் இன்று தப்பிக்க வழியின்றித் தடுமாறுகின்றான்.
“தானே கடவுள்;தன்னிடம் சரண்
அடைகின்றவர்களே ‘ஜீவன் முக்தி’யை
அடைகின்றார்கள் என்ற ஒரு சண்டாளத்
தத்துவம் பேசி வந்தவன் போலீசாரிடமும் வழக்கு மன்றங்களிடமும் சரண்
அடைந்து கெஞ்சுகின்றான்.
இவனுடைய கால் அழுக்குகளைக் கழுவிக்
குடித்த கபோதிப் பக்தர்கள் பலர்
இன்று,தங்களுடைய பாத்ரூம்களில் அவ்வாறு குடித்ததை எண்ணிக்
குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்கள் தலையை
வெளியில் காட்ட முடியாமல்
முக்காடு போட்டு முனகிக் கொண்டு
சபிக்கின்றார்கள்,தங்கள் மாஜிக் கடவுளை.
நண்பர்களே.
இத்தகைய இழிநிலை கொண்ட ஒருவன்
யாரென உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
கடந்த வார ‘ஜூனியர் விகடன்’
இதழைப் படித்தவர்களுக்கு இவன் யாரெனத் தெரிந்திருக்கும்;இவனுடைய சண்டாளத்தனத்தின் பெண்டாளும்
பேய்த் தனம் புரிந்திருக்கும்
என்னுடைய கட்டுரைகளை இங்கு கடந்த நான்கு
மாதங்களாகப் படித்து வருபவர்களுக்கு எனது உண்மைத்
தமிழின் உறுதிமிக்க சாடல்களின் இலக்கு முற்றிலும் விளங்கி
இருக்கும்.
நண்பர்களே,
’ஜீவன் முக்தி’என்பது பக்குவப்பட்ட
ஆன்மாவின் இறுதி நிலை.
சித்தரும் முத்தரும் மகரிஷிகளும் தேடி நின்ற உயர்
கலை.
அதைக் கண்டவர் விண்டதில்லை;விண்டவர்
கண்டதில்லை.
ஜீவன் முக்தியை அடைவதற்கான வழிகளைத் தேடிச் சென்ற முத்தர்கள்
உணர்ந்தவை வேதங்கள்;மொழிந்தவை உபநிஷதங்கள்.
இதிகாசங்களும் புராணங்களும்தான் அவற்றின் விரிவுரைகளும் விளக்கவுரைகளும்.
இந்த மண்ணில் இனி எவனும்
புதிய புத்தனாகிக் போதிக்கத் தேவை இல்லை; இருக்கின்ற
வேத,உபநிஷத, சித்தர் பாடல்களைச்
சேவித்து வந்தாலே போதும். ஜீவன்
முக்திக்கு உகந்த நெறி யாதென
விளங்கும்.
ஆனால் இந்தக் கயவன்;கபட
வேடதாரி நித்தி,காவிச் சட்டையையும்
உத்திராட்சக் கொட்டையையும் அணிந்து கொண்டு, புத்தனின்
போதனைகளையும் ‘ஓஷோ’வின் உண்மைகளையும்
துணிந்து கலந்து தன்னிஷ்டம் போல்
உளறுகிறான். அவனது உளறல்கள் தங்களின்
’ஜீவன் முக்தி’க்கான ஜீவனமாய்க்
கொண்டு செயல்படும் ஐந்தறிவு ஜென்மங்களாய்ப் பிறப்புற்றுப் போயினர் இவன் மூடப்
பக்தர்கள்.
நமது முன்னோர் காட்டிச் சென்ற இறைநெறித் தத்துவங்களையும்
சித்தாந்த மரபுகளையும் தேடத் தெரியாத முட்டாள்களும்
அவற்றில் நுனிப் புல் மேய்ந்தவர்களும்,
நொதிந்துபோன இச்சையில் சாய்ந்தவர்களும்,காமக் கற்பனைகளில் வீழ்ந்தவர்களும்,
சில தேடல் ஞானம் கொண்டு
வாழ்ந்தவர்களும் சரண் அடைகின்ற இடம்தான்
இந்தப் போலிக் குருமார்களின் புண்பட்டுப்
புரையோடிப் போன பாதங்கள்.
”என்ன ஸ்வாமி,தங்கள் தூய
மலர்ப் பாதத்தில் புண்ணும் புழுக்களும்?” என்று கேட்கும் பக்தைகளிடமும்
பக்தர்களிடமும்,“அவை,
தன்னிடம் சரண் அடைந்த மகரிஷிகள்”
என்று நித்தி சொன்னால்கூட, அதில்
ஆனந்தப் பரவசம் அடைந்து ’ஆகா,தங்கள் பாக்கியமே பாக்கியம்’
என்று பஜனை பாடும் அளவுக்கு
அவர்களை ஆயிரக் கணக்கில் ஆக்கிக்
கொண்டவன்தான் இவன்.
உலகிலேயே உன்னதமான இறை நெறி கொண்ட
தேசமும்,இத்தகைய இழிநெறி கொண்டவர்களையே
தங்களின் முக்திக்கு வழி காட்டும் குரு
என்று கொண்டாடும் மூடர்கள் மிகுந்த தேசமும் இதுதான்.
இந்த தேசத்தில் ’மத நம்பிக்கை என்பது
மக்களின் தனிப் பட்ட சுதந்திரம்’
அதில் சட்டம் நுழைய அனுமதி
இல்லை என்பது அடிப்படை உரிமை
என்பதால்.அதைப் பயன் படுத்திக்
கொண்டு,மக்களை ஏமாற்றும் சண்டாளர்கள்
பெருகி விட்டனர்.
இவர்களுக்கு மக்களின் மூடச் சித்தாந்தங்களே பெரும்
மூலதனம்.
முதல் இல்லாமல் மூளைச் சலவை செய்து
அவர்களைத் தங்கள் அடிமைகள் ஆக்கிக்
கொண்டு அரச வாழ்க்கை நடத்தும்
சாமியார்களை இந்த நாடு கண்டு
வருகிறது.
ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் கிரிமினல்
குற்றங்களை
விளக்கவும் விளங்கிக் கொள்ளவும் சட்டத்தினால் முடியாது’ என்பதாலும் ‘மக்களின் மத நம்பிக்கை என்பது
தனி நபர் சுதந்திரத்தின் சூக்குமச்
சொத்து’ என்பதாலும்தான் நித்தியைப் போன்ற நிஜப் போலிகள்
நிமிர்ந்து நின்று இங்கே கடை
விரிக்க முடிகின்றது.
நித்திக்குக் கிடைத்துள்ள இத்தகைய சட்டத்தின் குருட்டுப்
பார்வையின் துணையால், அவன் தனது அழுக்குப் புண்களின்
காய்ந்துபோன தோல்களைக் கஷாயம் ஆக்கித் தன் மூடப் பக்தர்,
பக்தைகளுக்கு ‘அமுதநீர்’ என்று தருகிறான்.
மூடப் பக்தர்களோ அதைத் தங்கள் ’ஜீவன்
முக்தியின் தாகம் போக்கும் தத்துவ
நீரென’க் குடித்து ஆனந்த நடனம் புரிகின்றார்கள்.
அந்த ஆனந்தத்துக்குப் “பேரானந்த நிலை’ என்று
சொல்லிச் சிரிக்கின்றான் இந்தப் பித்தன் நித்தி.
அதையே கடவுளின் ‘மந்தகாசச் சிரிப்பு’ என்று புதிய அகராதி
எழுதிப் பூரிக்கின்றார்கள் நித்தியின் ’அந்த’ அழுக்கு நீரை
பருகிய பக்தப் புழுக்கள்.
என்னே கொடுமை?
நண்பர்களே,
இந்த நித்தியின் புண் நிறைந்த பாதத்தில்
நித்தம் உழலும் புழுக்கள் யார்? அவர்கள் எத்தகையவர்கள்? அவர்களின் ஏட்டைத் திருப்பிப் பாருங்கள்; தெளிவாகப் புரியும்:
கட்டிய கணவனிடம் கருத்து வேறுபாடு; கரம்
பிடித்த மனைவியிடம் சுகம் காணாமை; குறுக்கு
வழியில் பெற்ற செல்வநிலை; பாவங்களில்
தேடிய சொத்து; பலரை ஏமாற்றிப்
பெற்ற அந்தஸ்து;பதவி; பெற்றோரைத் தவிக்க
வீட்டுப் பிற உறவுகளில் பெற்ற
குடும்ப வாழ்வு;வீட்டுக்கு அடங்காமல்
வெளியில் திரிந்து பெற்ற விரக்தி; போலி
இறைக் கொள்கையில் பெற்ற பக்தி; செய்த
பாவங்களால் பெற்ற நோய்,உடன்
பிறந்தாருக்கு உரிய பங்கைத் தராது
நேர்ந்த வம்பு வழக்குகளில் வழுக்கி
விழும் நிலை;குடும்பச் சண்டை;குழப்பங்கள்…….
இவற்றில் சிக்கியவர்கள்தானே இவனுடைய பக்தர்கள்?
அத்தகையவர்கள் ஆனந்த நடனம் புரியும்
இடம் பிடதி ஆசிரமம் என்றாகி,அதில் ‘ஜீவன் முக்தி’
எப்படியெல்லாம் விலை கூறப்படுகிறது பார்த்தீர்களா?
நித்தியின் இந்தப் பாவத் திருவிளையாடல்களுக்கும்
காமக் களியாட்டங்களுக்கும் சேர்ந்துள்ள பணமும் தங்கமும் எங்கிருந்து
வந்தது? என்பதை ஆராய்ந்தால் அதில்
ஆன்மீக விரோதச் செயல்களும் தேசவிரோதச்
சித்தாந்தங்களும் தெய்வீகத்தின் பெயரால் செய்த திருட்டுத்
தனங்களுமே பல்லிளித்து நிற்கும், இந்தப் பரதேசி நித்தியைப்
போலவே.
கேட்டால் ‘தான் நடத்தி வரும்
தொழில் நிறுவனத்தின் மூலம்’ என்கிறான்.
என்ன தொழில் என்பது இப்போது
புரிகின்றதா?
மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியின்
பிரசித்தி பெற்ற தொழிலின் மேம்பட்ட
தொழில் நுட்பம் இங்கே சித்தாந்தம்
ஆக்கப்பட்டு,அதன் வியாபாரம் இந்தப்
பிடதியில் அபாரமாக நடந்து வந்திருக்கின்றது’
என்பதை இப்போது உலகம் அறிந்திருக்கிறது.
இவ்விடத்தில்தான் இந்திய சமுதாயத்தின் இறையாண்மை
எச்சில் ஆக்கப் பட்டுக் காறி
உமிழப்பட்டிருக்கிறது.
இதைத்தான் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ஜூனியர் விகடன்.
ஆனால்-
‘ஜீவன் முக்தி தரும் செய்வினைகள் ’என்று இவன் சொல்லிக் கொண்டு பிடதி ஆசிரமத்தில்,பெண்களைச் சீரழித்து எப்படியெல்லாம் பிய்த்துப் பெண்டாளுகிறான் இந்தச் சண்டாளன் என்பதை அதில் சிக்குண்டு சீரழிந்த பெண்ணே மன உறுதியுடன் உண்மைகளைச் சொன்ன பிறகும், இங்குள்ள மகளிர் சங்கங்கள் மவுனம் காக்கின்றன.
‘ஜீவன் முக்தி தரும் செய்வினைகள் ’என்று இவன் சொல்லிக் கொண்டு பிடதி ஆசிரமத்தில்,பெண்களைச் சீரழித்து எப்படியெல்லாம் பிய்த்துப் பெண்டாளுகிறான் இந்தச் சண்டாளன் என்பதை அதில் சிக்குண்டு சீரழிந்த பெண்ணே மன உறுதியுடன் உண்மைகளைச் சொன்ன பிறகும், இங்குள்ள மகளிர் சங்கங்கள் மவுனம் காக்கின்றன.
மாதவம் செய்த மங்கையர்களின் மகுடமாக
இன்று தமிழகத்தின் தலைமைப் பதவியில் வீற்றிருக்கும்
மேடம் ஜெ அவர்களின் அரசு
தன் இரும்புக்
கரத்தைத் தொலைத்துவிட்டுக் கரும்புக் கரத்தைக் காட்டி நிற்கிறது.
நண்பர்களே,
அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ.வின்
காம நடத்தைக்கு,அந்தப் பகுதி மக்கள்
வெகுண்டெழுந்து கொடுத்த ‘வெகுமானம்’ பற்றி நினைத்தால், இந்தக்
காமக் கொடூர வியாபாரி நித்திக்கும்
அவனைக் கடவுள் என்றே கொண்டாடும்
முட்டாள்களுக்கும் அவனுடைய அடியாட்களுக்கும் ஒருநாள் மக்கள் சக்தி நடத்தப்
போகும் மண்டகப்படி எப்படி இருக்கும்?
எண்ணிப் பார்க்கின்றேன்.
நித்தியும் அவனுடைய அடிப்பொடி அருணகிரியும்
சட்டத்துக்கு அப்பாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே.
அதை இறைவன் அளிப்பான் என்பதில்
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன்
நான்.
இறைவன் தீர்ப்பு நாளைத் தடுக்கவோ, தள்ளி வைக்கவோ இங்கே எந்தச் சக்தியாலும் ‘வாய்தா‘க் கேட்டு வழக்காட முடியாது.
இவண்-
கிருஷ்ணன்பாலா
2.7.2012
இடம்: அன்னூர்த் தோட்டம்
3 comments:
ஐயா அவர்களுக்கு,
உங்கள் தமிழ் நடைக்கும், வார்த்தைக் கோர்வைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!! நல்ல விஷயத்திற்காக பயன்படவேண்டிய மொழி ஆற்றல், வல்லமை சில சிறுபிள்ளைத்தனமான விஷயங்களுக்கு பயன்படுத்தபடுகிறது என்றென்னும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இவளவு நேரச்செலவை நீங்கள் தமிழ் இலக்கியத்தின் மீதோ அல்லது வேத உபநிஷத்து மீதோ அல்லது இதிகாச புராணம் மீதோ காட்டி இருந்தால், நூறு பேர் படித்து இருக்க மாட்டார்கள் ஆனால் ஒருவனை பாதித்து இருக்கும். பரபரப்பான விஷயங்களை எழுத நீங்கள் வியாபார நோக்கத்துடனா செய்கிறீர்கள்?? அப்படி என்றால் உடனே என்னை உங்கள் மெயிலிங் லிஸ்ட் இல் இருந்து எடுத்து விடுங்கள். மேலும், தனி நபரை குறிப்பிடும் பொழுது 'நித்தி' மற்றும் 'அருணகிரி' என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், அது அவர்கள் மதிப்பை குறைத்ததை விட உங்கள் மத்திப்பை வெகுவாக குறைத்து விட்டது, எவரையும் மரியாதையுடன் விளிப்பதே தமிழர் பண்பாடு, அதை போற்றுவோம். உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் !! நன்றி!!
நண்பர்களே,
வணக்கம்.
நண்பர் திரு கண்ணன் கணேசன் அவர்களின் கருத்தூட்டம் பற்றி மகிழ்கிறேன்;வரவேற்கின்றேன்.
அவரைப் போன்றே இன்னும் சிலர் இவ்வாறு வருத்தப் படுவார்கள் என்பதையும் நான் உணர்கிறேன்..
நண்பர் திரு. WarrantBalaW என்ற நண்பரும் இதை முன்பே சுட்டிக் காட்டியிருந்தார்;நானும் அவருடைய உணர்வுகளை மதிப்பதாகவும் இனி.அவ்வாறு ஒருமையிற் கூறாமல் பண்புடன் குறிப்பிடுவதாகவும் சொல்லிருந்தேன்.
ஆனாலும் -
மதுரை ஆதீனம் பற்றி எழுதும்போது நித்தியையும் அருணகிரியையும் எவ்வளவுதான் முயன்றபோதும் எனது உணர்வுகள் அவர்களை ‘ஆர்’ விகுதியில் விளிப்பதை மறுக்கிறது என்பதே உண்மை. காரணம் அவர்கள் அஃறிணைப் பொருளை விடவும் கீழானவர்கள்.
தமிழ்ப் பண்பாடு என்பதே நமது சமய நெறிகளின் சத்தான விஷயங்களின் வித்துத்தான். அதன் வேருக்கே விஷமிட்டு விஷ வித்துக்களை அதே சமய நெறி என்ற பெயரால் விதைக்கத் தலைப்பட்டிருக்கின்ற விஷ ஜந்துக்கள் அவர்கள்.
அவர்களின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அவர்களைப் பற்றி விசனமற்றிருப்பதும்கூட நாம் நமது தலைமுறையை வேரறுக்கச் செய்யும் வினைக்குத் துணை விபரீதத்தை நாம் செய்து விடக் கூடாது.
பண்பாடு போற்றும் நண்பர்கள் யாரும் எனது சின்ம் நிறைந்த சில பெயரிடு குறிகளை ஒரு பண்பாட்டுக்குரிய பொருளாய்ப் பார்த்து குறை க்காணக் கூடாது.
நமது பண்பாட்டின் அடித்தளத்தைவலிமையாக்கவே எனது எழுத்துக்கள்
அதன் பகைவரிடத்தில் போரிடும் நிலையில் போர்க்களத்தில் நின்று எதிர்ப்பதைப் போல் எழுத நேர்கிறது.
எழுத்து எனும் கூரிய வாளெடுத்துப் போரிடும் பொழுது, வாளைச் சுழற்றும் முறையில் அவ்வீரனிடம் யாரும் முறையிடவோ,குறை சொல்லவோ கூடாது.
எதிரியை வீழ்த்துவதே நமது இலக்கு.
மதுரை ஆதீன விஷயத்தில் எனது எழுத்துக்கள் என்னுடையதல்ல;அது திருஞான சம்பந்தர் தந்திருக்கும் எழுத்ததிகாரம் என நம்புகிறேன்.
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
3.7.2012
சைவசமய மாண்பினை, தொன்மையான மதுரை ஆதின மரபினை சீர்குலைத்த கயவர்களுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கிறது?? ஐயா, தங்களுடைய கூர்மையான சொற்கள் நித்தி மற்றும் அருணகிரி முதுகில் விழும் சாட்டையடிகளாக அமைந்துள்ளது. தெய்வ தண்டனையில் இருந்து இவ்விரு துரோகிகளும் ஒரு காலும் தப்ப இயலாது. மிக்க நன்றி, ஆரூரன்
Post a Comment